search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "mango recipes"

    • மாம்பழத்தில் குழந்தைகளுக்கு பிடித்தமான பல்வேறு ரெசிபிகளை செய்யலாம்.
    • இன்று மாம்பழ ஜாம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்:

    தித்திப்பான பழுத்த மாம்பழம் - 1,

    சர்க்கரை - 1 கப்,

    மாம்பழ எசன்ஸ் - சில துளிகள்,

    இஞ்சி துருவல் - 1 டீஸ்பூன்,

    எலுமிச்சை பழம் - 1.

    செய்முறை:

    மாம்பழத்தை நன்றாக கழுவி தோலை நீக்கி விட்டு சதை பகுதியை மட்டும் எடுத்து நன்றாக அரைத்து கொள்ளவும். (விருப்பப்பட்டால் சிறிய துண்டுகளாகவும் நறுக்கி கொள்ளலாம்.

    அடுப்பில் அடி கனமான பாத்திரம் (அ) நான்ஸ்டிக் கடாயை வைத்து மாம்பழத்தை போட்டு 5 நிமிடம் நன்றாக வதக்கவும்.

    அடுத்து அதில் எலுமிச்சை சாறு பிழிந்து நன்றாக வதக்கவும்.

    அடுத்து அதில் சர்க்கரை சேர்த்து 25 நிமிடங்கள் மிதமான தீயில் கைவிடாமல் கிளறி விடவும்.

    மாம்பழ கலவை திக்கான பதம் வரும் போது இஞ்சி துருவல், மாம்பழ எசன்ஸ் சேர்த்து 5 நிமிடங்கள் மிதமான தீயில் கிளறி விடவும்.

    இஞ்சி பச்சை வாசனை போனவுடன் அடுப்பை அணைத்து விடவும்.

    சிறிது ஜாமை ஒரு தட்டில் ஊற்றினால் அது ஓடாமல் நெகிழ இருக்கும் சமயத்தில் அடுப்பை அணைக்கவும் (ஜாம் போன்றவை செய்யும்போது அடுப்பை 'சிம்'மில் வைத்தால் அடிபிடிக்காது).

    நன்றாக ஆறியதும் கண்ணாடி டப்பாவில் போட்டு வைக்கவும்.

    இப்போது சூப்பரான மாம்பழ ஜாம் ரெடி.

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • இந்த சீசனில் கிடைக்கும் மாங்காயில் பல்வேறு ரெசிபிகளை செய்யலாம்.
    • இது பூரி, சப்பாத்தி, சமோசாவுக்கு தொட்டுக் கொள்ள சூப்பரா இருக்கும்.

    தேவையான பொருட்கள் :

    நீண்ட கிளி மூக்கு மாங்காய் - 3,

    சர்க்கரை - 100 கிராம்,

    தோல் நீக்கி, துருவிய இஞ்சி - 1 டேபிள்ஸ்பூன்,

    உப்பு - கால் டீஸ்பூன்,

    தேன் - 1 டீஸ்பூன்.

    செய்முறை:

    மாங்காய்களைக் கழுவி தோல் நீக்கி துருவிக் கொள்ளவும்.

    இத்துடன் இஞ்சித் துருவல் உப்பு, சர்க்கரை சேர்த்துக் கிளறி, ஒரு ஜாடியில் போட்டு, வெள்ளைத் துணியால் வாய்க்கட்டு கட்டி, நல்ல வெயிலில் ஒரு வாரம் வைத்து எடுக்கவும்.

    மாந்துருவல் பாகு போல் ஆனதும் தேன் சேர்த்துக் கிளறவும்.

    இப்போது சூப்பரான மாங்காய் முரப்பா ரெடி.

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • மாங்காயில் பல்வேறு ருசியான ரெசிபிகளை செய்யலாம்.
    • இன்று மாங்காய் வைத்து சட்னி செய்முறையை பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள் :

    துருவிய தேங்காய் - ஒரு கப்,

    தோல் நீக்கி வெட்டிய மாங்காய் - 4 துண்டுகள்,

    பச்சை மிளகாய் - 2,

    கடுகு - கால் டீஸ்பூன்,

    தேங்காய் எண்ணெய் - ஒரு டீஸ்பூன்,

    கறிவேப்பிலை - ஒரு ஆர்க்கு,

    உப்பு - தேவையான அளவு.

    செய்முறை:

    மாங்காய், தேங்காய், பச்சை மிளகாய், உப்பு, கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து மிக்ஸியில் அரைத்து வழித்தெடுக்கவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, கறிவேப்பிலை தாளித்து சட்னியில் ஊற்றி கலந்து பரிமாறவும்.

    இப்போது சூப்பரான தேங்காய் மாங்காய் சட்னி ரெடி.

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • மாம்பழத்தில் பல்வேறு சுவையான ரெசிபிகளை செய்யலாம்.
    • இன்று மாம்பழ சாம்பார் செய்முறையை பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள் :

    தித்திப்பும் புளிப்புமான சிறிய மாம்பழங்கள் - 2,

    துவரம்பருப்பு - 3 கரண்டி,

    அரிசி மாவு - அரை டீஸ்பூன்,

    புளி - சிறு எலுமிச்சை அளவு,

    பச்சை மிளகாய் - ஒன்று,

    சாம்பார் பொடி - 2 டீஸ்பூன்,

    பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன்,

    கறிவேப்பிலை - ஒரு ஆர்க்கு,

    கொத்தமல்லி - சிறிதளவு,

    மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்,

    கடுகு - கால் டீஸ்பூன்,

    காய்ந்த மிளகாய் - ஒன்று,

    உப்பு - தேவையான அளவு.

    செய்முறை:

    துவரம்பருப்பை நன்றாக கழுவி 1 மணிநேரம் ஊற வைத்த பின் வேக வைத்து மசித்து கொள்ளவும்..

    கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    மாம்பழத்தை துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.

    ப.மிளகாயை கீறிக்கொள்ளவும்.

    கடாயில் 2 கப் நீர் ஊற்றி அடுப்பில் வைத்து அதில் நறுக்கிய மாம்பழம், பச்சை மிளகாய், உப்பு, மஞ்சள் தூள், பெருங்காயத்தூள் சேர்த்து வேக விடவும்.

    பழத்துண்டுகள் வெந்ததும் புளியைக் கரைத்து விட்டு, கொதித்ததும் சாம்பார் பொடி சேர்க்கவும்.

    பச்சை வாசனை போனதும் வேக வைத்த பருப்பு சேர்த்து, அரிசி மாவை சிறிது தண்ணீரில் கரைத்து ஊற்றவும்.

    மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை போட்டு தாளித்து சாம்பாரில் சேர்க்கவும்.

    கடைசியாக கொத்தமல்லியைபோட்டு, சாம்பாரை கீழே இறக்கவும்.

    இப்போது சூப்பரான மாம்பழ சாம்பார் ரெடி.

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • குழந்தைகளுக்கு ஐஸ்கிரீம் என்றால் மிகவும் பிடிக்கும்.
    • இன்று எளிய முறையில் மாம்பழ ஐஸ்கிரீம் செய்முறையை பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள் :

    பெரிய மாம்பழம் - 2

    பால் - 1 கோப்பை

    வெண்ணிலா ஐஸ்கிரீம் - 1 கோப்பை

    ஜெல்லி - 2 மேஜைக் கரண்டி

    செய்முறை :

    பாலை சுண்டக் காய்ச்சி குளிர வைக்கவும்.

    மாம்பழத்தை கழுவி தோல் நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

    அதனுடன் சிறிது தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் போட்டு கூழாக அரைத்துக் கொள்ளவும்.

    குளிரவைத்த பாலுடன் ஜெல்லி சேர்த்து நன்கு அடித்துக் கலந்து, அதனையும் மாம்பழச் சாறுடன் சேர்க்கவும்.

    பால் கலந்த மாம்பழச்சாற்றை குளிர்சாதனப் பெட்டியில் சுமார் 2 மணி நேரம் வைத்து குளிர வைக்கவும்.

    பின்னர் வெளியே எடுத்து வெண்ணிலா ஐஸ்கிரீம் சேர்த்து பரிமாறவும்.

    இப்போது சூப்பரான மாம்பழ ஐஸ்கிரீம் ரெடி.

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • இந்த சீசனில் கிடைக்கும் மாங்காயில் பல்வேறு ருசியான ரெசிபிகளை செய்யலாம்.
    • பச்சை மாங்காயை வைத்து ஜூஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்

    பச்சை மாம்பழம் - 1

    இஞ்சி - சிறிய துண்டு

    சர்க்கரை - 1/2 கப்

    புதினா இலைகள் - சிறிதளவு

    சாட் மசாலா - 1/4 டீஸ்பூன்

    மிளகாய் தூள் - 1/4 டீஸ்பூன்

    ஐஸ்கட்டி - தேவையான அளவு

    தேவையான பொருட்கள் :

    செய்முறை :

    மாங்காய் தோலை சீவி விட்டு சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

    மிக்சி ஜாரில் நறுக்கிய மாங்காயை போட்டு அதனுடன் இஞ்சி, சர்க்கரை, புதினா, சாட் மசாலா, ஐஸ்கட்டி, தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்து வடிகட்டவும்.

    வடிகட்டிய ஜூஸை ஒரு கண்ணாடி கப்பில் ஊற்றிஅதன் மேல் புதினா, மிளகாய் தூள் தூவி பருகவும்.

    இப்போது சூப்பரான பச்சை மாங்காய் ஜூஸ் ரெடி.

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • தமிழகம் முழுவதும் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது.
    • இன்று வெயிலுக்கு இதமா மாம்பழ குல்ஃபி செய்வது குறித்து பார்ப்போம்.

    தேவையான பொருட்கள்

    பால் - 500 மிலி

    சர்க்கரை - 3/4 கப்

    சோள மாவு - 2 டீஸ்பூன்

    குங்குமப்பூ - 1 சிட்டிகை

    மாம்பழ கூழ் - ஒன்றரை கப்

    மாம்பழ எசன்ஸ் அல்லது ஏலக்காய் பொடி - 1/2 டீஸ்பூன்

    செய்முறை

    * நன்கு கனிந்த மாம்பழத்தின் தோலை நீக்கிவிட்டு, அதை நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும். அதை மிக்ஸி ஜாரில் போட்டு மென்மையாக கூழ் போன்று அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

    * ஒரு பௌலில் சோள மாவு, சிறிது தண்ணீர் அல்லது பால் சேர்த்து கலந்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

    * மற்றொரு பாத்திரத்தில் பாலை ஊற்றி அடுப்பில் வைத்து கொதிக்க வைக்க வேண்டும். பால் கொதிக்க ஆரம்பித்ததும், அதில் சர்க்கரையை சேர்த்து குறைவான தீயில் வைத்து 15 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும். பின் அந்த பாலில் கரைத்து வைத்துள்ள சோள மாவை சேர்த்து கிளறி நன்கு கொதிக்க வைத்து இறக்க வேண்டும்.

    * அடுத்தாக அந்த பாலில் குங்குமப்பூவை சேர்த்து கிளறி, பாலை குளிர வைக்க வேண்டும்.

    * பால் குளிர்ந்ததும், அதில் மாம்பழ கூழ், மாம்பழ எசன்ஸ் அல்லது ஏலக்காய் பொடி சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.

    * கடைசியாக குல்பி மோல்டுகள் அல்லது சிறிய அளவு டம்ளரில் இந்த கலவையை ஊற்றி ப்ரிஜ் ஃப்ரீசரில் வைக்க வேண்டும். இந்த கலவை நன்கு உறைய வேண்டும். குல்பி நன்கு உறைந்ததும், அதில் ஐஸ் குச்சிகளை வைத்து சாப்பிடலாம்.

    * அவ்வளவு தான் சிம்பிள், சுவையான மாம்பழ குல்பி வீட்டிலேயே தயார்.

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    இந்த சீசனில் கிடைக்கும் மாம்பழத்தை வைத்து அருமையான ரெசிபிகளை செய்யலாம். அந்த வகையில் இன்று மாம்பழ பாயாசம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    தித்திப்பான மாம்பழக் கூழ் - ஒரு கப்,
    சர்க்கரை - அரை கப்,
    பால் - ஒரு லிட்டர்,
    அரிசிக்குருணை - 2 டேபிள்ஸ்பூன்,
    கேசரி பவுடர் - ஒரு சிட்டிகை,
    நெய் - ஒரு டேபிள்ஸ்பூன்,
    முந்திரி, திராட்சை - தலா ஒரு டேபிள்ஸ்பூன்,
    கண்டென்ஸ்டு மில்க் - 2 டேபிள்ஸ்பூன்,
    மேங்கோ எசன்ஸ் (விரும்பினால்) - சில துளிகள்,
    ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன்.

    செய்முறை:

    முந்திரி, திராட்சையை நெய்யில் சிவக்க வறுத்து எடுக்கவும்.

    மீதமுள்ள நெய்யை விட்டு அரிசிக் குருணையைப் போட்டு லேசாக வறுத்து, அதில் பாலை ஊற்றி காய்ச்சவும்.

    அரிசி நன்றாக வெந்து கண்ணாடி போல் ஆகி பால் சிறிது வற்றியதும், கண்டென்ஸ்டு மில்க், சர்க்கரை சேர்த்துக் கிளறவும்.

    பிறகு கேசரி பவுடர், ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கிளறி, மாம்பழக் கூழையும் சேர்க்கவும்.

    எல்லாம் சேர்ந்து கொதித்ததும் கீழே இறக்கி, முந்திரி - திராட்சை, மேங்கோ எஸன்ஸ் சேர்த்துப் பரிமாறவும்.

    இப்போது சூப்பரான மாம்பழ பாயாசம் ரெடி.
    நமது உணவில் மாங்காயை அடிக்கடி சேர்த்துக் கொண்டால் மலக்குடல் புற்றுநோய் வராமல் தடுக்கலாம். தேங்காயை பச்சையாகவே மென்று சாப்பிடுவதால் நார்ச்சத்து முழுமையாக நமக்குக் கிடைக்கிறது.
    தேவையான பொருட்கள் :

    துருவிய தேங்காய் - ஒரு கப்,
    தோல் நீக்கி வெட்டிய மாங்காய் - 4 துண்டுகள்,
    பச்சை மிளகாய் (பெரியது) - ஒன்று,
    கடுகு - கால் டீஸ்பூன்,
    தேங்காய் எண்ணெய் - ஒரு டீஸ்பூன்,
    கறிவேப்பிலை - ஒரு ஆர்க்கு,
    உப்பு - தேவையான அளவு.

    செய்முறை:

    மாங்காய், தேங்காய், பச்சை மிளகாய், உப்பு, கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து மிக்ஸியில் அரைத்து வழித்தெடுக்கவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்து சட்னியில் சேர்த்து கலந்து பரிமாறவும்.

    இப்போது சூப்பரான தேங்காய் மாங்காய் சட்னி ரெடி.
    சீசனில் கிடைக்கும் மாங்காயில் பல்வேறு சுவையான ரெசிபிகளை செய்யலாம். இந்த வகையில் இன்று மாங்காய் வற்றல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    நல்ல புளிப்பான, சதைப்பற்றுள்ள மாங்காய் - 20,
    மஞ்சள்தூள் - 2 டீஸ்பூன்,
    பொடி உப்பு - 200 கிராம்.

    செய்முறை:

    மாங்காய்களைக் கழுவி துடைத்து நிழலில் காயவிடவும்.

    இதை துண்டுகள் செய்து உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து இரண்டு நாள் குலுக்கிக் கொள்ளவும்.

    மூன்றாம் நாள் உப்பு நீரை வடித்து, மாங்காயை பெரிய தட்டுகளில் போட்டு வெயிலில் காயவிடவும்.

    பிறகு, மீண்டும் அதே உப்பு நீரில் போட்டு, நீரை வடித்து காயவிடவும்.

    இப்படி ஒரு வாரம் காயவிட்டு தண்ணீர் முழுவதும் வற்றி மாங்காய் சுக்கு போல் ஆனதும், ஒரு எவர்சில்வர் டப்பா அல்லது பானையில் போட்டு வைக்கவும்.

    இது சீக்கிரம் கெட்டுப்போகாது.
    மாம்பழம் சாப்பிட்டால் மலச்சிக்கல் நீங்கும், நல்ல தூக்கம் வரும். மாம்பழம் புற்றுநோய், குடல் இறக்கம், இருதய நோய், மூலம் போன்ற நோய்களுக்கு சிறந்த மருந்து.
    தேவையான பொருட்கள்

    வேக வைத்த சாதம் - 1 கப்
    தயிர் - முக்கால் கப்
    ப.மிளகாய் - 2
    உப்பு - சுவைக்கு
    நன்கு கனிந்த மாம்பழம் - 1
    சாதம் வடித்த தண்ணீர்  - அரை கப்
    கொத்தமல்லி - சிறிதளவு

    செய்முறை

    மாம்பழத்தை துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

    ப.மிளகாயை இரண்டாக வெட்டிக்கொள்ளவும்.

    கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு மண் சட்டியில் வேக வைத்த சாதத்தை போட்டு அதனுடன் தயிர், உப்பு, ப.மிளகாய், நறுக்கி மாம்பழம் சேர்த்து கைகளால் நன்றாக கலக்கவும்.

    அனைத்தும் நன்றாக ஒன்று சேர்ந்ததும் சூடான சாதம் வடித்த தண்ணீர் சேர்த்து நன்றாக கலக்கவும்.

    கடைசியாக கொத்தமல்லி தழை சேர்த்து பரிமாறவும்.
    இப்போது மாங்காய் சீசன் என்பதால் மாங்காய் ஜூஸ் போட்டு குடிப்பதன் மூலம் உடல் உஷ்ணத்தை விரட்ட முடியும்.
    கோடை வெயில் காலம் முடிவதற்கு இன்னும் 4 நாட்களே உள்ளன. என்றாலும் வெயிலின் தாக்கம் மேலும் சில வாரங்களுக்கு நீடிக்க வாய்ப்புள்ளது. கோடையில் வெளியில் அலைந்து தொழில் செய்பவர்களுக்கு உடல் உஷ்ணம் அதிகரித்து நோய்களை கொண்டு வந்து விடும்.

    சிலருக்கு வெப்பத்தை தாங்க முடியாமல் ‘ஸ்ட்ரோக்’ வந்துவிடுவது உண்டு. இத்தகைய அபாயத்தில் இருந்து தப்ப பல வழிகள் உள்ளன. இப்போது மாங்காய் சீசன் என்பதால் மாங்காய் ஜூஸ் போட்டு குடிப்பதன் மூலம் உடல் உஷ்ணத்தை விரட்ட முடியும்.

    தேவையான பொருட்கள்

    மாங்காய் - 1
    கருப்பட்டி - சுவைக்கு
    எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்
    சுக்கு தூள் - ஒரு சிட்டிகை

    செய்முறை

    மாங்காயை தோலுடன் துருவிக் கொள்ள வேண்டும்.

    கருப்பட்டியை சிறிது கரைத்து அதில் மாங்காய் துருவல், எலுமிச்சை சாறு, சுக்கு பொடி சேர்த்து கலக்க வேண்டும்.

    இது தான் மாங்காய் ஜூஸ்.

    மதியம் வெயிலில் சென்று விட்டு வருபவர்கள் வீட்டுக்கு திரும்பியதும். 30 நிமிடம் கழித்து இதை குடிக்கலாம். உடல் சூடு மாயமாய் மறைந்து விடும். ஆனால்இரவு நேரத்தில் இந்த ஜூசை குடிக்கக் கூடாது.
    ×