search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "action arrest"

    • தஞ்சை மாவட்டத்தில் உள்ள 54 ரவுடிகளை கைது செய்தனர்.
    • குற்ற செயல்களின்படி 43 பேர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

    தஞ்சாவூர்:

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு எவ்வித அசம்பாவித சம்பவமும் நடைபெறாமல் தடுக்க ரவுடிகளை போலீசார் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.

    திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி.கார்த்திகேயன், தஞ்சை சரக டி.ஐ.ஜி.ஜெயச்சந்திரன் ஆகியோர் தஞ்சை மாவட்டத்தில் உள்ள ரவுடிகளை கைது செய்ய உத்தரவிட்டனர்.

    அதன்பேரில் போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ்ராவத் மேற்பார்வையில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் ஜெயச்சந்திரன், முத்தமிழ் செல்வன் தலைமையில் ரவுடிகளை கைது செய்யும் பணி தொடங்கியது.

    இதற்காக தனிப்படையும் அமைக்கப்பட்டது.

    இந்த தனிப்படை போலீசார் தற்போது வரை 54 ரவுடிகளை கைது செய்துள்ளனர்.

    அவர்களில் குற்ற செயல்களின்படி 43 பேர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

    11 பேர் மீது நன்னடத்தை பிணைப்பத்திரம் பெறப்பட்டும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    இந்த அதிரடி நடவ டிக்கை தீபாவளி வரை தொடரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

    • செக் மோசடி வழக்குகளில் சிக்கியும் தலை மறைவாக இருப்பவர்களை கைது செய்ய கோவை சரக ஐ.ஜி உத்தரவிட்டார்.
    • பல்வேறு வழக்குகளில் தலைமறைவாக இருப்பவர்களை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம் முழுவதும் கோர்ட் பிடி வாரண்டு பிறப்பித்தும், செக் மோசடி வழக்குகளில் சிக்கியும் தலை மறைவாக இருப்பவர்களை கைது செய்ய கோவை சரக ஐ.ஜி உத்தரவிட்டார்.

    இதை அடுத்து நாமக்கல் நகர போலீசார் டிஎஸ்பி சுரேஷ் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் சங்கரபாண்டியன் தலைமையிலான போலீசார், பல்வேறு வழக்குகளில் தலைமறைவாக இருப்பவர்களை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    நாமக்கல் நகர பகுதி யில் மட்டும் கோர்ட் பிடிவாரண்ட் பிறப்பித்தும் தலைமறைவாக இருந்த வர்கள் மற்றும் செக் மோசடி வழக்கில் தலைமறைவாக இருந்த வர்கள் என 15 நாட்களில் 32 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். தொடர்ந்து மேலும் தலை மறைவாக உள்ள நபர்களை பிடிக்க போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

    இதேபோல் நாமக்கல் புறநகர் பகுதியில் 50-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். 

    • கர்நாடகாவிலிருந்து வந்த ஹூண்டாய் காரை சோதனை செய்தனர்.
    • திண்டிவனம் செஞ்சி போன்ற பல்வேறு கடைகளுக்கு இவர்கள் சப்ளை செய்ய எடுத்து வந்தார்களா என போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

    விழுப்புரம்:

    பெங்களூரில் இருந்து குட்கா பொருட்கள் கடத்தி வருவதாக திண்டிவனம் ஏ.எஸ்.பி அபிஷேக் குப்தாவுக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து திண்டிவனம் சந்தைமேடு பகுதியில் இன்று காலை ரோசனை இன்ஸ்பெக்டர் பிரு ந்தா,தலைமை காவலர் வெற்றிவேல்,காவலர்கள் அறிவுமணி,தர்மா, போலீசார், வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது, கர்நாட காவிலிருந்து வந்த ஹூண்டாய் காரை சோதனை செய்தனர். அந்த காரில் 40 மூட்டையில் குட்கா பொருட்கள் இருந்தன. காரில் வந்த 3 பேரை பிடிப்பதற்கு முன்பு அவர்கள் தப்பி ஓடினர்.

    போலீசரும் அவர்களைபின் தொடர்ந்து சேற்றில் இறங்கி மடக்கிப் பிடித்து போலீசாரும் குட்கா கொள்ளையர்களும் சேற்றில் புரண்டு ஓடியதை பார்த்தவுடன் அங்கிருந்த பொதுமக்கள் இங்கு சினிமா சூட்டிங் நடக்கிறதோ அல்லது வேறுஏதேனும் சண்டையோ எனபொதுமக்கள் வேடிக்கை பார்த்தனர். அவர்களைப் பிடித்து போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரித்தபோது, அவர்கள் பெங்களூரை சேர்ந்த கிஷோர்,(வயது 29),சென்னை சவுகார்பேட்டையை சேர்ந்த கைலாஷ், ,செஞ்சி காந்தி நகரைச் சேர்ந்த சங்கரான ராம்,என்பதும், கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் இருந்து, திண்டிவனம்,செஞ்சி,பகுதிகளில்குட்காவை கடத்தி செல்வதும் தெரிந்தது. திண்டிவனம் செஞ்சி போன்ற பல்வேறு கடைகளுக்கு இவர்கள் சப்ளை செய்ய எடுத்து வந்தார்களா என போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர் மேலும் 3 பேரையும் கைது செய்த போலீசார், 3 லட்சம் மதிப்புள்ள குட்கா மற்றும் 25 லட்சம் மதிப்புள்ள கார் மற்றும் ேமாட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது..குட்கா கொள்ளையர்களை போலீசார் மடக்கி பிடித்த சம்பவம் பொது மக்களிடையே பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

    ×