search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Pariharam"

    • சிம்மம், கன்னி, கும்பம், மீனம் ஆகிய 4 ராசிக்காரர்கள் பரிகார வழிபாடுகள் செய்வது நல்லது.
    • திருமண முயற்சியில் இருப்பவர்களுக்கு திருமண யோகம் கைகூட பூஜை செய்யுங்கள்.

    ராகு மற்றும் கேது பெயர்ச்சி 2023-ம் ஆண்டு வாக்கிய பஞ்சாங்கத்தின்படி நாளை (8-ந் தேதி) நிகழ உள்ளது. திருக்கணித பஞ்சாங்கத்தின்படி அக்டோபர் 30-ந் தேதி நடக்க உள்ளது என ஜோதிடர்கள் குறிப்பிடுகின்றனர்.

    இந்த பெயர்ச்சியின் போது ராகு மீன ராசிக்கும், கேது கன்னி ராசிக்கும் பெயர்ச்சி ஆகின்றனர். திருக்கணித பஞ்சாங்கத்தின்படி 2025ம் ஆண்டு மே 18-ந் தேதி இரவு 7.35 மணி வரை இந்த கிரகங்கள் மேலே குறிப்பிட்டுள்ள ராசியில் சஞ்சரிக்கும். மற்ற கிரகங்களைப் போல் இல்லாமல் ராகுவும், கேதுவும் எப்போதும் பின்னோக்கி அதாவது வக்ர நிலையில் பயணிக்கக்கூடியவை. இவை சர்ப்ப கிரகங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இந்த சர்ப்ப கிரகங்களின் இடையில் மற்ற கிரகங்கள் அமைந்துவிட்டால் அதனை கால சர்ப்ப தோஷம் அல்லது யோகம் என்பார்கள். நாளை பிற்பகல் 3 மணி 36 நிமிடத்துக்கு ராகு, தான் இருந்த மேஷ ராசியில் இருந்து, மீன ராசிக்கு வருகின்றார்.

    கேது, தான் இருந்த துலாம் ராசியில் இருந்து கால புருஷனுக்கு ஆறாம் ராசியான கன்னிராசிக்கு வருகிறார். ராகுவுக்கு இடம் தந்து குரு வலிமையுடன் இருப்பதால் ராகுவின் பாதிப்பு குறையும்.

    அதுபோல் ராகுவின் எதிர் ராசியான கன்னி ராசியும் புதனின் சுபத்தன்மையை பொறுத்து கெடுபலன்களை குறைத்து கொள்ளும். இந்த ராகு-கேது பெயர்ச்சியை முன்னிட்டு நாளை சிறப்பு வழிபாடுகளும் சர்ப்ப சாந்தி பரிகாரங்களும் செய்து கொள்வது நல்லது. குறிப்பாக சிம்மம், கன்னி, கும்பம், மீனம் ஆகிய 4 ராசிக்காரர்கள் பரிகார வழிபாடுகள் செய்வது நல்லது. மற்ற ராசிக்காரர்கள் சாதாரண பூஜைகள் செய்யலாம்.

    ராகு-கேது பெயர்ச்சி பாதிப்புகளில் இருந்து தற்காத்துக் கொள்ள அம்மன் கோவில்களில் உள்ள நாகப் பிரதிஷ்டைகளை வணங்கி வாருங்கள். அதுவே பரிகாரத்துக்கு போதுமானது. வேறு எந்த சிறப்பு பரிகார பூஜைகளும் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. பெரும்பாலும் இந்த முறை ராகு-கேது தோஷம் பெரும் பாதிப்பு செய்வதில்லை. மாறாக தன்னம்பிக்கை துணிச்சலை வளர்க்கும். எனவே கவலை தேவையில்லை.

    சிம்மம்

    இதுவரை ராகு ராசிக்கு 9ம் இடத்திலும், கேது 3ம் இடத்திலும் சஞ்சரித்து வந்தனர். தற்போது இந்த பெயர்ச்சி மூலம் ராகு 8-ம் இடத்திலும், கேது 2-ம் இடத்திலும் அமர்கின்றனர். இதன் காரணமாக பொதுவாக உங்களுக்கு கடன் தொல்லை அதிகரிக்கும். ஆரோக்கியத்தில் பிரச்சினை ஏற்படலாம். அஷ்டம ஸ்தானத்தில் ராகு அமர்வதோடு, ராசிக்கு 2ல் தன ஸ்தானத்தில் கேது இருப்பதால் உங்களின் வருவாய் குறையும். அதனால் வருமானம் குறைவதற்கும் வாய்ப்பு உண்டு. தேவையற்ற சிந்தனைகள், மன குழப்பங்கள் வரும். ஆனால் பனி போல அவை மறைந்து விடும். எனவே எந்த விஷயத்தையும், செலவையும் திட்டமிட்டு செய்வது நல்லது. குறிப்பாக உடல் நலனில் அக்கறை செலுத்துங்கள்.

    கன்னி

    இந்த ராகு கேது பெயர்ச்சியினால் கன்னி ராசியிலேயே கேது பகவான் அமர்கிறார். 7-ம் இடத்தில் ராகு அமர உள்ளார்.

    லக்கினத்தில் கேதுவும், 7-ல் ராகு அமர்வதால் திருமண வாழ்க்கையில் சிறு, சிறு சலசலப்பு வரலாம். திருமண முயற்சியில் இருப்பவர்களுக்கு திருமண யோகம் கைகூட பூஜை செய்யுங்கள். மேலும் கன்னி ராசியினரின் வளர்ச்சி தடைப்படுவதற்கான வாய்ப்புகள் உண்டு. உங்கள் முன்னேற்றத்தை தடுக்க சிலர் கங்கனம் கட்டிக் கொண்டு வருவார்கள். கவனமாக இருங்கள். நீங்கள் எடுக்கும் முடிவு, செயல்களில் உங்களின் சிந்தனை நிலையாக இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள்.

    கும்பம்

    கும்ப ராசிக்காரர்களுக்கு 2ம் இடத்தில் ராகுவும், 8ல் கேதுவும் இந்த பெயர்ச்சியின் போது அமையப் பெறுவார்கள்.

    இரண்டாம் இடத்தில் ராகு, 8ல் கேது அமர்வதால் உங்களின் குடும்ப வாழ்க்கையில் இன்பமும், துன்பமும் மாறி மாறி வரும். மேலும் தற்போது ஜென்ம சனி நடந்து கொண்டிருப்பதால் கூடுதல் கவனத்துடன் இருக்கவும். மேலும் குடும்ப விருத்தி அடைவதில் கவனம் தேவை.

    மீனம்

    மீன ராசியிலேயே ராகு வருவதும், கேது 7ம் இடத்தில் அமர்வதாலும் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய காலமாக இருக்கும். திருமண முயற்சியில் இருப்பவர்களுக்கு கால தாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. புத்திர தோஷம், சொத்து தகராறு போன்ற விஷயங்கள் வர வாய்ப்புள்ளதால் சற்று பொறுமையை கையாழுங்கள். எதிர்மறையான எண்ணங்களைத் தவிர்த்து, குடும்ப உறுப்பினர்களை அனுசரித்து நடப்பது அவசியம்.

    ராகு-கேது பெயர்ச்சி நல்ல இடங்களில் ஏற்பட்டாலும் சரி, கெட்ட இடங்களில் மாறினாலும் சரி. அதற்கு பயப்பட தேவையில்லை. குண்டலினி சக்தியை தன்னுள்கொண்டு ஜீவ ஜோதியான சித்தர்களின் ஜீவ சமாதிகளில் சென்று வழிபட்டால் போதும். ராகு-கேது பெயர்ச்சி பலனை உங்களுக்கு இனிய பெயர்ச்சியாக மாற்றுங்கள்.

    • கற்பூர ஆர்த்தி எடுக்க வேண்டும். இப்படிச் செய்தால் சனிக்கிரஹ தோஷம் நீங்கும்.
    • சண்முக பிரியா ராகத்தில் கேது கீர்த்தனைகளைப் பாடிப் பிரார்த்தனை செய்தால் கேதுக்கிரகதோஷம் நீங்கும்.

    நவக்கிரக தோஷ பரிகாரங்கள்

    1. சூரிய பகவானுக்கு ஞாயிற்றுக்கிழமைகளில் அபிஷேகம் செய்து சிவப்பு வஸ்த்திரம் சிவப்புமணி செந்தாமரையால் அலங்காரம் செய்து, சூரிய மந்திரங்களை ஓதி ,யாகத்தீயை எழுப்பி கோதுமை சர்க்கரைப் பொங்கல் படைத்து தீபாராதனை செய்து அர்ச்சனை செய்து தூப தீப நைவேத்தியம் கொடுத்து, சவுராட்டிர ராகத்தில் சூரிய கீர்த்தனைகளைப் பாடி பிராத்தனை செய்து கொண்டு கற்பூர ஆரத்தி எடுக்க வேண்டும். இப்படிச் செய்தால் சூரியக் கிரகதோஷம் நீங்கும்.

    2. சந்திர பகவானுக்குத் திங்கட்கிழமையில் அபிஷேகம் செய்வித்து வெள்ளை வஸ்த்திரம் முத்துமாலை வெள்ளலரி என்பவற்றால் அலங்காரம் செய்து சந்திர மந்திரங்களை ஓதி எருக்கஞ்சமித்தினால் யாகத் தீயை எழுப்பி பச்சரிசி, பாலண்மை, தயிரன்னம் என்பவற்றால் ஆகுதி பண்ணித் தீபாராதனை செய்து, அர்ச்சனை செய்து, தூப தீய நைவேத்தியம் கொடுத்து, அசாவேரி ராகத்தில் சந்திர கீர்த்தனைகளைப் பாடிப் பிரார்த்தனை செய்து கொண்டு கற்பூர ஆரத்தி எடுக்க வேண்டும். இப்படிச் செய்தால் சந்திரக் கிரக தோஷம் நீங்கும்.

    3. அங்காரக பகவானுக்கு செவ்வாய்கிழமைகளில் அபிஷேகம் செய்துவித்து சிவப்பு வஸ்திரம் பவழம் சிவப்பு அலரி என்பவற்றால் அலங்காரம் செய்து அங்காரக மந்திரங்களை ஓதி கருங்காலி சமித்தினால் யாகத்தீயை எழுப்பித்த வரம் பருப்புப் பொடி அன்னத்தை ஆகுதி பண்ணித் தீபாராதனை செய்து அர்ச்சனை செய்து தூப தீப நைவேத்தியம் கொடுத்து, சுருட்டி ராகத்தில் அங்காரகக் கீர்த்தனைகளைப் பாடிப் பிரார்த்தனை செய்து கொண்டு கற்பூர ஆரத்தி எடுக்க வேண்டும். இப்படிச் செய்தால் அங்காரக கிரக தோஷம் நீங்கும்.

    4. புதபகவானுக்குப் புதன்கிழமையில் அபிஷேகம் செய்வித்துப் பச்சை வஸ்திரம் மரகமணி வெண்தாமரை என்பவற்றால் அலங்காரம் செய்து, புதன் மந்திரங்களை ஓதி நாயுருதி சமித்தால் யாகத் தீயை எழுப்பிப் பாசிப்பயத்தம் பருப்புப்பொடி அன்னத்தை ஆகுதி பண்ணித் தீபாராதனை செய்து அர்ச்சனை செய்து தூப தீய நைவேத்தியம் கொடுத்து, நாட்டக்குறிச்சி ராகத்தில் புதன் கீர்த்தனைகளைப் பாடிப் பிரார்த்தனை செய்து கொண்டு கற்பூர ஆரத்தி எடுக்க வேண்டும். இப்படிச் செய்தால் புதக்கிரகதோஷம் நீங்கும்.

    5. குருபகவானுக்கு வியாழக்கிழமையில் அபிஷேகம் செய்வித்து மஞ்சள் நிற வஸ்திரம் புஷ்பராகமணி, வெண்முல்லை என்பவற்றால் அலங்காரம் செய்து குரு மந்திரங்களை ஓதி அரசஞ்சமித்தினால் யாகத்தீயை எழுப்பி கொத்து கடலைப் பொடி அன்னம் எலுமிச்சை பழ அன்னம் என்பவற்றால் ஆகுதி பண்ணித் தீபாராதனை செய்து அர்ச்சனை செய்து தூப தீய நைவேத்தியம் கொடுத்து அடாணாராகத்தில் குரு கீர்த்தனைகளைப் பாடிப் பிரார்த்தனை செய்து கொண்டு கற்பூர ஆரத்தி எடுக்க வேண்டும். இப்படிச் செய்தால் குருக்கிரக தோஷம் நீங்கும்.

    6. சுக்கிர பகவானுக்கு வெள்ளிக்கிழமையில் அபிஷேகம் செய்வித்து, வெள்ளை வஸ்த்திரம் வைரக்கல் வெண்தாமரை மலர் என்பவற்றால் அலங்காரம் செய்து சுக்கிர மந்திரங்களை ஓதி அத்தி சமித்தினால் யாகத்தீயை எழுப்பி மொச்சைப் பொடியன்னம் தயிரன்னம் என்பவற்றால் ஆகுதி பண்ணித் தீபாராதனை செய்து அர்ச்சனை செய்து தூப தீப நைவேத்தியம் கொடுத்து, பரசுராகத்தில் சுக்ர கீர்த்தனைகளைப் பாடிப் பிரார்த்தனை செய்து கொண்டு கற்பூர ஆரத்தி எடுக்க வேண்டும். இப்படிச் செய்தால் சுக்கிரக் கிரகதோஷம் நீங்கும்.

    7. சனிபகவானுக்கு சனிக்கிழமையில் அபிஷேகம் செய்வித்து, கருப்பு வஸ்த்திரம், நீலக்கல் நீலோற்பலம் (கருங்குவளை) என்பவற்றால் அலங்காரம் செய்து, சனிபவகானின் மந்திரங்களை ஓதி வன்னி சமித்தினால் யாகத்தீயை எழுப்பி, எள்ளுத்தானியம், எள்ளுப்பொடி அன்னம் என்பனவற்றால் ஆகுதி பண்ணித் தீபாராதனை செய்து நல்ல எண்ணைத் தீபம் ஏற்றி, அர்ச்சனை செய்து தூப தீப நைவேத்தியம் கொடுத்து, யதுகுல காம்போதி ராகத்தில் சனிபகவான் கீர்த்தனைகளைப் பாடிப் பிரார்த்தனை செய்து கொண்டு கற்பூர ஆர்த்தி எடுக்க வேண்டும். இப்படிச் செய்தால் சனிக்கிரஹ தோஷம் நீங்கும்.

    8. ராகு பகவானுக்கு ஏதாவதொரு கிழமையில் அபிஷேகம் செய்வித்து, கருப்பு வஸ்திரம் கோமேதக மணி நீலமந்தாரை இலுப்பைப்பூ என்பவற்றால் அலங்காரம் செய்து ராகு மந்திரங்களை ஓதி அறுகம் புல்லால் யாகத்தீயை எழுப்பி உளுந்து தானியம் உளுத்தம் பருப்புப்பொடி அன்னம் என்பவற்றால் ஆகுதி பண்ணித் தீபாராதனை செய்து அர்ச்சனை செய்து தூபதீப நைவேத்தியம் கொடுத்து, ராகப்பிரியா ராகத்தில் கீர்த்தனைகளைப் பாடி பிரார்த்தனை செய்து கொண்டு கற்பூர ஆரத்தி எடுக்க வேண்டும். இப்படிச் செய்தால் ராகுக் கிரகதோஷம் நீங்கும்.

    9. கேது பகவானுக்கு ஏதாவதொரு கிழமையில் செய்வித்து, பலவர்ண ஆடை வைடூர்ய மணி செவ்வல்லிமலர் என்பவற்றால் அலங்காரம் செய்து கேது மந்திரங்களை ஓதித் தருப்பையினால் யாகத்தீயை எழுப்பிப் கொள்ளுதானியய் கொள்ளுப்பொடி அன்னம் என்பவற்றால் ஆகுதி பண்ணித் தீபாராதனை செய்து அர்ச்சனை செய்து தூப தீப நைவேத்தியம் கொடுத்துச் சண்முக பிரியா ராகத்தில் கேது கீர்த்தனைகளைப் பாடிப் பிரார்த்தனை செய்து கொண்டு கற்பூர ஆரத்தி எடுக்க வேண்டும். இப்படிச் செய்தால் கேதுக்கிரகதோஷம் நீங்கும். 

    • ஆடி மாதம் அம்மனை வழிபட உகந்த மாதமாகும்.
    • கோனியம்மனுக்கு அபிஷேகம் செய்தால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

    கோனியம்மனுக்கு அபிஷேகம் செய்தால் என்னென்ன பலன்கள் கிடைக்கும். அதன் விவரம் வருமாறு:-

    சந்தன தைலம்- சுகம் தரும்

    திருமஞ்சனம்- சம்பத்து நல்கும்

    பாசிப்பயறு மாவு- மகிழ்ச்சியாய் வாழலாம்

    அரிசி மாவு - உயர்பதவி அடையலாம்

    நெல்லிப்பொடி - சாந்தி உண்டாகும்

    வில்வப்பொடி - யோகம் அளிக்கும்

    பஞ்சாமிர்தம் - கல்வி அறிவு பெருகும்

    பால் - மனக்கவலை தீரும்

    தயிர் - மனநோய் அகலும்

    தண்ணீர்- சாந்தி உண்டாகும்

    நெய் - தொழில் சிறக்கும்

    தேன் - குரல் இனிமை பெறும்

    வெல்லம் - துக்க நிவர்த்தி அளிக்கும்

    கரும்புச்சாறு - மன அமைதிபெறும்

    இளநீர் - பக்தி பெருகும்

    எலுமிச்சம்பழம் - விதியை வெல்லலாம்

    சாதம் - சகல பாக்கியம் உண்டாகும்

    திருநீறு - துன்பம் நீங்கும்

    சந்தனம் - நிலம் வீடு வாங்கலாம்

    நல்லெண்ணெய் - ஐயம் நீங்கும்

    பழவகை - திருவருள் பெறலாம்

    வாழைப்பழம் - வறுமை ஒழியும்

    கரும்புச் சர்க்கரை - குழந்தைபேறு கிட்டும்

    எள் - சனி பயம் நீங்கும்

    மாம்பழம்- வெற்றியை கொடுக்கும்

    பூ மாலை- உடல் பிணி தீரும்

    பரிவட்டம்- பெருஞ்செல்வம் பெருகும்

    பச்சரிசி- தீராக்கடன் தீரும்

    மஞ்சள் தூள் - விபத்துகள் தவிர்க்கலாம்

    தேங்காய்- பொன்பொருள் சேரும்

    பேரிச்சம்பழம்- கடல் கடந்து செல்லலாம்

    கல்கண்டு- வாகனம் வாங்கலாம்.

    முந்திரி- பிரிந்தவர் ஒன்று சேரலாம்

    ஏலம்- தீமைகள் நீங்கும்

    உலர் திராட்சை- சங்கடங்கள் தீரும்

    எள்ளுமாவு- மரணபயம் நீங்கும்

    எள்ளுருண்டை- அரசு வேலை பெறலாம்

    எள்ளு சாதம் - பகை நீங்கும்

    பன்னீர் - நன்னடத்தை உண்டாகும்

    கும்ப ஜலம்- சாந்தி உண்டாகும்

    • வாழ்க்கையில் ஏற்படக்கூடிய சோதனைகளை வென்றால் தான் சாதனை படைக்க முடியும்.
    • நிச்சயம் குழந்தை பாக்கியம் கிட்டும் என்பதும் நம்பிக்கை.

    இந்தப் பூவை சிவபெருமானுக்கும், முருகனுக்கும், வைத்து வழிபட்டு வந்தால், தடைபட்ட காரியமானது 11 வாரங்களில் வெற்றி அடையும்.

    எந்த ஒரு காரியத்தைத் தொடங்கினாலும், அந்த காரியமானது எடுத்த முதல் மார்க்கத்திலேயே வெற்றி அடைந்துவிட வேண்டும் என்று சிலர் நினைப்பார்கள். ஆனால் எந்த ஒரு செயல்பாடும் தொடங்கிய மார்க்கத்திலேயே வெற்றி அடைந்து விடும் என்ற எண்ணத்தை நமக்குள் வளர வைக்கக்கூடாது .

    தோல்வி என்ற கசப்பை சுவைக்கும் போது தான், வெற்றி என்ற இனிப்பு நிலைத்திருக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை .

    இறைவன் சில சமயங்களில் நம்முடைய மனவலிமையை சோதித்துப் பார்ப்பதற்காக கூட நமக்கு தோல்வியை தரலாம். தோல்வியைக் கண்டு அஞ்சாமல் எவன் இருக்கிறானோ, அவனுக்கு தான் வெற்றியை தர வேண்டும் என்று கூட அந்த இறைவன் நினைத்திருக்கலாம். ஆகவே, தோல்வியை கண்டு பயப்படாமல் எவரொருவர், வெற்றிப் பாதையை நோக்கிச் சென்று கொண்டே இருக்கின்றாரோ அவர் தான் வாழ்க்கையில் ஜெயித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    நமக்கு வாழ்க்கையில் ஏற்படக்கூடிய சோதனைகளை வென்றால் தான் சாதனை படைக்க முடியும்.

    உங்களுக்கு தொழிலில் ஏற்பட்ட கஷ்டமாக இருந்தாலும், நஷ்டமாக இருந்தாலும் அல்லது வேறு வகையில் உங்கள் வாழ்க்கையை முன்னேற விடாமல் இருக்கும் எந்த தடையாக இருந்தாலும் அதனை வெற்றியடையச் செய்ய எந்த பூவை சிவபெருமானுக்கும் சூட்டினால் வெற்றி அடையலாம் என்பதை பற்றியும், நீண்ட நாட்களாக குழந்தை இல்லாமல் இருப்பவர்கள் குறிப்பிட்ட இந்த ஒரு பூவை முருகப்பெருமானுக்கு சாத்தினால் நல்ல பலனை அடையலாம் என்பதைப் பற்றியும் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

    எல்லோருக்கும் வெற்றியை தேடித்தரும் அந்த பூ செண்பகப்பூ. சிவபெருமானுக்கு எந்த தினத்தில் வேண்டும் என்றாலும் இந்தப் பூவை வைத்து பூஜை செய்யலாம். அது நமக்கு நல்ல பலனை தேடித்தரும். சிவபெருமானுக்கு மிகவும் உகந்த இந்த செண்பகப்பூவால் அர்ச்சனை செய்து மனதார உங்களது வேண்டுதல்களை வைத்துப் பாருங்கள். 11 வாரங்களில் அதற்கான பலனை நீங்கள் நிச்சயம் அடைவீர்கள்.

    இதைப்போல் குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் இந்த பூவினை முருகப்பெருமானுக்கு 11 வாரங்கள் தொடர்ந்து அர்ச்சனை செய்து, குழந்தை வரம் வேண்டி பிரார்த்தனை செய்து கொண்டால், நிச்சயம் குழந்தை பாக்கியம் கிட்டும் என்பதும் நம்பிக்கை.

    குறிப்பாக வெள்ளிக்கிழமைகளில் முருகனுக்கு இந்தப்பூவை அர்ச்சனை செய்வது மிகவும் சிறப்பு.

    குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் மட்டும்தான் இந்த செண்பகப் பூவை, முருகப்பெருமானுக்கு சாத்தி வழிபட வேண்டும் என்ற எந்த கட்டாயமும் இல்லை. உங்கள் மனதில் இருக்கும் எந்த வேண்டுதல்களை வைத்து வேண்டினாலும் அதற்கான பலன் கட்டாயம் கிட்டும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை .

    எப்படிப்பட்ட தீர்க்கமுடியாத துன்பங்களையும் தீர்த்து வைக்கும் இந்தப் பூவை வெள்ளிக்கிழமை அன்று முருகப்பெருமானுக்கு சூட்டி வேண்டினால் விரைவாகவே உங்களது கஷ்டம் தீர்ந்து விடும் என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

    இந்தப் செண்பகப் பூ வானது கடைகளில் கிடைப்பது என்பது கொஞ்சம் கடினமான விஷயம்தான். இருப்பினும் உங்களுக்கு தெரிந்த பூ கடைக்காரர்களிடம் சொல்லி வைத்தால் கட்டாயம் கொண்டு வந்து தருவார்கள்.

    • கோனியம்மனுக்கு நெய்தீபம் ஏற்றி வழிபடுவது சிறப்பு.
    • எத்தனை விளக்குகளை ஏற்றி வழிபட்டால் என்னென்ன பலன்கள் கிட்டும் என்று பார்க்கலாம்.

    கோனியம்மனுக்கு நெய்தீபம் ஏற்றி வழிபடுவது சிறப்பு. அதில் எத்தனை விளக்குகளை ஏற்றி வழிபட்டால் என்னென்ன பலன்கள் கிட்டும் என்பது பற்றி இப்போது பார்க்கலாம்:

    2 விளக்கு- குடும்பம் மேன்மைபெறும்.

    3 விளக்கு- எடுத்த காரியத்தில் வெற்றி கிட்டும்.

    4 விளக்கு- நற்கல்வி, உடல் ஆரோக்கியம் கிட்டும்.

    5 விளக்கு- விநாயகர் அருள் கிடைக்கும்.

    6 விளக்கு- நோய்கள் குணமாகும்.

    7 விளக்கு- திருமணத்தடை நீங்கும்.

    8 விளக்கு- மாங்கல்ய பலம் கூடும்.

    9 விளக்கு- நவக்கிரக பிணிகள் நொடியில் அகலும்.

    10 விளக்கு- தொழில் மேன்மை பெறும். கடன் தொல்லைகள் அகலும்.

    11 விளக்கு- செய்தொழிலில் லாபம் கிட்டும். போட்டியில் வெற்றி வசப்படும்.

    12 விளக்கு- ஜென்மராசியில் உள்ள தோஷங்கள் நீங்கும்.

    13 விளக்கு- பில்லிசூனியபாவம் விலகும்.

    14 விளக்கு- குலதெய்வபலம், சந்தான பலன் கிடைக்கும்.

    15 விளக்கு- வழக்கில் வெற்றி வசப்படும்.

    16 விளக்கு- வாழ்வில் 16 செல்வங்களும் கிட்டும்.

    17 விளக்கு- வாகனம், வண்டி யோகம் கிடைக்கும்.

    27 விளக்கு- நட்சத்திர தோஷம் நீங்கும்.

    48 விளக்கு- தொழில் வளரும், பயம் நீங்கும்.

    108 விளக்கு- நினைத்த காரியம் நடக்கும்.

    508 விளக்கு- தீராத திருமண தோஷங்கள் அகலும்.

    1008 விளக்கு- சகல சவுபாக்கியங்களும் கிட்டும்.

    • சிலர் மண்ணால் பொம்மை செய்தும் வைப்பர்.
    • துர்க்கை வழிபாடு என்பது எல்லா தலங்களிலுமே நடைபெற்று வருகின்றது.

    துர்க்கை வழிபாடு என்பது தற்பொழுது எல்லா தலங்களிலுமே நடைபெற்று வருகின்றது. ஆனால் கோனியம்மன் கோவிலில் சிறப்பாக நடைபெறுகிறது. செவ்வாய், வெள்ளிக்கிழமை நாட்களில் ராகு காலத்தில் ஆதிகோனியம்மன் சன்னதிக்கு பக்கத்தில் உள்ள மேடையில் எலுமிச்சம் பழத்தில் விளக்கு வைத்து வழிபடுவர்.

    திருமண தடைகள், காரிய தடைகள், தொழிலில் நஷ்டம், உடல்நிலை சரியில்லாதவர்கள் தங்கள் நோய் தீர்க்க வேண்டியும் 48 வாரம், 18 வாரம், 9 வாரம் போன்ற கணக்குகள் வைத்து துர்க்கைக்கு செவ்வரளி மாலை கட்டிபோட்டு வழிபடுகின்றனர்.

    அவர்கள் நினைத்த வாரம் வரை வந்து விட்டால் இறுதி யில் அம்மனுக்கு அபிஷேகம் செய்தும், திருமண தடைகளுக்காக வேண்டியவர் அம்மனுக்கு பொட்டு மாங்கல்யம் செய்து அம்மன் கழுத்தில் அணிவித்து அதை காணிக்கையாக செலுத்துவர்.

    உடல்நிலை சரியில்லாத வர்கள் வெள்ளியாலேயோ அல்லது அதுபோன்ற வேறு உலோகத்தாலேயோ செய்யப்பட்ட கண்ணடக்கம், கை, கால் போன்றவை வாங்கி பூஜை செய்துபின் அதை காணிக்கையாக செலுத்துவர்.

    சிலர் மண்ணால் பொம்மை செய்தும் வைப்பர். காரியத்தடை ஏற்படுபவர்கள் பல தானங்களை செய்கின்றனர். இவ்வாறு செய்வதனால் அவர்களின் வேண்டுதல்கள் நிறைவேறுகின்றது என்று பக்தர்கள் கூறுகின்றனர்.

    இந்த வேண்டுதல் உள்ளூர் மக்கள் மட்டும் வேண்டுவது இல்லை. வெளியூர், வெளி மாநிலத்தை சேர்ந்தவர்கள் பம்பாய், கொல்கத்தா, டெல்லி போன்ற நகரங்களில் இருந்தும், கேரளா, ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் இருந்தும் வந்து வேண்டுதல் செய்கின்றனர். மேலும் அமெரிக்கா, ரஷ்யா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற வெளிநாடுகளிலும் கோனியம்மனுக்கு தீவிர பக்தர்கள் உண்டு. அவர்கள் வேண்டுதலுக்கு காணிக்கைகளை அஞ்சலில் அனுப்புவதும் உண்டு.

    • ராகு-கேதுவுக்கு பரிகார தலமாகவும் இந்தக் கோவில் விளங்குகிறது.
    • இங்குள்ள குளத்தில் 48 நாட்கள் நீராடினால் வியாதிகள் குணமாகும்

    புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் இருந்து சுமார் 5 கிலோமீட்டர் தொலைவில் பிரசித்தி பெற்ற திருமணஞ்சேரி சுகந்த பரிமளேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் சுயம்பு மூர்த்தியாக சுகந்த பரிமளேஸ்வரர் அருள்பாலிக்கிறார். அன்னை சக்தி இங்கு 'பெரியநாயகி' என்ற பெயருடன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

    திருமணஞ்சேரி சுகந்த பரிமளேஸ்வரர்- பெரியநாயகி அம்பாளை மனமுருகி வேண்டினால், திருமண தடை நீங்கும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது.

    இதேபோல் நாக தோஷம், புத்திர தோஷம் மற்றும் ராகு-கேதுவுக்கு பரிகார தலமாகவும் இந்தக் கோவில் விளங்குகிறது.

    தீராத வியாதி உள்ளவர்கள், இங்குள்ள குளத்தில் 48 நாட்கள் நீராடி, மண்டபத்தில் தங்கி சுவாமியையும்-அம்பாளையும் வழிபட்டால் வியாதிகள் குணமாகி பூரண நலமுடன் திரும்புவார்கள்.

    • திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ளது நார்த்தாம்பூண்டி என்ற ஊர்.
    • இது ஒரு திருமண தடைநீக்கும் திருத்தலமாக விளங்குகிறது.

    திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ளது நார்த்தாம்பூண்டி என்ற ஊர். இந்த திருத்தலத்தில் பிரம்மதேவன் வழிபட்ட திருவுந்தி பெருமாளும், கல்யாண வெங்கடேசப் பெருமாளும் கோவில் கொண்டுள்ளனர்.

    இங்கு பத்மாவதி தாயார், ஆண்டாள் நாச்சியார் ஆகியோருக்கும் தனித்தனி சன்னிதிகள் உள்ளன. இது ஒரு திருமண தடைநீக்கும் திருத்தலமாக விளங்குகிறது. இங்குள்ள கல்யாண வெங்கடேசப் பெருமாளுக்கு, மட்டைத் தேங்காய் வைத்து பக்தர்கள் வழிபடுகின்றனர்.

    கோவிலில் நீராடிவிட்டு ஈரத்துணியுடன் கல்யாண வெங்கடேசருக்கு மட்டை தேங்காய் வைத்து வழிபட்டு, கோவிலை 27 முறை வலம் வந்தால் மணவாழ்வு அடுத்த மாதமே அமையும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. வேண்டுதல் நிறைவேறியதும் தம்பதி சமேதராக இங்கு வந்து வழிபடுபவர்களின் எண்ணிக்கை இந்த பெருமாளின் பெருமையை பறைசாற்றுகிறது.

    திருவண்ணாமலையில் இருந்து வேலூர் செல்லும் சாலையில் சுமார் 18 கிலோமீட்டர் தூரத்தில் நாயுடுமங்கலம் என்ற ஊர் உள்ளது. இங்குள்ள கூட்டுரோட்டில் 5 கிலோமீட்டர் தூரம் சென்றால் நார்த்தாம்பூண்டியை அடையலாம்.

    • இத்தலம், பிதுர்தோஷ நிவர்த்தி தலம் ஆகும்.
    • மாங்கல்ய தோஷம், நாக தோஷம் நிவர்த்தியாகும் என்பது இத்தலத்து நம்பிக்கை.

    நாகை மாவட்டம் நாகூரில் பிரசித்தி பெற்ற ராகு-கேது நிவர்த்தி தலமான நாகநாத சாமி கோவில் உள்ளது. நாகராஜன் வழிபட்டு சாப விமோசனம் பெற்றதாக கூறப்படும் நாகூர் நாகநாத சாமி கோவில் காசிக்கு இணையானதாகவும், ராகு, கேது, காலசர்ப்ப தோஷ நிவர்த்தி தலமாகவும் உள்ளது.

    ராகு கால நேரத்தில் இத்தலத்து மூலவர் பெருமான் நாகநாத சாமியையும், நாகவல்லி தாயாரையும் வணங்கி, ராகு பகவானுக்கும் அவரது தேவியருக்கும் அபிஷேகம் செய்து வழிபட்டால் ராகு-கேது தோஷ நிவர்த்தியுடன், திருமணத் தடை விலகி குழந்தைப்பேறு கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை ஆகும். ராகுபகவானுக்கு நீல வஸ்திரம் சாற்றி வழிபடுவது சிறப்புக்குரியதாக கூறப்படுகிறது.

    காசிக்கு இணையானதாக குறிப்பிடப்படும் இத்தலம், பிதுர்தோஷ நிவர்த்தி தலம் ஆகும்.இங்குள்ள சந்திர புஷ்கரணியில் நீராடி, தர்ப்பணம் அளித்து, தானம் செய்தால் கயாவில் வழிபாடு செய்த பலனும், பிதுர்தோஷ நிவர்த்தியும் கிட்டும் என கூறப்படுகிறது. இங்கு கிருத்திகை நட்சத்திர தினத்தில் சாமி, அம்பாளுக்கு அபிஷேக ஆராதனைகள் மேற்கொண்டால் சர்வதோஷ நிவர்த்தி கிட்டும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

    நாகூர் நாகநாத சாமி கோவில் இறைவன் நாகநாதர், நாகராஜனால் பூஜிக்கப்பட்டவர் என்பதால் இத்தலம் ராகு, கேது மற்றும் கால சர்ப்ப தோஷ நிவர்த்தி தலமாக விளங்குகிறது. மேலும் இங்குள்ள புன்னாகவனத்தின் கீழே நாகலோகம் அமைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இங்கு நாகர் லிங்கமும் அதைச்சுற்றி இரு நாகங்கள் இணைந்து சிவலிங்க பூஜை செய்வதைப் போன்ற 20-க்கும் மேற்பட்ட நாகர்கள் சிலைகளும் உள்ளன.

    நாகர் லிங்கத்துக்கு வெள்ளிக்கிழமைகளில் மஞ்சள் சாற்றி வழிபட்டால் மாங்கல்ய தோஷம், நாக தோஷம் நிவர்த்தியாகும் என்பது இத்தலத்து நம்பிக்கை. இக்கோவிலின் கன்னி பகுதியில் நாககன்னி, நாகவல்லி சமேதராக ராகு பகவான் காட்சியளிக்கிறார். கன்னி ராசியில் ராகு அமைந்தால் ராஜயோகம் என்ற ஜோதிட சாஸ்திரப்படி இத்தலத்தில் கன்னி பகுதியில் ராகு பகவான் தனது தேவியருடன் காட்சி அளிப்பது மிகவும் சிறப்புக்குரியது ஆகும்.

    நாகப்பட்டினம் அருகே உள்ள நாகூரில் அமைந்து உள்ள இந்த கோவிலுக்கு சென்னையில் இருந்து வர விரும்பும் பக்தர்கள் பஸ் அல்லது ரெயில் மூலம் நாகப்பட்டினத்துக்கு வந்து நாகை புதிய பஸ் நிலையத்தில் இருந்து சுமார் 7 கி.மீ. தொலைவில் உள்ள நாகூர் நாகநாதர் கோவிலை அடையலாம். தென் மாவட்டங்களில் இருந்து இந்த கோவிலுக்கு வர விரும்பும் பக்தர்களும் மேற்கண்ட வழித்தடம் வழியாக கோவிலை அடையலாம்.

    • கீழே கொடுக்கப்பட்டுள்ள பரிகாரங்கள் நிச்சயம் நல்ல பலனைத்தரக்கூடியவை.
    • பிரச்சனைகளையும் அதற்கான பரிகாரங்களையும் பார்க்கலாம்.

    * சிவன் கோவில் வன்னி மரம், வில்வ மரத்தை 21 முறை வலம் வந்து நமது குறைகளைக் கூற, நல்ல பலன் கிடைக்கும். தீர்ப்புகள் சாதகம் ஆகும். இம்மரங்களுக்கு நாம் கூறுவதை கேட்கும் சக்தி உள்ளதாக ஒரு ஐதீகம் உண்டு.

    * கொடிய கடன் தொல்லைகளுக்கு ஸ்ரீ யோக நரசிம்மரையும், மற்ற கடன் தொல்லைகளுக்கு ஸ்ரீ லட்சுமி நரசிம்மரையும் வழிபடுவது நல்ல பரிகாரம் ஆகும். நரசிம்மரின் எந்த திருக்கோலத்தை தரிசித்தாலும் கடன் தொல்லைகள், பில்லி, சூனியம், ஏவல், திருஷ்டி , திருமண தடை விலகி நன்மை பெறலாம்.

    * ஆலய திரி சூலத்தில் குங்குமம் இட்டு, எலுமிச்சை பழம் குத்தி வழிபட, திருஷ்டி, செய்வினை தோஷம் நீங்கும்.

    * வெள்ளெருக்கு விநாயகரை வீட்டு அறைகளில் கைக்கு எட்டாத உயரத்தில் வைத்து இருந்தால், ஏதும் பூதகண சேஷ்டைகள் இருந்தால் நின்று விடும்.

    * சக்கரத்தாழ்வார் சந்நிதியில் நெய்தீபம் ஏற்றி 12 முறை, 48 நாட்கள் சுற்றி வழிபட தொழில், வழக்கு சாதகமாதல், பில்லி, சூனியம், ஏவல் நீங்கும். 21 செவ்வாய்கிழமைகளில் நெய்தீபம் ஏற்றி வழிபட கொடுத்த கடன் வசூல் ஆகும்.

    * கொடுத்த கடன் வசூல் ஆக பைரவர் சந்நிதியில் தொடர்ந்து 8 செவ்வாய் கிழமைகளில் நெய்தீபம் ஏற்றி சகஸ்ர நாம அர்ச்சனை செய்ய வேண்டும்.

    * மாதாமாதம் உத்திர நட்சத்திரத்தன்று சிவனுக்கு தொடர்ந்து 11 மாதங்கள் பால் அபிசேகம் செய்தால், திருமண தடை நீங்கி விரைவில் திருமணம் நடைபெறும்.

    * செவ்வாய்க்கு அதிபதியான முருகப்பெருமானுக்கு செவ்வாய் தோறும் நெய்விளக்கு ஏற்றி வழிபட மூன்று மாதத்தில் வேலை கிடைக்கும்.

    * ருத்ராட்சம், சாளக்கிராமம், துளசி, வில்வம் உள்ள இடத்தில் இருந்து சுமார் 10 கி.மீ தூரத்திற்கு செய்வினை அணுகாது.

    * பஞ்சகவ்ய கலவையை வாரம் ஒரு முறை வீடுகளில் தெளிக்க , தோஷம், தீட்டு நீங்கி, லஷ்மி கடாக்ஷ்சம் கிடைக்கும். பால், தயிர், கோமூத்திரம், சாணம் கலந்தது பஞ்சகவ்ய கலவை.

    * புத்திர பாக்கியம் இல்லாதோர் 6 தேய்பிறை அஷ்டமிகளி ல் காலபைரவருக்கு சகஸ்ர நாம அர்ச்சனை செய்தால் விரைவில் புத்திர பாக்கியம் கிட்டும்.

    * பெருமாள் கோவிலில் உள்ள கருடாழ்வார் சந்நிதியை சுற்றி வந்து நெய்விளக்கு ஏற்றி வழிபடசர்ப்ப தோஷம், கால சர்ப்ப தோஷம் நீங்கும்.

    * வறுமையில் இருப்பவருக்கு தானம் கொடுத்தல், பூஜை நடக்காமலிருக்கும் கோவில்களில் பூஜை நடக்க உதவுதல், அனாதைப் பிணங்களின் தகனத்திற்கு உதவுதல்- ஆகிய மூன்றும் செய்தால் அசுவமேத யாகம் செய்ததற்குச் சமம்.

    * எத்தகைய கிரக தோஷமானாலும் தினமும் சுந்தர காண்டத்தில் ஒரு அத்தியாயம் பாராயணம் செய்வது மிக, மிக நன்மை தரும்.

    * வாழை தண்டு திரியினால் வீட்டில் தீபம் ஏற்றினால் குலதெய்வ குற்றமும், குலதெய்வ சாபமும் நீங்கும்

    • பிரத்தியங்கிராதேவி வழிபாட்டில் மிளகாய் ஹோமம் மிகவும் புகழ்பெற்றது.
    • தீவினைகள் அடியோடு விலகும்

    வன்முறையும் பாதுகாப்பற்ற நிலையும் வளர்ந்துள்ள நிலையில், துஷ்டர்களும், எதிரிகளும் சூழ்ந்து வளர்ந்து வரும் நிலையில், கூட இருந்து குழிபறிக்கும் பகைவர்களும் கெட்ட எண்ணம் கொண்டோரும் சூழ்ந்துள்ள நிலையில் நமக்குப் பாதுகாப்புத் தருபவள் பிரத்தியங்கிரா தேவி.

    பிரத்தியங்கிராதேவி வழிபாட்டில் மிளகாய் ஹோமம் மிகவும் புகழ்பெற்றது. அய்யாவாடியில் உள்ள பிரத்தியங்கிரா தேவி ஆலயத்தில் ஒவ்வொரு மாதமும் அமாவாசை திதியன்று காலை நேரத்தில் மிளகாய் ஹோமம் சிறப்பாக நடைபெறுகிறது. எரியும் யாக குண்டத்தில் மூட்டை மூட்டையாக மிளகாய்களை அர்ப்பணிக்கிறார்கள்.

    எந்த விதமான நெடி, கமறல், காரம் போன்றவை இருக்காது என்பது அதிசயமான விஷயம். இந்த யாகத்தை நாம் நடத்தினாலும், மற்றவர்கள் நடத்தும்போது கலந்து கொண்டாலும் மரண பயம் நீங்கும். நோய்கள், துன்பங்கள், மன வேதனைகள், நவக்கிரகங்களால் ஏற்படும் இன்னல்கள், செய்வினைக் கோளாறுகள் அனைத்தும் நீங்கி வாழ்வு சிறக்கும்.

    இந்த மிளகாய் யாகத்தில் கலந்து கொண்டு பிரத்யங்கிரா தேவியை மன முக தரிசனம் செய்பவர்களுக்கு பகை, கடன், நோய் அகலும். சகலவித நன்மைகள் உண்டாகும். தீவினைகள் அடியோடு விலகும். பொன், பொருள் வாங்கும் யோகம் அதிகரிக்கும். தொழில், வேலை, உத்தியோகம் அபிவிருத்தி அடைந்து பணம் வரவு அதிகரித்து வளம் உண்டாகும்.

    • எல்லா பிரச்சனைகளுக்கும், கஷ்டங்களுக்கும் தீர்வு உண்டு.
    • எந்த தெய்வத்தை வழிபாடு செய்தால் என்ன பிரச்சனைகள், கஷ்டங்கள் தீரும் என்று அறிந்து கொள்ளலாம்.

    எல்லா பிரச்சனைகளுக்கும், கஷ்டங்களுக்கும் தீர்வு உண்டு. நம் பிரச்சனைகள், சங்கடங்கள் தீர தெய்வ வழிபாடு நன்மை தரும். ஒவ்வொரு கஷ்டங்களும் தீர ஒவ்வொரு கடவுளை வழிபாடு செய்ய வேண்டும். அந்த வகையில் எந்த தெய்வத்தை வழிபாடு செய்தால் என்ன பிரச்சனைகள், கஷ்டங்கள் தீரும் என்று அறிந்து கொள்ளலாம்.

    எமது முன்னோர்கள் ஒரு அழகான தொகுப்பினை பட்டியலிட்டு தந்துள்ளனர்.

    விக்னங்கள், இடையூறுகள் நீங்க – விநாயகர்

    செல்வம் சேர – ஸ்ரீ மகாலட்சுமி, ஸ்ரீ நாராயணர்

    நோய் தீர – ஸ்ரீ தன்வந்தரி, தட்சிணா மூர்த்தி

    வீடும், நிலமும் பெற – ஸ்ரீ சுப்ரமணியர், செவ்வாய் பகவான்

    ஆயுள், ஆரோக்கியம் பெற – ருத்திரன்

    மனவலிமை, உடல் வலிமை பெற – ராஜராஜேஸ்வரி, ஸ்ரீ ஆஞ்சநேயர்

    கல்வியில் சிறந்து விளங்க – ஸ்ரீ சரஸ்வதி

    திருமணம் நடைபெற – ஸ்ரீகாமாட்சி அம்மன், துர்க்கை

    மாங்கல்யம் நிலைக்க – மங்கள கௌரி

    புத்திர பாக்கியம் பெற – சந்தான கிருஷ்ணன், சந்தான லட்சுமி

    தொழில் சிறந்து லாபம் பெற – திருப்பதி வெங்கிடாசலபதி

    புதிய தொழில் துவங்க – ஸ்ரீகஜலட்சுமி

    விவசாயம் தழைக்க – ஸ்ரீ தான்யலட்சுமி

    உணவுக் கஷ்டம் நீங்க – ஸ்ரீ அன்னபூரணி

    வழக்குகளில் வெற்றி பெற – விநாயகர்

    சனி தோஷம் நீங்க – ஸ்ரீ ஐயப்பன், ஸ்ரீ ஆஞ்சநேயர்

    பகைவர் தொல்லை நீங்க – திருச்செந்தூர் முருகன்

    பில்லி, சூன்யம், செய்வினை அகல – ஸ்ரீ வீரமாகாளி, ஸ்ரீ நரசிம்மர்

    அழியாச் செல்வம், ஞானம், சக்தி பெற – சிவஸ்துதி

    ×