search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Menses"

    • மாதவிடாய் நாட்களில் உடலில் நீர்ச்சத்துக் குறைபாடு ஏற்படும்.
    • மாதவிடாய் நாட்களில், உடலுக்கு சிரமம் தர வேண்டாம்.

    பெண்களுக்கு மாதவிடாய் வருவதற்கு ஓரிரு நாட்களுக்கு முன் PreMenstrual Syndrome (PMS) ஏற்படும். அந்நேரத்தில் மார்பகத்தில் வலி, உடல் வலி போன்றவற்றுடன் பதற்றம், எரிச்சல் என உணர்வு ரீதியாகவும் பெண்கள் பலவீனமாக உணர்வார்கள். அப்போது உடற்பயிற்சி செய்வது அவர்களுக்கு நல்ல மாறுதலை தரும். உடற்பயிற்சியின் போது பிட்யூட்டரி சுரப்பியிலிருந்து வெளியாகும் ஒரு வகை ரசாயனமான Endorphins வலிகளை குறைத்து மகிழ்ச்சி ஏற்படுத்தும் தன்மை உடையது. அதனால், PMS நாட்களில் அவசியம் உடற்பயிற்சிகளில் ஈடுபடுங்கள்.

    மாதவிடாயின் போது குறைந்தது 3 முதல் 5 நாட்கள் வரை கடுமையான உடற்பயிற்சிகள் செய்யாமலிருப்பது நல்லது. ஹார்மோன்களின் சுரப்புகளில் ஏற்படும் மாறுபாடுகளின் காரணமாக உடலில் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும். வயிறு மற்றும் உடல் வலி இருக்கும். மனமும் உடலும் சோர்ந்து காணப்படும்.

    அந்த நேரத்தில் உடற்பயிற்சி செய்யும் போது ஒரு குறிப்பிட்ட நிலையில் செய்தால் சிலருக்கு ரத்தப்போக்கு அதிகமாகலாம். குறிப்பாக வயதானவர்களும், கர்ப்பப்பை பலவீனமாக இருப்பவர்களும் இந்த நாட்களில் உடற்பயிற்சி செய்தால், ரத்தப்போக்கு அதிகரிக்க வாய்ப்புண்டு. கர்ப்பப்பை பலவீனமாக இருப்பவர்களுக்கு ஆட்டோவில் பயணம் செய்தால் கூட ரத்தப்போக்கு அதிகரிக்கும். இப்படிப்பட்டவர்கள்

    இந்நாட்களில் உடற்பயிற்சி செய்யாமல் இருப்பதே நல்லது.

    உடற்பயிற்சி செய்ய விரும்புபவர்கள் மெதுவான நடைப்பயிற்சி, எளிய வகை ஏரோபிக்ஸ் பயிற்சிகள் செய்யலாம். யோகாசனம் செய்பவர்கள் மாதவிடாய் நாட்களில் பத்மாசனம் போன்று தரையில் அமர்ந்து செய்யக்கூடிய எளிய ஆசனங்களைச் செய்யலாம். தலைகீழாக நிற்கும் யோகாசனங்கள் செய்யக்கூடாது.

    கர்ப்பப்பைக்குச் செல்ல வேண்டிய ரத்த ஓட்டம் மாறுபடும். மாதவிடாய் நாட்களில் உடலில் நீர்ச்சத்துக் குறைபாடு ஏற்படும். உடற்பயிற்சி செய்யும் போது, சிலருக்கு மயக்கம், தலைச்சுற்றல் ஏற்பட வாய்ப்புண்டு. அதனால், தண்ணீர் நிறைய குடிக்க வேண்டும். சில பெண்கள் கருத்தரிக்க வேண்டி காத்திருப்பார்கள். அவர்களில் சிலருக்கு மாதவிடாய் கொஞ்சம் வந்திருக்கும். அதனால் கர்ப்பம் இல்லை என நினைத்து தவறுதலாக உடற்பயிற்சிகளில் ஈடுபடுவார்கள். அதில் ஒரு சிலர் கர்ப்பம் தரித்திருக்க வாய்ப்புண்டு. குழந்தைப்பேற்றுக்காக காத்திருப்பவர்கள் மாதவிடாய் வந்தாலும் கர்ப்பப் பரிசோதனை செய்து கர்ப்பம் இல்லையென்று தெரிந்த பின்னர்தான் பயிற்சிகளில் ஈடுபட வேண்டும்.

    ஓய்வு தேவைப்படும் மாதவிடாய் நாட்களில், உடலுக்கு சிரமம் தர வேண்டாம். அவரவர் மனம் மற்றும் உடல்நிலைக்கு ஏற்ற எளிய உடற்பயிற்சிகளை மேற்கொள்ளலாம்.

    • மாதம்தோறும் பெண்களை வேதனைக்குள்ளாக்கும் பிரச்சனைகளில் ஒன்று மாதவிடாய்.
    • சிலருக்கு வாந்தி, செரிமானக் கோளாறு போன்றவைகளும் ஏற்படும்.

    மாதம்தோறும் பெண்களை வேதனைக்குள்ளாக்கும் பிரச்னைகளில் ஒன்று மாதவிடாய். மாதவிடாய் காலத்தில் பெண்களில் உடலில் சோர்வு, டென்ஷன், படபடப்பு, தலைவலி, கை வலி, கால் வலி போன்ற பிரச்னைகள் ஏற்படும்.

    மேலும் சிலருக்கு வாந்தி, செரிமானக் கோளாறு போன்றவைகளும் ஏற்படும். ஒவ்வொரு மாதமும் மாதவிடாயின் போது ஏற்படும் இரத்தத்தின் நிறத்தை வைத்தே பெண்களில் உடல் ஆரோக்கியத்தைக் கூறலாம் என்று ஆய்வுகள் கூறுகின்றன.

    ரத்தப்போக்கு எந்த நிறத்தில் இருந்தாலும் அது நார்மல்தான். ஒரே விஷயம்... ஃப்ரெஷ்ஷான ரத்தம் என்பது இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும்.

    உதாரணத்துக்கு, கையிலுள்ள சருமம் கட் ஆகி ரத்தம் வரும்போது, அது ஃப்ரெஷ் ரத்தம் என்பதால் இளஞ்சிவப்பாக இருக்கும். அதுவே ஆக்ஸிஜனுக்கு எக்ஸ்போஸ் ஆக, ஆக சற்று அடர்நிறத்தில் மாறும், அவ்வளவுதான். பீரியட்ஸின் ஆரம்பத்தில், அது வெஜைனா பகுதி சுரப்புடன் கலந்து வெளியேறுவதால் லைட் சிவப்பு நிறத்தில் இருக்கும். போகப்போக லேசான அடர்சிவப்பு நிறத்துக்கு மாறும்.

    அதுவே அடர்சிவப்பு நிறத்தில் ரத்தம் வெளியேறுகிறது என்றால் அது பெரும்பாலும் கட்டிகளாகவே இருக்கும். மாதவிலக்கு ரத்தமானது கட்டிகளாக மாறாது.

    ஒருவேளை உங்களுக்கு அப்படி கட்டிக்கட்டியாக ரத்தம் வெளியேறினால் உங்களுக்கு ப்ளீடிங் அதிகமிருப்பதாக அர்த்தம். கட்டிகள் சிறிதாக இருந்தால் பாதிப்பில்லை. பெரிய பெரிய கட்டிகளாக இருந்தால் அப்படியே விட்டுவிடாமல் மருத்துவரை பார்ப்பது நல்லது.

    உங்களுக்கு மூன்று முதல் நான்கு நாள்களுக்குத்தான் பீரியட்ஸ் இருக்கிறது, ஆனாலும் கட்டிகளாக வெளியேறுகிறது என்றால் அது நார்மலான விஷயமல்ல. அது குறித்து மருத்துவப் பரிசோதனையும் சிகிச்சையும் அவசியம்.

    கிரே கலந்த சிவப்பு நிறம் அதிகமாக ஏற்படாது. ஒருவேளை அப்படி வந்தால் அது ஏற்கனவே உடலில் தேங்கியிருந்த பழைய இரத்தமாக இருக்கும். அப்படி இல்லையென்றால் பாலியல் தொற்று இருந்தால் இந்த நிறத்தில் வரும். மேலும் நீங்கள் கர்பமாக இருந்தால் இந்த நிறத்தில் வரும் அல்லது கரு கலைந்து விட்டாலும் இந்த நிறத்தில் வரும். இந்த நிறத்தில் மாதவிடாய் வந்தால் உடனே மருத்துவரை அணுகுவது நல்லது.

    சிலருக்கு மாதவிடாய் ஏற்படும் போது சிவப்பு கலந்த பிங்க் நிறத்தில் இரத்தம் வெளியேறும். உடலில் ஈஸ்ட்ரோஜன் அளவு குறைவாக இருந்தால் தான் பிங்க் நிறத்தில் இரத்தம் வெளியேறும். மேலும் ஒருசிலருக்கு உடலில் இருக்கும் இரத்தத்தின் அளவு குறைவாக இருந்தாலும் இந்த நிறத்தில் வெளியேறும்.

    மற்றபடி பீரியட்ஸின்போது வெளியேறும் ரத்தத்தின் நிறத்துக்கும் வேறெதற்கும் தொடர்பில்லை. அது குறித்த பயமும் தேவையில்லை.

    • ஹார்மோன்களின் தாக்கத்தால் உடலில் பல மாற்றங்கள் ஏற்படுகின்றன.
    • ஈஸ்ட்ரோஜன் சில நன்மைகளைக் கொண்டிருக்கலாம்.

    பெண்களுள் சிலர் தங்கள் மார்பகங்களின் அளவை குறைக்க கஷ்டப்பட்டாலும், சிலர் அதன் அளவை அதிகரிக்க முயற்சிக்கின்றனர். அதற்காக சில பெண்கள் சர்ஜரி செய்யவும் நினைக்கின்றனர்.

    மார்பகங்கள் சிறியதாக இருப்பதற்கு, ஒரு குறிப்பிட்ட ஹார்மோன்கள் அதிகமாகவும் அல்லது குறைவாகவும் இருப்பது தான் காரணமாக இருக்கும். அதிலும் ஆண் ஹார்மோனான டெஸ்டோஸ்டிரோன் அதிகமாகவும், ஈஸ்ட்ரோஜென் குறைவாகவும் இருப்பது தான் முக்கிய காரணம்.

    பெண் குழந்தைகள் பருவம் அடையும்போது, ஹார்மோன்களின் தாக்கத்தால் உடலில் பல மாற்றங்கள் ஏற்படுகின்றன. இது பொதுவாக பத்து வயதில் தொடங்கி பதினான்கு வயது வரை நீடிக்கும். இந்த மாற்றங்கள் எட்டு வயதிற்கு முன்பாகவோ அல்லது பத்து வயதுக்கு முன் மாதவிடாய் ஏற்படுவதாகவோ தோன்றினால், அது "முன்கூட்டிய பருவமடைதல்" எனப்படும்.

    பொதுவாக, உடல் உறுப்புகளை வளர்ச்சியடைய வைப்பதற்காக மருத்துவர்கள் எவ்வித மருந்துகளையும் தருவதில்லை. ஈஸ்ட்ரோஜன் (பெண் பாலின ஹார்மோன்) சில நன்மைகளைக் கொண்டிருக்கலாம். ஆனால், அது பல பக்க விளைவுகளையும் கொண்டுள்ளது.

    மார்பகங்களில் வலி, உடல் முழுவதிலும் வலி, மாதாந்திர ரத்தப்போக்கு போன்ற தற்காலிக பிரச்னைகள் மற்றும் கருப்பை புற்றுநோய், மார்பக புற்றுநோய், நீரிழிவு போன்ற நீண்ட கால பிரச்னைகள் ஏற்படலாம்.

    மார்பக வளர்ச்சியைத் தூண்டுவதற்காக ஈஸ்ட்ரோஜனை செயற்கையாகச் செலுத்தினால், அது வளர்ச்சியை நிறுத்தும் அபாயம் உள்ளது.

    அதேபோல், ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்ட்டிரோன் போன்ற ஹார்மோன்களை கருத்தடை மாத்திரைகளாகப் பயன்படுத்துவது சில நேரங்களில் பெண்களுக்குப் பிரச்னைகளை ஏற்படுத்தும். இவற்றை நீண்டகாலத்திற்குத் தொடர்ந்து பயன்படுத்துவதால் புற்றுநோயுடன் சேர்ந்து பக்கவாதம், மாரடைப்பு போன்ற உயிருக்கே ஆபத்தான பிரச்னைகளும் ஏற்படலாம்.

    அதனால்தான், மருத்துவர்கள் அனைத்துப் பரிசோதனைகளையும் செய்து, ஆபத்துகள் குறித்துத் தெரிவித்த பின்னரே இந்த சிகிச்சைகளை தொடங்குகின்றனர்.

    உடல் எடை, கொழுப்பை அதிகரிக்க இன்சுலின், கார்டிசோல் கொடுக்கப்படுகின்றன. அதேநேரத்தில், அவை எலும்புகள் பலமிழப்பது, நீரிழிவு நோய், நோய் எதிர்ப்பு சக்தி குறைதல், ரத்த அழுத்தம் அதிகரிப்பு போன்ற பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம்.

    பிற பிரச்னைகளுக்கான சிகிச்சையாக இவற்றைத் தவறாகப் பயன்படுத்துவதன் காரணமாகவும் பலரும் பக்க விளைவுகளால் பாதிக்கப்படுகின்றனர்.எனவே, கட்டாயம் தேவைப்படும் பட்சத்தில் மட்டுமே இந்த மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டும். அதுவும் தீவிர பரிசோதனைகளுக்குப் பிறகு தேவையான நாட்களுக்கு, தேவையான அளவில் மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும்.

    ஈஸ்ட்ரோஜனை கொடுப்பதற்கு முன் பரிசோதிக்க வேண்டிய முக்கியமான விஷயம் என்னவென்றால், பெண்ணின் தாய் அல்லது ரத்த உறவினர்கள் யாருக்கும் மார்பக அல்லது கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் இல்லை என்பதை உறுதி செய்ய வேண்டும்.

    அத்தகைய நிலையில் இருப்பவர்களுக்கு ஹார்மோன்கள் கொடுப்பதால் புற்றுநோய் ஏற்படும் அபாயம் அதிகம். அழகுக்கான சில அளவுகோல்களைக் கருத்தில் கொண்டு, அவற்றை செயற்கையாகப் பெறுவதற்கு தேவையில்லாமல் இதுபோன்ற முறைகளைக் கையாண்டால், ஆரோக்கியம் கெட்டு, சில நேரங்களில் உயிருக்கே ஆபத்தாகலாம்.

    மார்பகங்களின் அளவை அதிகரிக்க சிம்பிளான பல இயற்கை வழிகள் இருக்க, ஏன் சர்ஜரிக்கு செல்ல வேண்டும்.

    மார்பகங்களின் அளவை பெரிதாக்க தினமும் தவறாமல் மசாஜ் செய்து வர வேண்டும். அதிலும் ஒரு மாதம் தொடர்ந்து தினமும் 30 நிமிடம் மசாஜ் செய்து வந்தால், நல்ல மாற்றத்தைக் காணலாம். ஏனெனில் மசாஜ் செய்யும் போது, மார்பகங்களில் இரத்த ஓட்டம் அதிகரித்து, அதனால் மார்பகங்களின் அளவை பெரிதாக்கும் ஹார்மோன்கள் தூண்டப்படும்.

    மார்பக தசைகளை மையமாக கொண்டு செய்யப்படும் உடற்பயிற்சிகள் அனைத்தும் மார்பகங்களின் அளவை பெரிதாக்கும். எனவே இங்கு கொடுக்கப்பட்டுள்ள உடற்பயிற்சிகளை தவறாமல் அன்றாடம் செய்து வாருங்கள். இதனால் நல்ல மாற்றத்தைக் காணலாம்.

    ஈஸ்ட்ரோஜென் உற்பத்தியை அதிகரிக்கும் உணவுகளான சிக்கன் சூப், சோயா உணவுப் பொருட்கள், காய்கறிகள், பருப்பு வகைகள், பழங்கள், முட்டை, சூரியகாந்தி விதைகள், எள் மற்றும் ஆளி விதை போன்றவற்றை அதிகம் சாப்பிட்டு வர வேண்டும்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • உடல் பருமன் மற்றொரு எச்சரிக்கை அறிகுறியாகும்.
    • உயர் ரத்த அழுத்தம் மற்றும் கொழுப்பு அதிகரிப்பது.

    பெண்களுக்கு ஒவ்வொரு மாதமும் சுழற்சி முறையில் நிகழக்கூடிய மாதவிடாய் சீராக இல்லாமல் தடைபடுவதும் அல்லது வழக்கத்திற்கு மாறாக அதிக ரத்தப்போக்கை உண்டாக்குவதுதான் பி.சி.ஓ.எஸ். கருப்பையில் உருவாகும் நீர்க்கட்டிகள்தான் இதற்கு முக்கிய காரணம். இந்த நீர்க்கட்டிகள் முழுமையாக உடைந்தால்தான் மாதவிடாய் சீராக இருக்கும்.

    பி.சி.ஓ.எஸை முற்றிலும் குணப்படுத்த எந்த சிகிச்சைகளும் இல்லாத நிலையில் முறையான வாழ்க்கை முறையே கை கொடுக்கும் என்கின்றனர் மருத்துவர்கள். குறிப்பாக அதிக எடை பிரதான காரணமாக இருக்கிறது. மேலும் முகம் மற்றும் உடலில் அதிகப்படியான முடி வளர்ச்சி, முகப்பரு மற்றும் முடி உதிர்தல் போன்ற பிரச்னைகள் ஏற்படும்.

    பாலிசிஸ்டிக் ஓவரி நோய் (பி.சி.ஓ.எஸ்) பொதுவாக பெண்களின் இனப்பெருக்க வயதில் நிகழ்கிறது. இந்த பிரச்சனை உள்ள பெண்களின் கருப்பையின் இரு பக்கங்களிலும் உள்ள சினைப்பைகளில் சிறிய நீர்க்கட்டிகளின் வளர்ச்சி இருக்கும். இதன் விளைவாக கருமுட்டைகள் உருவாக முடியாத நிலை ஏற்படும் வாய்ப்புள்ளது.

    பி.சி.ஓ.எஸ் பெரும்பாலும் வாழ்க்கை முறை தொடர்பான நோயாக வகைப்படுத்தப்படுகிறது. ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறைகள், உடற்பயிற்சியின்மை, மோசமான வாழ்க்கை முறை, புகைபிடித்தல், மன அழுத்தம் மற்றும் போதிய தூக்கமின்மை போன்ற பல காரணங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். இதை சரி செய்ய எப்படியான வாழ்க்கை முறையைப் பின்பற்ற வேண்டும்..?

    ஆரம்ப கட்ட அறிகுறிகள்

    * ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சி, தாமதமான சுழற்சிகள், மிகக் குறைந்த கால மாதவிடாய் போன்றவை நீர்க்கட்டி பிரச்னையின் முக்கிய அறிகுறிகள்.

    * பெரியவர்களுக்கு மாதவிடாய் காலங்கள் 21 நாட்களுக்கு முன்னதாகவோ அல்லது 35 நாட்களுக்குப் பிறகோ ஏற்படும். அதுவே இளம் பெண்களுக்கு 45 நாட்களுக்கு பிறகு மாதவிடாய் நிகழ்ந்தால் உடனடியாக மருத்துவரின் ஆலோசனையை பெறுவது நல்லது.

    * உடல் பருமன் மற்றொரு எச்சரிக்கை அறிகுறியாகும். ஏனெனில் பி.சி.ஓ.எஸ் பாதித்த பெண்களில் கிட்டத்தட்ட 40-80 சதவீதம் பேர் அதிக எடை கொண்டவர்களாக இருப்பார்கள்.

    * ஆண்களின் உடலில் சுரக்கப்படும் ஹார்மோன்கள் அதிக அளவில் இருப்பதால் உடலில் முகப்பரு, அதிகப்படியான முடி வளர்வது, குறிப்பாக முகத்தில் ஒரு முக்கிய அறிகுறி.

    * உச்சந்தலையில் முடி உதிர்தல் மற்றும் வழுக்கை ஏற்படுத்துவது.

    * டைப் 2 நீரிழிவு நோயின் பாதிப்பு. இதனால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு சாதாரண அளவை விட அதிகரிக்கும்.

    * உயர் ரத்த அழுத்தம் மற்றும் கொழுப்பு அதிகரிப்பது.

    *மனநிலை மாற்றங்கள், மனச்சோர்வு, தன்னம்பிக்கை இல்லாமை மற்றும் பதட்டம் போன்றவை பி.சி.ஓ.எஸ்-ன் அறிகுறிகளாகும்.

    மருத்துவ ரீதியாக கண்டறியும் முறை பி.சி.ஓ.எஸ் நோயைக் கண்டறிய திட்டவட்டமான சோதனை எதுவும் இல்லை. எனினும் மருத்துவர்கள் பி.சி.ஓ.எஸ் நோயறிதலுக்கு ஆரம்ப கட்ட மருத்துவ பரிசோதனைகளான ரத்த பரிசோதனைகள் மற்றும் அல்ட்ராசவுண்ட் சோதனை செய்வதன் மூலம் கண்டறியலாம்.

    வாழ்க்கை முறை மாற்றங்கள்

    பி.சி.ஓ.எஸ் உயிருக்கு ஆபத்தான நோய் அல்ல. ஆனால் நீண்டகால சிக்கல்களை தவிர்க்க ஆரம்ப கட்டத்திலேயே உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மருத்துவ ரீதியாக சிகிச்சையளிக்க முடியும் என்றாலும், சில எளிய வாழ்க்கை முறை நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் பி.சி.ஓ.எஸ்-ஐ குணப்படுத்தலாம்.

    * சத்தான உணவை உட்கொள்வது மற்றும் வழக்கமான உடற்பயிற்சியில் ஈடுபடுவதன் மூலம் ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு மாறலாம்.

    * பீட்சா, பர்கர் போன்ற பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் வெண்ணெய், சீஸ் போன்ற கொழுப்புச்சத்து நிறைந்த பொருள்களை சாப்பிடுவதை தவிர்த்து ஆரோக்கியமான உணவை உட்கொள்ள வேண்டும். நீங்கள் என்ன சாப்பிடுகிறீர்கள், எவ்வளவு சாப்பிடுகிறீர்கள் என்பதையும் தேர்ந்தெடுப்பது அவசியம்.

    *வழக்கமான உடற்பயிற்சி, நடைப்பயிற்சியில் ஈடுபடுவது ரத்த சர்க்கரை அளவைக் குறைக்க உதவும்.

    * உங்கள் அன்றாட செயல்பாட்டை அதிகரிப்பதன் மூலம் இன்சுலின் அளவை சீராக வைத்துக்கொள்ளலாம். இது உங்கள் எடையைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும்.

    * தினசரி 7- 8 மணிநேர இடைவிடாத தூக்கம் பி.சி.ஓ.எஸ் வராமல் தடுக்க உதவும் ஒரு முக்கிய காரணியாகும்

    * மன அழுத்தம் நம் வாழ்வின் ஒரு பகுதியாக மாறிவிட்டது, ஆனால் பி.சி.ஓ.எஸ்-ல் இருந்து நீங்கள் குணமடைய விரும்பினால் மன அழுத்தத்தை குறைக்க நேரம் ஒதுக்குவது அவசியமாகும். இதற்கு தினமும் யோகா, நீச்சல் போன்றவற்றில் கவனம் செலுத்தலாம்.

    • பதப்படுத்தப்பட்ட உணவுகளை கூடுமானவரை தவிர்த்துவிட வேண்டும்.
    • நிறைவுற்ற, கொழுப்பு குறைந்த உணவுகளை சாப்பிடலாம்.

    50 வயதை நெருங்கும் பெண்கள் மெனோபாஸ் எனப்படும் மாதவிடாய் நிறுத்த சுழற்சியை எதிர்கொள்ள நேரிடும். அந்த சமயத்தில் உடல் ஆரோக்கியம் சார்ந்த சில முக்கியமான நடைமுறைகளை பின்பற்றாவிட்டால் உடல் எடை அதிகரிக்க தொடங்கிவிடும். மாதவிடாய் காலத்தில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களுடன், முதுமை கால கட்டம், வாழ்க்கை முறை, மரபியல் ரீதியான காரணங்கள் போன்றவையும் உடல் பருமன் பிரச்சினைக்கு வழிவகுக்கலாம். அப்படி உடல் பருமன் பிரச்சினையை எதிர்கொண்டால் சுவாச கோளாறு, டைப்-2 நீரிழிவு, ரத்த அழுத்தம் உள்ளிட்ட பாதிப்புகளை அனுபவிக்க நேரிடும். மெனோபாஸ் காரணமாக ஏற்படும் எடை அதிகரிப்புடன் தொடர்புடைய சில பொதுவான உடல்நலப் பிரச்சினைகள் குறித்து பார்ப்போம்.

    நீரிழிவு நோய்: மாதவிடாய் நின்று மெனோபாஸ் காலகட்டத்தை எதிர்கொள்ளும் பெண்களில் சராசரி உடல் எடை கொண்டவர்களை விட, அதிக உடல் பருமன் கொண்ட பெண்களுக்கு நீரிழிவு நோய் வருவதற்கான வாய்ப்பு நான்கு மடங்கு அதிகம் என்று கண்டறியப்பட்டுள்ளது.

    இதய நோய்: மாதவிடாய் நின்ற பிறகு அதிக கொழுப்புள்ள உணவுகள் உண்பது, ஆரோக்கியமற்ற பழக்கவழக்கங்களை பின்பற்றுவது இதய நோய் வருவதற்கான வாய்ப்புகளை அதிகப்படுத்தலாம். அதிலும் உடல் பருமன் பிரச்சினையை எதிர்கொண்டால் இதய நோய்க்கு ஆளாக நேரிடும்.

    உயர் ரத்த அழுத்தம்: மாதவிடாய் நிற்கும் மெனோபாஸ் காலகட்டத்தை நெருங்கும்போது ஈஸ்ட்ரோஜன் அளவு குறையக்கூடும். இத்தகைய குறைபாடு மாதவிடாய் நின்ற பிறகு உயர் ரத்த அழுத்தத்திற்கு வழிவகுத்துவிடும். மேலும் மாதவிடாய் காலத்தில் ஈஸ்ட்ரோஜன் அளவு குறையும் போது, இதயம் மற்றும் ரத்த நாளங்களில் விறைப்பு ஏற்பட்டும் உயர் ரத்த அழுத்தத்திற்கு வித்திடும்.

    உடல் மாற்றங்கள்: பெண்களை பொறுத்தவரை வயதுக்கு ஏற்ப, உடலில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட தொடங்குகின்றன. வயது அதிகரிக்கும்போது தசைகள் பலவீனமடையும். வளர்சிதை மாற்றமும் படிப்படியாக குறையும். இத்தகைய மாற்றங்கள் மாதவிடாய் காலத்தில் எடை அதிகரிக்க வழிவகுக்கும். இருப்பினும், வேறு சில காரணங்களும் மாதவிடாய் நிறுத்தத்துடன் தொடர்புடையவை. சருமம் வறட்சி அடைவது, உடல் மெலிந்து போவது, முடி உதிர்தல் போன்றவை மாதவிடாய் நிறுத்தத்தின்போது ஏற்படும் மற்ற மாற்றங்களாகும். இத்தகைய மாற்றங்கள் பெண்கள் மனதில் எதிர்மறையான சிந்தனைகளை உருவாக்கி கவலை மற்றும் மனச்சோர்வுக்கு வழி வகுத்துவிடும்.

    ஆரோக்கியமான உணவு முறை: ஆரோக்கியமான உடல் எடையைப் பராமரிக்க, பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள் போன்ற சத்தான உணவை உட்கொள்வது அவசியம். பதப்படுத்தப்பட்ட உணவுகளை கூடுமானவரை தவிர்த்துவிட வேண்டும். கால்சியம், இரும்பு மற்றும் நார்ச்சத்து நிறைந்த உணவுகளை உண்ண வேண்டும். நிறைவுற்ற, கொழுப்பு குறைந்த உணவுகளை சாப்பிடலாம்.

    உடற்பயிற்சி: மாதவிடாய் நிற்கும் சமயத்தில் எதிர்கொள்ளும் உடல் பருமனை குறைப்பதற்கு மட்டுமல்லாமல், அந்த சமயத்தில் உருவாகும் மன நிலை மாற்றங்களை கட்டுப்படுத்தவும் உடற்பயிற்சி அவசியமானது. உடல்வாகுக்கு பொருத்தமான உடற்பயிற்சிகளை தேர்ந்தெடுக்கலாம். அவை எலும்புகளை பலவீனமடைய செய்யும் ஆஸ்டியோபோரோசிஸ் எனப்படும் நோய் பாதிப்பு அபாயத்தை குறைக்க உதவும்.

    சைக்கிள் ஓட்டுதல், நீச்சல் அடித்தல், தினமும் 30 நிமிடங்களாவது நடைப்பயிற்சி செய்தல் போன்ற பழக்கங்கள் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும், உடல் மற்றும் மனரீதியாகவும் ஆரோக்கியமாக உணரவும் உதவும். டம்ப்பெல்ஸ், 'எக்ஸ்சர்சைஸ் பேண்டு' எனப்படும் உடற்பயிற்சி செய்யும் பட்டைகள், யோகா போன்றவை தசைகள் மற்றும் எலும்புகளை வலுப்படுத்த உதவும். ஏரோபிக்ஸ் பயிற்சிகளை மேற்கொள்வது இதயம் மற்றும் நுரையீரலுக்கு நலம் சேர்க்கும்.

    தூக்கம்: உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்க நன்றாக தூங்கி எழும் வழக்கத்தை கடைப்பிடிப்பதும் முக்கியமானது. இன்றைய காலகட்டத்தில் தூங்கச் செல்வதற்கு முன்பு மின்னணு சாதனங்களை பயன்படுத்துவதை தவிர்த்தாலே போதுமானது.

    மெனோபாஸ் என்பது பெண்களின் உடல் மற்றும் மன நிலையில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தலாம். இருப்பினும் ஆரோக்கியமான பழக்கவழக்கங்கள் மூலம் வாழ்க்கையை புதுப்பித்து, முழுமையாக வாழ முடியும்.

    • 28 நாட்களுக்கு ஒரு முறை மாதவிடாய் சுழற்சி ஏற்படும்.
    • வாழ்க்கைமுறை சம்பந்தப்பட்ட கோளாறுகளால் மாதவிடாய் சுழற்சி தாமதாமாகும்.

    பொதுவாக 28 நாட்களுக்கு ஒரு முறை மாதவிடாய் சுழற்சி ஏற்படும். ஒரு சில நாட்கள் முன் அல்லது பின், அதாவது 21 நாட்கள் முதல் 35 நாட்களுக்குள் மாதவிடாய் ஏற்படுவது இயல்பானதாகும். அவ்வாறில்லாமல், கீழ்க்கண்ட வகைகளில் ஏதேனும் ஒன்று காணப்பட்டால் அது சீரற்ற மாதவிடாயாகக் கருதப்படும்.

    சீரற்ற மாதவிடாய்க்கான அறிகுறிகள்

    மாதவிடாய் ஏற்படும் காலம் ஒரே சீராக இல்லாமல் ஒவ்வொரு முறையும் நீண்ட நாள்கணக்கு வித்தியாசத்தில் முன்பாகவோ பின்பாகவோ ஏற்படுதல்.

    21 நாட்களுக்கு முன்பாகவோ 35 நாட்களுக்குப் பின்னரோ மாதவிடாய் ஏற்படுதல். மூன்று அல்லது அதற்கும் மேற்பட்ட மாதங்களுக்கு மாதவிடாய் உண்டாகாமல் இருத்தல். வழக்கத்திற்கு மாறாக மிக அதிகமான அல்லது மிகக் குறைவான உதிரப்போக்கு ஏற்படுதல்

    சீரற்ற மாதவிடாய் ஏற்படுவதற்கான காரணங்களில் சில:

    ஹார்மோன் கோளாறுகள்

    தைராய்டு இயக்கம் சீராக இல்லாமை

    சினைப்பை நோய்க்குறி (PCOS)

    கர்ப்பப்பை கோளாறுகள்

    அதீத உடற்பயிற்சி

    சத்தான ஆகாரம் உண்ணாமை

    அதிக அல்லது குறைவான உடல் எடை

    மன அழுத்தம்

    மாதவிலக்கு நிற்கும் காலம் (menopause)

    சில வகையான மருந்துகள்

    சில உடல் நலக் கோளாறுகள்

    நாற்பது வயதுக்கு மேல், மாதவிடாய் சுழற்சி நிற்கும் நேரம், சீரற்ற முறையில் தான் மாதவிடாய் ஏற்படும். பர்த் கண்ட்ரோல் பில்ஸ் என்று கூறப்படும் கர்ப்பம் தரிப்பதைத் தடுக்கும் மருந்துகள் பயன்படுத்தினாலும், IUD என்ற கருத்தடைகள் சாதனங்களைப் பயன்படுத்தினாலும், மாதவிடாய் சுழற்சி முறையற்று காணப்படும்.

    பெண்களுக்கு சினைப்பை நீர்க்கட்டிகள் (PCOS), ஃபைப்ராய்ட்ஸ், பெல்விக் பாதிப்பு, என்டோமெட்ரியோசிஸ் உள்ளிட்ட சினைப்பை பிரச்சனைகள் மாதா மாதம் கருமுட்டை உருவாவதில் பாதிப்பை ஏற்படுத்தும். இதனால், மாதவிடாய் சுழற்சி பாதிப்படையும்.

    அதிகப்படியான ஸ்ட்ரெஸ், தூக்கமின்மை, சரியாக சாப்பிடாமல் இருப்பது, உடல் எடை அதிகரிப்பு ஆகிய வாழ்க்கைமுறை சம்பந்தப்பட்ட கோளாறுகளால் மாதவிடாய் சுழற்சி தாமதாமாகும்.

    • மாதவிடாய் காலத்தில் உடலுறவில் ஈடுபடும் போது பாலியல் நோய்கள் பரவ வாய்ப்புள்ளது.
    • மன அழுத்தம் குறையவும் வாய்ப்புகள் அதிகம்.

    மாதவிடாய் காலத்தில் நிறைய பெண்கள் கடுமையான வயிற்று வலியால் அவஸ்தைப்படுவார்கள். ஆனால் மாதவிடாய் காலத்தில் உடலுறவில் ஈடுபடும் போது, உச்சக்கட்ட இன்பத்தை அடைவதால் வெளியிடப்படும் எண்டோர்பின்கள், வயிற்று வலி மற்றும் இந்த காலத்தில் ஏற்படும் மன அழுத்தத்தில் இருந்து உடனடி நிவாரணம் தரும்.

    நிறைய பேர் மாதவிடாய் சுழற்சியில் வெளிவரும் இரத்தம் அசுத்தமானது மற்றும் நோய்க்கிருமிகளைக் கொண்டது என்று நினைக்கின்றனர். ஆனால் உண்மையில் அது தவறு. மாதவிடாய் காலத்தில் வெளிவரும் இரத்தத்தில் உடலில் அதிகம் பயன்படுத்தப்படாமல் இருந்த ஆரோக்கியமான இரத்தம் மற்றும் திசுக்கள் தான் உள்ளது. நீண்ட நாட்களாக பயன்படுத்தப்படாமல் இருப்பதால், மாதவிடாய் சுழற்சியின் போது அது வெளியே தள்ளப்படுகிறது.

    மாதவிடாய் காலத்தில் உடலுறவில் ஈடுபட்டால், மற்ற நேரங்களை விட சற்று அதிகமான அளவில் இரத்தம் வெளிவரும். அதிலும் அதுவரை அளவாக இரத்தக்கசிவு ஏற்பட்டிருந்தாலும், உடலுறவில் ஈடுபட்ட பின் அதிகமாக வெளிவரும். ஏனெனில் பெண்கள் உச்சக்கட்ட இன்பத்தை அடையும் போது கருப்பையக மாசுக்கள் வேகமாக வெளியேத் தள்ளப்பட்டு, இரத்தக்கசிவு ஏற்படும் நாட்கள் குறையும்.

    ஆய்வு ஒன்றில் 30 சதவீதத்தினர் மாதவிடாய் காலத்தில் உடலுறவில் ஈடுபடுகின்றனர் என்றும், இக்காலத்தில் மற்ற காலங்களை விட அதிகளவு பாலுணர்ச்சி இருப்பதாகவும் கூறியிருப்பது தெரிய வந்துள்ளது.

    மாதவிடாய் காலத்தில் மற்ற நேரங்களில் ஈடுபடும் போது அடையும் இன்பத்தை விட அதிகளவு இன்பத்தை அடைவதாக நிறைய பெண்கள் கூறுகின்றனர்.

    மாதவிடாய் காலத்தில் உடலுறவில் ஈடுபடும் போது பாலியல் நோய்கள் பரவ வாய்ப்புள்ளது. ஏனெனில் இந்த காலத்தில் இரத்தத்தை வெளியே தள்ள கருப்பை வாய் சற்று அதிகமாக திறப்பதால், பாலியல் நோய்களுக்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. எனவே இக்காலத்தில் பாதுகாப்பான உடலுறவில் ஈடுபடுங்கள்.

    அந்த 3 நாள்களில் உடலுறவு கொண்டால் கரு தங்காது. ஆகவே இந்த நாள்களில் கருத்தடை சாதனம் இல்லாமல் செக்ஸ் வைத்துக் கொள்ளலாம். மேலும் இந்த நாள்களில் உடலுறவு கொண்டு உச்சம் அடைந்தால் பெண்களுக்கு நல்ல ஹார்மோன் கிடைக்கும். இது சில பெண்களுக்கு தெரியும். பலருக்கு தெரிய வாய்ப்பில்லை. இன்னும் சொல்லப் போனால் அந்த நாள்களில் உடலுறவு மட்டுமின்றி சுய இன்பமும் பெறலாம். இது உடலுக்கு நல்லது. மன அழுத்தம் குறையவும் வாய்ப்புகள் அதிகம்.

    கால்வலி, உடம்பு வலி பறந்து போய்விடும். பெண்களும் மாதவிலக்கு வலிகளை கடந்து செல்ல முடியும். ஆகவே மாதவிலக்கு காலத்தில் உடலுறவு கொண்டால், மன அழுத்தம், உடல் பிரச்னை உள்ளிட்டவற்றில் இருந்து வெளிவரமுடியும்.

    எனினும், "மாதவிலக்கு காலங்களில் ஹெச்.ஐ.வி, பால்வினை நோய்கள் உள்ளவர்கள் இந்த உடலுறவை தவிர்க்க வேண்டும்.

    மாதவிடாய் காலத்தில் உடலுறவு கொள்வது என்பது ஒருவரின் தனிப்பட்ட விருப்பம். இக்காலத்தில் உடலுறவு கொள்வது நல்லது என்று கூறுவதால் கட்டாயம் உறவு கொள்ள வேண்டுமென்ற அவசியம் ஏதும் இல்லை.

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • சானிடரி பேட்களின் பயன்பாட்டினால் சருமத்தில் அரிப்பு, சொறி போன்ற பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன.
    • பல பெண்கள் காலை முதல் மாலை வரை ஒரே பேடு பயன்படுத்துகின்றனர்.

    பெண்கள் பூப்பூ எய்திய நாளில் இருந்து கடைப்பூப்பூ என்று சொல்லப்படும் மெனோபாஸ் நிலையை அடையும் வரை ஒவ்வொரு மாதமும் பூப்பூ சுழற்சி நடைபெறுகிறது. வெகுசிலரே ஒவ்வொரு மாதமும் இதனை எளிமையாக கடந்து செல்கின்றனர். பல பெண்கள் அடிவயிற்றில் வலி, இடுப்பு வலி, குமட்டல், அதிகப்படியான உதிரப்போக்கு, சோர்வு போன்ற உடல்நல பாதிப்புகளோடு கோபம், எரிச்சல், தூக்கமின்மை போன்ற மனநல மாற்றங்களையும் அடைகின்றனர்.

    பெரும்பாலான பெண்கள் தற்பொழுது மாதவிடாய் காலத்தில் சானிடரி பேடுகளையே பயன்படுத்துகின்றனர். இன்றைய சானிடரி பேடுகளில் அவற்றின் உறிஞ்சும் தன்மையை அதிகரிக்கும் பொருட்டு, சூப்பர் அப்சார்பென்ட் பாலிமரை பயன்படுத்துகின்றனர். மேலும் கசிவைத் தடுக்க பாலிஎதிலீன், பாலிப்ரொப்பிலீன் போன்றவை பயன்படுத்தப்படுகின்றன. மேலும் இவற்றுடன் டையாக்ஸின்கள், பெட்ரோ கெமிக்கல்கள் போன்ற ரசாயணப் பொருட்கள் சேர்க்கப்படுவதாக தற்போதைய ஆராய்ச்சி முடிவுகள் கூறுகின்றன. இத்தகைய வேதிப்பொருள்கள் குறைந்த அளவில் பயன்படுத்தினாலும் பல்வேறு உடல்நல பாதிப்புகளை ஏற்படுத்தும் அபாயம் உள்ளவை. டெல்லியில் ஒரு என்.ஜி.ஓ. நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் ஆர்கானிக் பேட்கள் என்று தற்பொழுது வழக்கத்தில் உள்ள பேடுகளிலும் இத்தகைய மூலப்பொருள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதைப்போலவே இலியோனிஸ், யுனிவர்சிட்டி மேற்கொண்ட ஆய்வில் மெதிலீன் குளோரைட், டொலுயீன், சைலீன் போன்ற செயற்கை வேதிப்பொருள்கள் காணப்படுவதாக ஆராய்ச்சி முடிவுகள் வுறுகின்றன.

    இத்தகைய சானிடரி பேடுகளின் பயன்பாட்டினால் சருமத்தில் அரிப்பு, சொறி போன்ற பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. குறைந்தது 4 மணி நேரமும், அதிகபட்சம் 6 மணி நேரமும் தான் ஒரு சானிடரி பேட் பயன்படுத்தப்பட வேண்டும். ஆனால் பல பெண்கள் காலை முதல் மாலை வரை ஒரே பேட் பயன்படுத்துகின்றனர். மேலும் ரத்தக்கசிவு இல்லையெனில் பயன்படுத்திய அதே நாப்கினை மீண்டும் சிலர் பயன்படுத்துகின்றனர். இவை இரண்டுமே மிகவும் தவறான பழக்கவழக்கங்கள் ஆகும். இதனால் பல்வேறு வகையான கிருமித்தொற்று ஏற்படும் வாய்ப்பு உள்ளது. மேலும் நாப்கினில் உள்ள ரசாயணங்கள் பிறப்புறுப்பின் தோலின் வழியாக உடலுக்குள் சென்று முறைதிருந்திய மாதவிடாய், ஹார்மோன் செயல்பாட்டில் மாற்றங்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைவு, இனப்பெருக்க உறுப்பு புற்றுநோய், பெண் உடலில் ஆண் ஹார்மோன்களின் அதிக உற்பத்தி போன்றவை ஏற்பட வாய்ப்புள்ளது.

    இவை அனைத்தையும் டயாக்சின் என்ற ஒேர ஒரு ரசாயனமே ஏற்படுத்திவிடும். இத்தகைய டயாக்சின் நாம் பயன்படுத்தும் சானிடரி பேட்களில் காணப்படுகிறது. 2002-ல் அமெரிக்காவில் டாக்டர்.எட்வர்ட், டயாக்சின் குறித்த தன்னுடைய மருத்துவ கட்டுரையை வெளியிட்டார். அதில் பல்வேறு ஆபத்துகளைப் பற்றி விளக்கியிருந்த அவர், குறிப்பாக பெண்களுக்கு கருப்பை கட்டிகள், மார்பக புற்று, கருப்பை புற்று, குறுகிய மாதவிடாய், சினைப்பை நீர்கட்டி, கருவுறுதலில் தாமதம் போன்றவை டயாக்சின் பாதிப்பினால் ஏற்படும் என்று விளக்கி உள்ளார். நாப்கின்கள் பழக்கத்திற்கு வராத காலகட்டத்தில் நம் வீடுகளில் பெண்கள் பருத்தியினாலான துணிகளைப் பயன்படுத்தினர்.

    சிலர் அதனை துவைத்து மீண்டும் பயன்படுத்தினர். சிலர் பயன்படுத்தியவைகளை புதைக்கவோ, எரிக்கவோ செய்து ஒவ்வொரு முறையும் புதியவற்றை பயன்படுத்தினர். இது ஒவ்வொரு நபரின் பொருளாதார நிலையை சார்ந்து இருந்தது. ஆனால் அக்காலப் பெண்களிடம் மாதவிடாய் கோளாறுகளும், சினைப்பை நீர்கட்டி, மகப்பேற்றில் காலதாமதம், கருப்பை மற்றும் மார்பகம் புற்று வெற்றின் தாக்கம் தற்போது இருக்கும் பெண்களிடம் காணப்படும் அளவிற்கு பரவி இருந்ததா என்பது ஆராய்ச்சிக்குரியதே. ஏனெனில் அவர்கள் இத்தகைய நோய்களின் பாதிப்புகளில் பெரும்பாலும் தாக்கப்படவில்லை என்பதற்கு அவர்களது சந்ததிகளான நம்முடைய பெற்றோரும், நாமும் அறிந்ததே.

    ஆனால் இன்று ஏன் பெரும்பாலான குழந்தைகள் மற்றும் வளர் இளம் பெண்கள் இத்தகைய பாதிப்புகளை அடைகின்றனர் என ஆராய்வோமானால், நமது உணவு மற்றும் வாழ்வியல் மாற்றம் ஒரு காரணமாக இருப்பினும், இன்று நாம் பயன்படுத்தும் நாப்கின்களும் மிக முக்கியப் பங்கு வகிக்கின்றன. இதற்கான தீர்வு நம்மிடமே உள்ளது. நாம் ஏற்படுத்தும் மாற்றம் மட்டுமே நம்முடைய எதிர்கால சந்ததியைப் பாதுகாக்கும். எனவே இயற்கையாக தயாரிக்கப்பட்ட துணி நாப்கின்களை வாங்குவது அல்லது வீட்லேயே நம் தேவைக்கு ஏற்ப தயாரிப்பது என்ற ஏதேனும் ஒன்றை நாம் தேர்ந்தெடுத்து செயல்படுத்த வேண்டும்.

    துணி நாப்கின்களை பயன்படுத்திய பிறகு நன்றாக தண்ணீரில் ஊறவைத்து, கிருமி நாசினியைக் கொண்டு துவைத்து, வெயிலில் உலரவைத்து பயன்படுத்தினால் எத்தகைய பாதிப்புகளையும் ஏற்படுத்துவதில்லை. தற்பொழுது பலர் மூலிகை நாப்கின்களை வீடுகளிலேயே தயாரிக்கின்றனர். அதில் பருத்தியுடன் திரிபலா சூரணம், கற்றாழை, வேப்பிலை போன்றவற்றைப் பயன்படுத்துகின்றனர். தேவையான அளவிற்கு காட்டன் துணியை கத்தரித்து அதன்மேல் பஞ்சினை வைத்து, பின்னர் சிறிது மூலிகைப் பொடிகளை தூவி, மீண்டும் பஞ்சினை வைத்து காட்டன் துணியினால் மூடி தையல் மிஷினின் உதவியுடன் நான்கு பக்கங்களிலும் தைத்து நம் தேவைக்கு ஏற்ப பயன்படுத்திக்கொள்ளலாம்.

    நாம் நம் உடல்நலத்திற்கென சிறிது நேரம் ஒதுக்கி எளிமையான முறையில் வீட்லேயே தயார் செய்தோ அல்லது வெளியில் விற்கப்படும் துணி நாப்கின்களையோ பயன்படுத்தலாம். எத்தகைய நாப்கினாக இருப்பினும் 4 முதல் 6 மணி நேரத்திற்கு ஒருமுறை மாற்றி பயன்படுத்துவதே சிறந்தது. இவ்வாறு பயன்படுத்தும்போது அவை சரும பாதிப்புகளை ஏற்படுத்துவது இல்லை. எந்தவித ரசாயணமும் அற்ற இயற்கையான பொருள்களைக் கொண்டு தயாரிக்கப்படுவதால் அவற்றால் கருப்பை புற்று நோய், மாதவிடாய் கோளாறுகள், ஹார்மோன்களின் சீரற்ற தன்மை போன்றவை ஏற்பட வாய்ப்புகள் குறைவு.

    மாதவிடாய் சுகாதாரம் மற்றும் சானிடரி பேட்களின் பயன்பாட்டினைப் பற்றிய விழிப்புணர்வை பள்ளிக் குழந்ந்தைகளிடம் இருந்தே தொடங்குவது சிறந்தது. மேலும் மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் உடல் மற்றும் மன மாற்றங்களைக் குறித்து ஆண், பெண் என்ற பேதமின்றி அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும். மேலும் இத்தகைய இயற்கையான சானிடரி பேட்களை பயன்படுத்துவதால் சுற்றுச்சூழலும் பாதுகாக்கப்படுகிறது.

    ஏனெனில் ரசாயணப் பொருள் மற்றும் ப்ளாஸ்டிக் நிறைந்த நாப்கினை பயன்படுத்தும்போது எந்த அளவிற்கு உடலுக்கு தீங்கு விளைவிக்கின்றதோ, அதைப்போலவே பயன்படுத்திய நாப்கின்கள் புதைக்கப்பட்டால் அவை மக்குவதற்கு பல ஆண்டுகள் ஆகலாம், நேரத்தில் அவை எரிக்கப்பட்டால் வளிமண்டலக் காற்றுடன் கலந்து சுவாசப்பாதை நோய்களை ஏற்படுத்தும். எனவே எளிதில் மக்கக்கூடிய இயற்கையான முறையில் தயாரிக்கப்பட்ட நாப்கின்களைப் பயன்படுத்தி சுற்றுச்சூழலை பாதுகாப்பதோடு, நாமும் நல்ல உடல்நலனோடு வாழ்ந்து், எதிர்கால சந்ததியரையும் வளமோடு வாழச் செய்வோம்.

    • 12 முதல் 15 வயது என்பதே பெண்கள் பூப்படைய சரியான காலம்.
    • சில குழந்தைகள் 8 முதல் 10 வயதிலேயே பூப்படைந்து விடுகிறார்கள்.

    பெண்களின் வாழ்வில் ஒரு முக்கியமான நிகழ்வு பூப்படைதல். 12 முதல் 15 வயது என்பதே பெண்கள் பூப்படைய சரியான காலம். ஆனால், சில குழந்தைகள் 8 முதல் 10 வயதிலேயே பூப்படைந்து விடுகிறார்கள். இவ்வாறு சீக்கிரம் பூப்படையும் பெண்களுக்கு, மெனோபாஸும் சீக்கிரமே வந்துவிடும் என்ற கருத்து பலரிடம் இருக்கிறது. இதன் உண்மைத்தன்மையை விளக்குகிறார் சென்னை, கொட்டிவாக்கத்தில் வசிக்கும் பெண்கள் நல சிறப்பு மருத்துவர் ஸ்பூர்த்தி அருண்.

    முன்பெல்லாம் தாய் சிறுவயதிலேயே பூப்படைந்தால், அவரின் பெண் குழந்தையும் அவ்வாறே பூப்படைவார் என்ற நம்பிக்கை இருந்தது. ஆனால், இன்றைய காலகட்டத்தில் இயல்பாகவே சிறுவயதிலேயே பூப்பெய்தும் நிலை உண்டாகிவிட்டது. இதற்கு முக்கியக் காரணம் உணவுப் பழக்கவழக்கமும், வாழ்க்கை முறையும்தான். முன்பெல்லாம் ஏதேனும் திருவிழா, சுப நிகழ்வின்போதே விருந்து சாப்பிடும் பழக்கம் இருந்தது.

    ஆனால், தற்போது தினசரி வாழ்விலேயே பொரித்த உணவுகள், கொழுப்பு நிறைந்த உணவுகள், வெளியில் விற்கும் உணவுகள் போன்றவற்றை சாப்பிடும் வழக்கம் அதிகரித்துவிட்டது. உணவில் கலக்கப்படும் பதப்படுத்திகள், சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டு, உணவு தயாரிக்க பயன்படுத்தும் எண்ணெய் இவை அனைத்தும் பெண்கள் சிறுவயதிலேயே பூப்படைய வழிவகுக்கும். இதுதவிர சுற்றுச்சூழல், மரபியல் மற்றும் வளர்சிதைமாற்றம், மனஅழுத்த ஹார்மோன் சுரப்பு அதிகரிப்பதால் ஏற்படும் தூக்கமின்மை போன்ற மற்ற காரணங்களாலும் விரைவாகவே பூப்படைதல் நிகழும்.

    இதனால் குழந்தைப் பருவத்திலேயே உடல் பருமன், சர்க்கரை நோய் போன்ற பாதிப்புகள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். ஹார்மோன் சுரப்பியில் மாற்றம் ஏற்படும்போது உடலில் வளர்சிதை மாற்றம் குறைவது, கருப்பை நீர்க்கட்டி, குழந்தையின்மை போன்ற பிரச்சினைகளும் அதிகரிக்கும். இவ்வாறு, 13 வயதுக்கு முன்னர் பூப்படைந்தால் மெனோபாஸும் விரைவாக வரும் என்ற கருத்து ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது.

    இதில் 11 வயதுக்கு முன்பே பூப்பெய்துபவர்களுக்கு மெனோபாஸ் சீக்கிரம் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என கண்டறியப்பட்டுள்ளது. சிலருக்கு மரபியல், ஹார்மோன் கோளாறு, ஒவ்வாமை மற்றும் கிருமித் தொற்றால் கருப்பையில் ஏற்படும் பிரச்சினைகள் போன்றவற்றாலும் மெனோபாஸ் விரைவில் ஏற்படும்.

    இதனால் இதய நோய், சர்க்கரை நோய், ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். அதுமட்டுமில்லாமல் தூக்கமின்மை, பதற்றம், மன உளைச்சல் போன்ற வாழ்வியல் பிரச்சினைகளும் உண்டாகும். சீக்கிரம் பூப்பெய்துவதை தடுக்க பிளாஸ்டிக் பொருட்களில் பரிமாறப்படும் தண்ணீர், பானங்கள் மற்றும் உணவுகளைத் தவிர்ப்பது, பழங்கள், காய்கறிகள் ஆகியவற்றை சரியாக சுத்தம் செய்து பயன்படுத்துவது, ரசாயனம் கலக்கப்பட்ட பால் மற்றும் இறைச்சி போன்றவற்றை அடிக்கடி சாப்பிடுவதைத் தவிர்ப்பது நல்லது.

    • சில பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சி படிப்படியாகக் குறையத் தொடங்குகிறது.
    • மருத்துவ ரீதியாக உறுதிசெய்யப்படும் வரை தம்பதி எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

    உலகில் பொதுவாகப் பெண்களுக்கு மாதவிடாய் நிறுத்தத்தின் சராசரி வயது 49-51 எனக் கருதப்பட்டாலும், இந்தியப் பெண்களில் மாதவிடாய் நிறுத்தம் 47-49 வயதில் ஏற்படுகிறது. அதாவது உலகெங்கிலும் உள்ள பெண்களை விட இந்தியப் பெண்கள் மாதவிடாய் நிற்றல் விரைவாக ஏற்படுகிறது.

    "எந்த ஒரு பெண்ணுக்கும் கருவுறும் காலமோ மாதவிடாய் நிற்கும் காலமோ அவரவர் உடல் வாகைப் பொறுத்தது. மற்ற எவருடனும் ஒப்பிட்டுப் பார்க்க முடியாது. சில பெண்களுக்கு மாதவிடாய் நிற்பதற்கு முன்பு வரை, சாதாரண மாதவிடாய் இருக்கும். பின்னர், அது நின்றுவிடும்.

    சில பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சி படிப்படியாகக் குறையத் தொடங்குகிறது. மற்றும் சில பெண்களுக்குச் சுழற்சியில் மாற்றம் ஏற்பட்டு, இடைவெளி அதிகரிக்கிறது. இந்தக் காலகட்டம், ப்ரீமெனோபாஸ் என்று அழைக்கப்படுகிறது. இது, சில மாதங்கள் முதல் மூன்று முதல் நான்கு ஆண்டுகள் வரை இருக்கலாம். கடைசி மாதவிடாய் காலத்திற்குப் பிறகு ஒரு பெண்ணுக்கு 12 மாதங்கள் வரை மாதவிடாய் வரவில்லை என்றால் அந்தப் பெண்ணுக்கு மாதவிடாய் நின்றதாகக் கருதப்படுகிறது. மாதவிடாய் நின்ற பிறகு ஒரு பெண்ணுக்கு ரத்தப்போக்கு ஏற்பட்டால், அது அசாதாரணமாகவே கருதப்படுகிறது." என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள்.

    வயது அதிகரிக்க, அதிகரிக்க, பெண்களின் பிறப்புறுப்புகள் வறண்டு போகின்றன, கருப்பை வாய்க் கட்டி, கருப்பையின் புறணி தடித்தல் அல்லது மெலிந்து போதல், மருந்துகளால் ஏற்படும் பக்க விளைவுகள் அல்லது நோய்த்தொற்றுகளால் உதிரப்போக்கு ஏற்படலாம். மாதவிடாய் நின்ற பிறகு ஏற்படும் இரத்தப்போக்கு சில நேரங்களில் சிறிய காரணங்களாலும் இருக்கலாம். சில சமயங்களில் இது புற்றுநோய் போன்ற ஆபத்தான நோய்க்கான அறிகுறியாகவும் இருக்கலாம்.

    மாதவிடாய் நின்ற பிறகு, லேசான வடுவோ, அதிக இரத்தப்போக்கு அல்லது எந்தவிதமான இரத்தப்போக்கு இருந்தாலும், உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். ஏனெனில் இதுபோன்ற சந்தர்ப்பங்களில் இது புற்றுநோயாக இருக்க பத்து சதவீதம் வாய்ப்புள்ளது. இந்தப் புற்றுநோய் கருப்பையிலோ அல்லது அதன் வாயிலோ அல்லது சினைப்பையிலோ அல்லது யோனியிலோ ஏற்படலாம் என்று மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள்.

    இந்த அறிகுறிகள் இருந்தால், உடனடியாக, இரத்தப் பரிசோதனைகள், பேப் ஸ்மியர்ஸ், எண்டோமெட்ரியல் பயாப்ஸி, சோனோகிராபி மற்றும் டி.என்.சி போன்றவற்றை உள்ளடக்கிய ஒரு பரிசோதனையைச் செய்து கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.

    "இரண்டு-மூன்று மாதங்களாக மாதவிடாய் ஏற்படவில்லை என்றால், மாதவிடாய் நின்று விட்டது என்று கருதும் பெண்கள், கருத்தடைச் சாதனங்கள் பயன்படுத்துவதை நிறுத்திவிடுகிறார்கள். அதனால் அந்த வயதில் அவர்கள் கர்ப்பமடைகிறார்கள். அது சங்கடத்தை ஏற்படுத்துகிறது." என்றும் மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

    இதுபோன்ற பிரச்சனைகளுடன் பல தம்பதியர் வருவதாகவும் அந்த நேரத்தில், கருக்கலைப்பு செய்வது மிகவும் கடினமாகிவிடுவதாகவும், இதனால், அவர்களுக்கு சங்கடம் ஏற்படுகிறது என்றும் மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

    எனவே, பெண்ணுக்கு மாதவிடாய் நின்றது மருத்துவ ரீதியாக உறுதிசெய்யப்படும் வரை தம்பதி எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று அவர்கள் அறிவுறுத்துகிறார்கள்.

    • பெண்கள் தங்கள் உடல்நலனில் அக்கறை செலுத்துவது இல்லை.
    • பெண்களின் பொதுவான பிரச்சினை இரும்புசத்து குறைவு ஆகும்.

    பெண்கள் ஒவ்வொரு பருவங்களுக்கு ஏற்றவாறு பொறுப்புகளும் அதிகரிப்பதால் பல பெண்கள் தங்கள் உடல்நலனில் அக்கறை செலுத்துவது இல்லை. ஒரு பெண் பூப்பு அடையும் காலம் தொடங்கி, மகப்பேறு காலம், கடைப்பூப்பு காலம் என அனைத்து நிலைகளிலும் உடல் அளவிலும், மனதளவிலும் பல மாற்றங்களை எதிர்கொள்கிறாள்.

    பெண்கள் பூப்பு எய்திய காலம் தொடங்கி அவர்களுக்கு காணப்படும் பொதுவான பிரச்சினை இரும்புசத்து குறைவு ஆகும். இச்சத்து குறைவினால் உடல் சோர்வு, தலைவலி, மூச்சுவிட சிரமம், உடல் வீக்கம், முடி உதிர்வு, முறையற்ற மாதவிடாய் போன்ற பல குறிகுணங்கள் ஏற்படும். பேரீச்சம் பழம், உலர்ந்த திராட்சை, கீரை வகைகள், கறிவேப்பிலை, நெல்லிக்காய், அத்திப்பழம், முழு உளுந்து, கருப்பட்டி, ஈரல் வகைகள் இவைகளில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது.

    மாதவிடாய் காலத்தில் ஏற்படும் ஹார்மோன்களின் மாற்றங்களினால் அதிகரித்த பசி, எதிலும் நாட்டம் இன்மை, கோபம் போன்றவை ஏற்படலாம். பெரும்பாலான பெண்கள், இத்தகைய நேரத்தில் சத்தான உணவினை தவிர்த்து பாஸ்ட்புட்களை உண்பது உடல்நலத்தினை பாதிக்கும் செயலாகும். இத்தகைய உணவுப் பழக்கவழக்கங்களினால் முறையற்ற மாதவிடாய் சுழற்சி பெரும்பாலான பெண்களில் காணப்படுகிறது. பெரும்பாலும் தைராய்டு சுரப்பியில் ஏற்படும் பிரச்சினை, சினைப்பை நீர்கட்டி, கருப்பை தசைக்கட்டி போன்றவைகளால் முறையற்ற மாதவிடாய் சுழற்சி ஏற்படலாம்.

    முறையற்ற மாதவிடாய் உள்ளவர்கள் எள்ளு மற்றும் கருஞ்சீரகத்தை இரவில் நீரில் ஊறவைத்து காலையில் அந்த நீரினைப் பருகிவரலாம். மேலும் இரும்புச்சத்து மற்றும் வைட்டமின்-சி நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ளலாம். ஐந்து நாட்களுக்கு மேல் அதிகப்படியான உதிரப்போக்கு உள்ளவர்கள் துவர்ப்புச் சுவை உடைய அத்திப் பிஞ்சு, மாதுளைப் பிஞ்சு, மாதுளை தோல் கஷாயம், வாழைப்பூ போன்றவற்றை உணவில் சேர்த்து வரலாம்.

    கர்ப்பப்பை வாயில் சதை வளர்ச்சி இருந்தால் ஒரே மாதத்தில் இரண்டு முறைகூட மாதவிடாய் ஏற்படும். உடலில் கொழுப்பு சேர்வதால் சுரக்கும் அதிகப்படியான ஈஸ்ட்ரோஜென், கர்ப்பப்பை வாயில் சதை வளர்வதைத் தூண்டும். ஒப்பீட்டு அளவில் இந்தப் பிரச்னை மிகச் சிலருக்கே ஏற்படுகிறது.

    மெனோபாஸ் காரணமாக எடை அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் இருந்தாலும், சில வாழ்க்கை முறை மாற்றங்கள், உணவுப் பழக்கவழக்கங்கள் மூலம் அதனை கட்டுப்படுத்தலாம்.
    50 வயதை நெருங்கும் பெண்கள் மெனோபாஸ் எனப்படும் மாதவிடாய் நிறுத்த சுழற்சியை எதிர்கொள்ள நேரிடும். அந்த சமயத்தில் உடல் ஆரோக்கியம் சார்ந்த சில முக்கியமான நடைமுறைகளை பின்பற்றாவிட்டால் உடல் எடை அதிகரிக்க தொடங்கிவிடும். மாதவிடாய் காலத்தில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களுடன், முதுமை கால கட்டம், வாழ்க்கை முறை, மரபியல் ரீதியான காரணங்கள் போன்றவையும் உடல் பருமன் பிரச்சினைக்கு வழிவகுக்கலாம். அப்படி உடல் பருமன் பிரச்சினையை எதிர்கொண்டால் சுவாச கோளாறு, டைப்-2 நீரிழிவு, ரத்த அழுத்தம் உள்ளிட்ட பாதிப்புகளை அனுபவிக்க நேரிடும். மெனோபாஸ் காரணமாக ஏற்படும் எடை அதிகரிப்புடன் தொடர்புடைய சில பொதுவான உடல்நலப் பிரச்சினைகள் குறித்து பார்ப்போம்.

    நீரிழிவு நோய்: மாதவிடாய் நின்று மெனோபாஸ் காலகட்டத்தை எதிர்கொள்ளும் பெண்களில் சராசரி உடல் எடை கொண்டவர்களை விட, அதிக உடல் பருமன் கொண்ட பெண்களுக்கு நீரிழிவு நோய் வருவதற்கான வாய்ப்பு நான்கு மடங்கு அதிகம் என்று கண்டறியப்பட்டுள்ளது.

    இதய நோய்: மாதவிடாய் நின்ற பிறகு அதிக கொழுப்புள்ள உணவுகள் உண்பது, ஆரோக்கியமற்ற பழக்கவழக்கங்களை பின்பற்றுவது இதய நோய் வருவதற்கான வாய்ப்புகளை அதிகப்படுத்தலாம். அதிலும் உடல் பருமன் பிரச்சினையை எதிர்கொண்டால் இதய நோய்க்கு ஆளாக நேரிடும்.

    உயர் ரத்த அழுத்தம்: மாதவிடாய் நிற்கும் மெனோபாஸ் காலகட்டத்தை நெருங்கும்போது ஈஸ்ட்ரோஜன் அளவு குறையக்கூடும். இத்தகைய குறைபாடு மாதவிடாய் நின்ற பிறகு உயர் ரத்த அழுத்தத்திற்கு வழிவகுத்துவிடும். மேலும் மாதவிடாய் காலத்தில் ஈஸ்ட்ரோஜன் அளவு குறையும் போது, இதயம் மற்றும் ரத்த நாளங்களில் விறைப்பு ஏற்பட்டும் உயர் ரத்த அழுத்தத்திற்கு வித்திடும்.

    உடல் மாற்றங்கள்: பெண்களை பொறுத்தவரை வயதுக்கு ஏற்ப, உடலில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட தொடங்குகின்றன. வயது அதிகரிக்கும்போது தசைகள் பலவீனமடையும். வளர்சிதை மாற்றமும் படிப்படியாக குறையும். இத்தகைய மாற்றங்கள் மாதவிடாய் காலத்தில் எடை அதிகரிக்க வழிவகுக்கும். இருப்பினும், வேறு சில காரணங்களும் மாதவிடாய் நிறுத்தத்துடன் தொடர்புடையவை. சருமம் வறட்சி அடைவது, உடல் மெலிந்து போவது, முடி உதிர்தல் போன்றவை மாதவிடாய் நிறுத்தத்தின்போது ஏற்படும் மற்ற மாற்றங்களாகும். இத்தகைய மாற்றங்கள் பெண்கள் மனதில் எதிர்மறையான சிந்தனைகளை உருவாக்கி கவலை மற்றும் மனச்சோர்வுக்கு வழி வகுத்துவிடும்.

    ஆரோக்கியமான உணவு முறை: ஆரோக்கியமான உடல் எடையைப் பராமரிக்க, பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள் போன்ற சத்தான உணவை உட்கொள்வது அவசியம். பதப்படுத்தப்பட்ட உணவுகளை கூடுமானவரை தவிர்த்துவிட வேண் டும். கால்சியம், இரும்பு மற்றும் நார்ச்சத்து நிறைந்த உணவுகளை உண்ண வேண்டும். நிறைவுற்ற, கொழுப்பு குறைந்த உணவுகளை சாப்பிடலாம்.

    உடற்பயிற்சி: மாதவிடாய் நிற்கும் சமயத்தில் எதிர்கொள்ளும் உடல் பருமனை குறைப்பதற்கு மட்டுமல்லாமல், அந்த சமயத்தில் உருவாகும் மன நிலை மாற்றங்களை கட்டுப்படுத்தவும் உடற்பயிற்சி அவசியமானது. உடல்வாகுக்கு பொருத்தமான உடற்பயிற்சிகளை தேர்ந்தெடுக்கலாம். அவை எலும்புகளை பலவீனமடைய செய்யும் ஆஸ்டியோபோரோசிஸ் எனப்படும் நோய் பாதிப்பு அபாயத்தை குறைக்க உதவும்.

    சைக்கிள் ஓட்டுதல், நீச்சல் அடித்தல், தினமும் 30 நிமிடங்களாவது நடைப்பயிற்சி செய்தல் போன்ற பழக்கங்கள் வளர்சிதை மாற் றத்தை அதிகரிக்கவும், உடல் மற்றும் மனரீதியாகவும் ஆரோக்கியமாக உணரவும் உதவும். டம்ப்பெல்ஸ், ‘எக்ஸ்சர்சைஸ் பேண்டு’ எனப்படும் உடற்பயிற்சி செய்யும் பட்டைகள், யோகா போன்றவை தசைகள் மற்றும் எலும்புகளை வலுப்படுத்த உதவும். ஏரோபிக்ஸ் பயிற்சிகளை மேற்கொள்வது இதயம் மற்றும் நுரையீரலுக்கு நலம் சேர்க்கும்.

    தூக்கம்: உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்க நன்றாக தூங்கி எழும் வழக்கத்தை கடைப்பிடிப்பதும் முக்கியமானது. இன்றைய காலகட்டத்தில் தூங்கச் செல்வதற்கு முன்பு மின்னணு சாதனங்களை பயன்படுத்துவதை தவிர்த்தாலே போதுமானது.

    மெனோபாஸ் என்பது பெண்களின் உடல் மற்றும் மன நிலையில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தலாம். இருப்பினும் ஆரோக்கியமான பழக்கவழக்கங்கள் மூலம் வாழ்க்கையை புதுப்பித்து, முழுமையாக வாழ முடியும்.
    ×