search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "A person"

    • சென்னிமலையை அடுத்துள்ள முருங்கத்தொழுவு கிராமத்தில் உள்ள தோட்டத்தில் தேங்காய் போடுவதற்காக தென்னை மரத்தில் ஏறி உள்ளார்.
    • இது குறித்து சென்னிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சென்னிமலை:

    சென்னிமலையை அடுத்த வெள்ளோடு பகுதியைச் சேர்ந்தவர் சோமசுந்தரம் (36).

    இவர் சென்னிமலையை அடுத்துள்ள முருங்கத்தொழுவு கிராமத்தில் உள்ள தோட்டத்தில் தேங்காய் போடுவதற்காக தென்னை மரத்தில் ஏறி உள்ளார். அப்போது கால் தவறி மரத்திலிருந்து தடுமாறி கீழே விழுந்து விட்டார்.

    இதில் படுகாயமடைந்த அவரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று அவர் பரிதாபமாக இறந்து விட்டார்.

    இது குறித்து சென்னிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • மளிகை கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக ரகசிய தகவல் வந்தது.
    • கடையின் உரிமையாளரான ஈரோடு வில்லரசம்பட்டி பகுதியைச் சேர்ந்த சோமன் ஸ்டாச்ரக்(44) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு வீரப்பன் சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம் தலைமையான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது மளிகை கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக ரகசிய தகவல் வந்தது.

    அதன் பேரில் ஈரோடு தென்றல் நகரில் போலீசார் தீவிரமாக கண்காணித்தனர். அப்போது அங்கு உள்ள ஒரு மளிகை கடையில் போலீசார் சோதனை செய்தபோது அதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, பான்மசாலா என 12 கிலோ மதிப்பிலான புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரிவந்தது.

    இவற்றின் மதிப்பு ரூ.16 ஆயிரம் ஆகும். இதை அடுத்து புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து கடையின் உரிமையாளரான ஈரோடு வில்லரசம்பட்டி பகுதியைச் சேர்ந்த சோமன் ஸ்டாச்ரக்(44) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

    ×