search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mangaluru Blast"

    • மங்களூரு டவுன் நாகுரி பகுதியில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஆட்டோவில் குக்கர் வெடிகுண்டு வெடித்தது.
    • ஷாரிக் வாயை திறக்கும் பட்சத்தில் குண்டுவெடிப்பில் தொடர்புடைய மேலும் சிலர் சிக்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    பெங்களூரு:

    கர்நாடகத்தின் தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு டவுன் நாகுரி பகுதியில் கடந்த ஆண்டு (2022) நவம்பர் மாதம் 19-ந் தேதி ஆட்டோவில் குக்கர் வெடிகுண்டு வெடித்தது. இந்த சம்பவத்தில் அந்த குக்கர் குண்டை ஆட்டோவில் கொண்டு சென்ற பயங்கரவாதி முகமது ஷாரிக் என்கிற ஷாரிக்(வயது 24) பலத்த தீக்காயம் அடைந்தார்.

    முதலில் அவர் மங்களூருவில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். பின்னர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 17-ந் தேதி மேல்சிகிச்சைக்காக மங்களூருவில் இருந்து பெங்களூருவுக்கு அவர் மாற்றப்பட்டார். இந்தநிலையில், 3 மாதங்களாக விக்டோரியா ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த ஷாரிக் நேற்று மதியம் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இதை தொடர்ந்து, பயங்கரவாதி ஷாரிக்கை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்தனர். தொடர்ந்து பெங்களூருவில் உள்ள என்.ஐ.ஏ. சிறப்பு கோர்ட்டில் ஷாரிக்கை ஆஜர்படுத்திய அதிகாரிகள், அவரை 10 நாட்கள் காவலில் எடுத்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஷாரிக் வாயை திறக்கும் பட்சத்தில் குண்டுவெடிப்பில் தொடர்புடைய மேலும் சிலர் சிக்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே மங்களூரு குக்கர் குண்டுவெடிப்புக்கு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு பொறுப்பு ஏற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • படுகாயம் அடைந்த ஷாரிக் பெங்களூருவில் உள்ள ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
    • மங்களூரு குக்கர் குண்டுவெடிப்பு, கோவை கார் வெடிப்பு சம்பவங்களுக்கு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்று உள்ளது.

    பெங்களூரு:

    தமிழ்நாடு கோவையில் கடந்த ஆண்டு (2022) அக்டோபர் 23-ந்தேதி இரவு கார் வெடிப்பு சம்பவம் நடந்தது. இதில் பயங்கரவாதி ஜமேஷா முபின் என்பவர் காரில் உடல் கருகி உயிரிழந்தார். அவரது வீட்டில் இருந்து வெடிப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக மேலும் சில பயங்கரவாதிகளை தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) அதிகாரிகள் கைது செய்தனர்.

    இந்த சம்பவம் நடந்து ஒரு மாதத்திற்குள் அதாவது நவம்பர் மாதம் 19-ந்தேதி கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு டவுன் நாகுரி பகுதியில் ஆட்டோவில் கொண்டு சென்ற குக்கர் குண்டு வெடித்து சிதறியது. இதில் பயங்கரவாதி ஷாரிக், ஆட்டோ டிரைவர் புருஷோத்தம் ஆகிய 2 பேர் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்த ஷாரிக் பெங்களூருவில் உள்ள ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

    இந்த சம்பவங்கள் தொடர்பாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த விசாரணையில், இரு குண்டுவெடிப்பு சம்பவங்கள் பற்றியும் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. மேலும் கார் வெடிப்பில் உயிரிழந்த ஜமேஷா முபினும், மங்களூரு பயங்கரவாதி ஷாரிக்கும் கோவையில் சந்தித்து பேசியதாகவும் கூறப்பட்டது.

    ஷாரிக் தென்னிந்தியாவில் பயங்கரவாத அமைப்பை நிறுவி, நாசவேலையில் ஈடுபட சதி திட்டம் தீட்டியதும், கேரளாவில் தங்கி இருந்து பார்சல் மூலம் வெடிபொருட்களை வாங்கியதும், அவருக்கு மத்திய மற்றும் தெற்காசியாவில் இருந்து டார்க்நெட் இணையதளம் மூலம் பணம் அனுப்பி வைக்கப்பட்டதும் என்.ஐ.ஏ. விசாரணையில் தெரியவந்தது.

    இந்த நிலையில் மங்களூரு குக்கர் குண்டுவெடிப்பு, கோவை கார் வெடிப்பு சம்பவங்களுக்கு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்று உள்ளது. இதுதொடர்பாக அந்த அமைப்பு இஸ்லாமிய தனியார் ஊடகம் மூலமாக 68 பக்கங்கள் கொண்ட அறிக்கையையும் வெளியிட்டுள்ளது.

    அந்த அறிக்கையில், அக்டோபர் மாதம் 23-ந்தேதி கோவையில் நடந்த கார் வெடிப்பு, நவம்பர் மாதம் 19-ந்தேதி மங்களூருவில் நடந்த குக்கர் குண்டு வெடிப்பு சம்பவங்களுக்கு தங்கள் அமைப்பு பொறுப்பு ஏற்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

    மேலும் 'தமிழ்நாடு கோவை, கர்நாடகத்தின் மங்களூருவில் எங்கள் சகோதரர்கள் எங்கள் மதத்தின் மரியாதைக்காக குண்டுவெடிப்பு சம்பவத்தை அரங்கேற்றினர். பா.ஜனதா மற்றும் இந்திய ராணுவத்துக்கு எதிராக எங்களுக்கு விரோதம் உள்ளது. அவர்களுக்கு எதிராக தென்னிந்தியாவில் எங்களின் முஜாகிதீன்கள் போரை நிகழ்த்தினர். கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் எங்கள் முஜாகிதீன்களின் செயல்பாடு அதிகரித்துள்ளது' என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    இதையடுத்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

    • அமலாக்கத்துறையினர் இன்று கிம்மனே ரத்னாகர் அலுவலகத்தில் அதிரடி சோதனை நடத்தினர்.
    • ஷாரிக் குடும்பத்தினருடன் தனக்கு எந்த தொடர்பும் இல்லை என்று கிம்மனே ரத்னாகர் மறுத்துள்ளார்.

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு டவுன் நாகுரி பகுதியில் கடந்த நவம்பர் 19-ந்தேதி ஆட்டோவில் குக்கர் குண்டு வெடித்தது. இதில், பயங்கரவாதி ஷாரிக் மற்றும் ஆட்டோ டிரைவர் புருஷோத்தம் ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர். நாசவேலையில் ஈடுபட குக்கர் குண்டை ஷாரிக் ஆட்டோவில் எடுத்து சென்றபோது அது வெடித்தது தெரியவந்தது. இதுதொடர்பாக தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஷாரிக்கிடம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றுள்ளனர். அவர் அளித்த தகவலின்படி பல்வேறு இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தி வருகிறார்கள். தற்போது ஷாரிக் பெங்களூரு விக்டோரியா ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    மங்களூருவில் காங்கிரஸ் கட்சியின் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தை ஷாரிக்கின் குடும்பத்தாரிடம் இருந்து அந்த பகுதியை சேர்ந்த முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ. கிம்மனே ரத்னாகர் ரூ.10 லட்சத்துக்கு குத்தகைக்கு எடுத்து கொடுத்துள்ளார். இந்த குத்தகை காலம் வருகிற ஜூன் மாதத்துடன் முடிவடைகிறது.

    இது தொடர்பான தகவல்களின்படி அமலாக்கத்துறையினர் இன்று கிம்மனே ரத்னாகர் அலுவலகத்தில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அலுவலகம் குத்தகை தொடர்பான விவரங்கள் குறித்து அதிகாரிகள் கேட்டதோடு அது தொடர்பான ஆவணங்களை சரி பார்த்ததாக தெரிகிறது.

    இதனிடையே ஷாரிக் குடும்பத்தினருடன் தனக்கு எந்த தொடர்பும் இல்லை என்று கிம்மனே ரத்னாகர் மறுத்துள்ளார். காங்கிரஸ் அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருவது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • நாசவேலையில் ஈடுபட குக்கர் குண்டை ஷாரிக் ஆட்டோவில் எடுத்து சென்றபோது அது வெடித்தது தெரியவந்தது.
    • ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பிடம் இருந்து கிரிப்டோ கரன்சி மூலம் பணம் பெற்று வந்ததும் தெரியவந்தது.

    பெங்களூர்:

    கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு டவுன் நாகுரி பகுதியில் கடந்த நவம்பர் 19-ந்தேதி ஆட்டோவில் குக்கர் குண்டு வெடித்தது. இதில், பயங்கரவாதி ஷாரிக் மற்றும் ஆட்டோ டிரைவர் புருஷோத்தம் ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர். நாசவேலையில் ஈடுபட குக்கர் குண்டை ஷாரிக் ஆட்டோவில் எடுத்து சென்றபோது அது வெடித்தது தெரியவந்தது. இதுதொடர்பாக தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஷாரிக்கிடம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றுள்ளனர். அவர் அளித்த வாக்குமூலத்தில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. மேலும் ஷாரிக் அளித்த தகவலின்படி பல்வேறு இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தி வருகிறார்கள். தற்போது ஷாரிக் பெங்களூர் விக்டோரியா ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இந்த நிலையில் ஷாரிக்கின் நண்பர்கள் மாஸ் முனீர், சையது யாசின் ஆகிய 2 பேரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கைது செய்திருந்தனர். இவர்கள் மங்களூருவில் உள்ள என்ஜினீயரிங் கல்லூரியில் விடுதியில் தங்கி படித்ததும், மங்களூரு குக்கர் குண்டு வெடிப்பு வழக்கில் அந்த கல்லூரியில் படித்து வரும் மாணவர் ஒருவருக்கும் தொடர்பு இருப்பதும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணையில் தெரியவந்தது.

    இதையடுத்து 7 பேர் கொண்ட என்.ஐ.ஏ. அதிகாரிகள் குழுவினர் மங்களூரு என்ஜினீயரிங் கல்லூரியில் சோதனை நடத்தினர். இதையடுத்து ரிகான் ஷேக் (வயது 23) என்ற மாணவரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்து பெங்களூருவுக்கு விசாரணைக்காக அழைத்து சென்றனர். அவருக்கும், மங்களூரு குண்டு வெடிப்பில் தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

    இதனிடையே சிவமொக்கா துங்கா ஆற்றங்கரையோரத்தில் குண்டுவெடிப்பு ஒத்திகையில் ஈடுபட்டது தொடர்பாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் சிவமொக்கா, தாவணகெரே, உடுப்பி, பெங்களூரு உள்பட 6 இடங்களில் நேற்று முன்தினம் சோதனை நடத்தினர். இதில், ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்த உடுப்பி பிரம்மாவர் அருகே வரம்பள்ளியை சேர்ந்த ரோஷன் தாஜூதீன் ஷேக் (23), சிவமொக்கா திப்பு சுல்தான் நகரை சேர்ந்த ஹுசர் பர்ஹான் (25) ஆகிய 2 பேரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

    இவர்கள், ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பிடம் இருந்து கிரிப்டோ கரன்சி மூலம் பணம் பெற்று வந்ததும் தெரியவந்தது. கைதாகி சிறையில் உள்ள மாஸ் முனீர் கொடுத்த தகவலின்பேரில் இவர்கள் 2 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் ரோஷன் தாஜூதீன் ஷேக், மாஸ் முனீரின் நெருங்கிய நண்பர் ஆவார். கைதான 2 பேரிடமும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • ஷாரிக்கின் 2 கைகள், நெஞ்சு பகுதியில் பலத்த தீக்காயம் ஏற்பட்டு உள்ளது. அந்த தீக்காயம் இன்னும் ஆறவில்லை.
    • ஷாரிக்கை காவலில் எடுத்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்த உள்ளனர்.

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலம் மங்களூரு நாகுரி பகுதியில் கடந்த மாதம் (நவம்பர்) 19-ந் தேதி ஆட்டோவில் குக்கர் குண்டு வெடித்தது. இந்த சம்பவத்தில் ஆட்டோவில் சென்ற முகமது ஷாரிக், ஆட்டோ டிரைவர் புருஷோத்தம் ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர். விசாரணையில் குண்டு வெடிப்பு சதி திட்டத்துடன் அதை ஆட்டோவில் முகமது ஷாரிக் எடுத்து சென்றதும், அவருக்கு பயங்கரவாதிகளுடன் தொடர்பு இருந்ததும் தெரியவந்தது.

    இது தொடர்பாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். குண்டுவெடிப்பு சம்பவத்தில் ஷாரிக்கிற்கு பலத்த தீக்காயம் ஏற்பட்டு இருந்தது. இதனால் அவருக்கு மங்களூருவில் உள்ள பாதர் முல்லர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் ஷாரிக்கின் தீக்காயம் 80 சதவீதம் குணமானது.

    இதை தொடர்ந்து மங்களூருவில் இருந்து பெங்களூருவுக்கு அழைத்து வந்து ஷாரிக்கிடம் விசாரணை நடத்த என்.ஐ.ஏ. அதிகாரிகள் முடிவு செய்தனர். இதையடுத்து டாக்டர்கள் அனுமதியின்பேரில் மங்களூருவில் இருந்து அழைத்து வரப்பட்ட ஷாரிக்கிற்கு பெங்களூரு விக்டோரியா ஆஸ்பத்திரியில் வைத்து தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் சிகிச்சை பெற்று வரும் வார்டை சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு உள்ளது.

    இந்த நிலையில் ஷாரிக்கின் 2 கைகள், நெஞ்சு பகுதியில் பலத்த தீக்காயம் ஏற்பட்டு உள்ளது. அந்த தீக்காயம் இன்னும் ஆறவில்லை. இதனை சரிசெய்ய டாக்டர்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதையடுத்து கைகள், மார்பு பகுதியில் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்ய டாக்டர்கள் முடிவு செய்தனர். அதன்படி இன்று (செவ்வாய்க்கிழமை) ஷாரிக்கிற்கு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

    ஓரிரு நாட்களில் ஷாரிக் டிஸ்சார்ஜ் செய்யப்பட உள்ளார். அதன்பிறகு அவரை காவலில் எடுத்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்த உள்ளனர்.

    • உமர் செரீப் அங்குள்ள குழந்தைகளுக்கு தற்காப்பு கலைகளை சொல்லி கொடுக்க இந்த ஆயுதங்களை வைத்திருந்ததாக தெரிவித்தார்.
    • மதுரையில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் நடத்திய சோதனையில் பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடைய 7 பேர் கைது செய்யப்பட்டனர்.

    மதுரை:

    மதுரை நெல்பேட்டை சுங்கம் பள்ளிவாசல், கைமா ராவுத்தர் தெருவை சேர்ந்தவர் உமர் ஷெரீப் (வயது 42). ஆட்டோ டிரைவர்.

    இவரது வீட்டில் நேற்று அதிகாலை தேசிய பாதுகாப்பு முகமை (என்.ஐ.ஏ.) போலீஸ் இன்ஸ்பெக்டர் அருள் மகேஷ் தலைமையில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த வாள், வேல் கம்பு, கத்தி, நிஞ்சா, சுருள் கத்தி, வீல் செயின், கேடயம், கட்டார் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.

    உமர் ஷெரீப்பின் வீட்டுக்குள் இந்த ஆயுதங்கள் எப்படி வந்தது? ஆயுதங்களை பதுக்கி வைத்திருந்தது ஏன்? என்று அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

    அப்போது உமர் செரீப் அங்குள்ள குழந்தைகளுக்கு தற்காப்பு கலைகளை சொல்லி கொடுக்க இந்த ஆயுதங்களை வைத்திருந்ததாக தெரிவித்தார். இவரது பதில், என்.ஐ.ஏ. அதிகாரிகளுக்கு திருப்தி அளிக்கவில்லை.

    மேலும் உமர் செரீப்பின் மனைவி மற்றும் குடும்பத்தினரின் வங்கி கணக்குகள், பண பரிவர்த்தனைகள் தொடர்பாக சுமார் 4 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. அவரது வீட்டில் கைப்பற்றப்பட்ட பல்வேறு ஆவணங்கள் மற்றும் செல்போன்கள் புலனாய்வு செய்யப்பட்டது. அதில் சில ஆவணங்களை எடுத்துக்கொண்டு உமர் செரீப்பை என்.ஐ.ஏ. அதிகாரிகள் சென்னைக்கு அழைத்து சென்றனர்.

    பயங்கரவாத அமைப்புகளுடன் இவருக்கு எந்த வகையில் தொடர்பு உள்ளது என்பது குறித்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் ரகசிய விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சமீபத்தில் மதுரையில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் நடத்திய சோதனையில் பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடைய 7 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களுடன் உமர் ஷெரீப்புக்கு தொடர்பு உள்ளதா? என்பது குறித்தும், மங்களூரு குக்கர் குண்டு வெடிப்பு பயங்கரவாதி ஷாருக்குடன் தொடர்பு உள்ளதா? என்பது குறித்தும் உமர்செரீப்பிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    • டார்க் வெப்பில் ஷாரிக்கின் கணக்கில் மில்லியன் கணக்கான டாலர்கள் டெபாசிட் செய்யப்பட்டுள்ளன.
    • மைசூரு மக்களின் 100-க்கும் மேற்பட்ட கணக்குகள் மாற்றப்பட்டு, 40-க்கும் மேற்பட்டோரிடம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

    பெங்களூரு:

    மங்களூரு குக்கர் வெடிகுண்டு தாக்குதலில் ஈடுபட்ட சந்தேக நபரான முகமது ஷாரிக்கிடம் என்.ஐ.ஏ. அதிகாரிகளுக்கு வெடிகுண்டு தகவல் கிடைத்துள்ளது. அவரது பணத்தின் ஆதாரம் குறித்து ஆய்வு செய்த அதிகாரிகள் அதிர்ச்சியடைந்து, அதிக பணம் டாலர்கள் மூலம் கணக்கில் வருவதை பதிவு செய்தனர்.

    தீவிரவாதி முகமது ஷாரிக்கின் வன்முறைச் செயல்கள் ஒவ்வொன்றாக வெளிச்சத்துக்கு வருகின்றன. அவருக்கு வெளிநாடுகளில் இருந்து டாலர்கள் மூலம் நிதியுதவி அளித்து ஒத்துழைத்தவர்கள் குறித்து என்.ஐ.ஏ. அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது.

    மங்களூருவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஷாரிக்கிடம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர், அப்போது அவரது வங்கி கணக்கில் பணம் பரிவர்த்தனை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

    டார்க் வெப்பில் உள்ள அவரது கணக்கில் பணம் டாலர்களில் இருந்ததற்கான பதிவு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது, இதுகுறித்து அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

    டார்க் வெப்பில் ஷாரிக்கின் கணக்கில் மில்லியன் கணக்கான டாலர்கள் டெபாசிட் செய்யப்பட்டுள்ளன. பின்னர் அவர் அதை இந்திய ரூபாய்க்கு மாற்றியுள்ளார். அந்த பணத்தை தனக்கு தெரிந்தவரின் கணக்கில் போட்டு பயன்படுத்தி வந்தார். மைசூருவில் இந்து என்று கூறி பலரை அறிமுகம் செய்து அவர்களின் கணக்கில் பணத்தை மாற்றியுள்ளார்.

    மைசூரு மக்களின் 100-க்கும் மேற்பட்ட கணக்குகள் மாற்றப்பட்டு, 40-க்கும் மேற்பட்டோரிடம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இவரின் இந்தச் செயலை அறியாத ஏராளமானோர் இவரின் நட்பை நம்பி அக்கவுண்ட்டில் பணத்தை போட்டு ஷாரிக் குறிப்பிட்ட பல்வேறு கணக்குகளுக்கு மாற்றியுள்ளனர்.

    மைசூரு மட்டுமின்றி அண்டை மாநிலமான தமிழகம், கேரளா, மத்திய பிரதேசம், ஜார்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களிலும் அவரது பணப்பரிமாற்றம் நடந்துள்ளது. எனவே, இந்த மாநிலங்கள் அனைத்திலும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

    • மதுரையில் ஷாரிக் மதுரை நேதாஜி ரோட்டில் தங்கியிருந்தது செல்போன் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.
    • ஷாரிக் எங்கு தங்கியிருந்தான்? என்பது இன்னும் ரகசியமாகவே உள்ளது. இது உளவுத்துறைக்கு பெரிய ஏமாற்றத்தை அளித்துள்ளது.

    மதுரை:

    கர்நாடக மாநிலம் மங்களூருவில் கடந்த நவம்பர் 19-ந்தேதி குக்கர் குண்டு வெடித்தது. இதில் தொடர்புடைய ஷாரிக் என்பவனை போலீசார் கைது செய்தனர்.

    இதுதொடர்பாக தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர். இதில் ஷாரிக் தமிழகத்தில் கோவை, மதுரை நாகர்கோவில் ஆகிய இடங்களுக்கும் மற்றும் கேரளாவுக்கும் சென்று திரும்பியது தெரிய வந்துள்ளது.

    இதைத்தொடர்ந்து தனிப்படை போலீசார் ஷாரிக் சென்ற இடங்களுக்கு நேரடியாக சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள். இதில் அவன் கோவை காந்திபுரத்தில் உள்ள ஒரு விடுதியில் கவுரி அருண்குமார் என்ற பெயரில் நவம்பர் 3-ந் தேதி முதல் 6-ந்தேதி வரை 4 நாட்கள் தங்கி இருந்துள்ளான்.

    அதன் பின்னர் அவன் மதுரைக்கு எக்ஸ்பிரஸ் ரெயிலின் பொதுப்பெட்டியில் வந்துள்ளான். இதன்பிறகு நாகர்கோவிலுக்கு சென்ற ஷாரிக் அங்கு மீனாட்சிபுரம் பகுதியில் உள்ள ஒரு விடுதியில் 'பிரேம்ராஜ்' என்ற பெயரில் 9-ந் தேதி முதல் 12-ந் தேதி இரவு வரை 4 நாட்கள் தங்கி இருந்துள்ளான். இதுவும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

    ஆனால் ஷாரிக் மதுரை வந்து எங்கு தங்கினான்? என்பது இன்று கண்டுபிடிக்கப்படவில்லை. அவன் பதுங்கியிருந்த இடம் மர்மமாக உள்ளது. அதுபற்றி தெரியாத அளவுக்கு அவனுக்கு ஏற்பாடுகள் செய்து கொடுத்துள்ளனர்.

    அவனுக்கு அடைக்கலம் கொடுத்த நபர்கள் யார்? யார்? என்பதும் தெரியவில்லை. இதனை கண்டு பிடிக்க முடியாமல் திணறி வருகின்றனர். போலீசார் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு மர்மமான இடத்தில் ஷாரிக்கை தங்க வைத்துள்ளனர்.

    இந்த நிலையில் மதுரையில் ஷாரிக் மதுரை நேதாஜி ரோட்டில் தங்கியிருந்தது செல்போன் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. இங்கு அவன் நவம்பர் 6-ந் தேதி நள்ளிரவு வந்துள்ளான். அவன் 8-ந் தேதி மதியம் வரை தங்கியிருந்து உள்ளான். இருந்தபோதிலும் ஷாரிக் எங்கு தங்கியிருந்தான்? என்பது இன்னும் ரகசியமாகவே உள்ளது. இது உளவுத்துறைக்கு பெரிய ஏமாற்றத்தை அளித்துள்ளது.

    பெங்களூரு குண்டு வெடிப்பு வழக்கு தற்போது தேசிய பாதுகாப்பு முகமையிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. இந்தநிலையில் மத்திய உளவுத்துறை 'மதுரைக்கு வந்து சென்ற ஷாரிக் போலீசாரால் எளிதில் அணுக முடியாத இடத்தில் தங்கி இருந்துள்ளான். இந்த மர்ம முடிச்சை அவிழ்க்க முடியவில்லை. மதுரையில் தங்கியிருந்த ஷாரிக் பற்றி இன்னும் முழுமையாக அறியமுடியவில்லை. இதில் உண்மையை கண்டுபிடிப்பதில் உளவுத்துறை அதிகாரிகள் முழு முயற்சி மேற்கொண்டுள்ளனர்.

    • நாகர்கோவிலில் ஒரு பெண்ணின் செல்போன் எண்ணுக்கும் ஷாரிக் பேசி உள்ளான்
    • நாகர்கோவில் விடுதியில் தங்கியிருந்தபோது ஷாரிக், கன்னியாகுமரி மற்றும் சுசீந்திரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வந்தது ஏன்? என்பது தொடர்பாக அந்தப் பகுதிகளுக்கும் சென்று விசாரித்தனர்.

    நாகர்கோவில்:

    கர்நாடகா மாநிலம் மங்களூரூ குக்கர் வெடிகுண்டு வெடிப்பு பயங்கரவாதி ஷாரிக் என்ற முகமது ஷாரிக், ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவனைப் பற்றி போலீசார் பல்வேறு தகவல்களை சேகரித்து வருகின்றனர்.

    குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு முன்பு ஷாரிக் தமிழகம் வந்திருப்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. கோவை, மதுரை மற்றும் நாகர்கோவிலில் அறை எடுத்து தங்கிய அவன், கேரளாவுக்கும் சென்று உள்ளான்.

    பிரேம்ராஜ் என்ற பெயரில் போலி முகவரி கொடுத்து அவன் தங்கி உள்ளான். மேலும் நாகர்கோவிலில் ஒரு பெண்ணின் செல்போன் எண்ணுக்கும் ஷாரிக் பேசி உள்ளான். எனவே அவன் நாடு முழுவதும் சதி செயலுக்கு திட்டமிட்டிருக்கலாம் என மங்களூரூ போலீசார் கருதினர்.

    இது தொடர்பாக கோவை, மதுரையில் விசாரணை நடத்திய அவர்கள், நேற்று முன்தினம் நாகர்கோவில் வந்தனர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத்தை சந்தித்து பேசிய பின்னர், மாவட்ட போலீசாருடன் இணைந்து தங்கள் விசாரணையை தொடங்கினர்.

    நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையம் அருகே ஷாரிக் தங்கிய விடுதிக்குச் சென்ற போலீசார், அவன் எப்போது வந்து தங்கினான்? எத்தனை நாட்கள் தங்கி இருந்தான், அப்போது அவனை சந்திக்க வந்தது யார்? என்பது தொடர்பாக, விடுதி மேலாளர் மற்றும் ஊழியர்களிடம் விசாரணை நடத்தினர்.

    நாகர்கோவிலில் ஷாரிக்குடன் போனில் பேசியதாக ஏற்கனவே குமரி மாவட்ட போலீசார் விசாரணை நடத்திய அசாம் வாலிபரிடமும் மங்களூரூ போலீசார் விசாரணை நடத்தினர். நாகர்கோவில் விடுதியில் தங்கியிருந்தபோது ஷாரிக், கன்னியாகுமரி மற்றும் சுசீந்திரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வந்தது ஏன்? என்பது தொடர்பாக அந்தப் பகுதிகளுக்கும் சென்று விசாரித்தனர்.

    நேற்று முன்தினம் பகல் 11 மணிக்கு விசாரணை தொடங்கிய அவர்கள், நேற்று பகல் 11 மணி வரை குமரி மாவட்டத்தில் மொத்தம் 24 மணி நேரம் விசாரணை செய்துள்ளனர். அதன்பின்னர் அவர்கள், கேரள மாநிலம் புறப்பட்டுச் சென்றனர்.

    • மங்களூருவில் 3 கோவில்கள் உள்பட 6 இடங்களில் பயங்கரவாத சம்பவங்களை அரங்கேற்ற ஷாரிக் சதி திட்டம் தீட்டியது தெரியவந்தது.
    • என்.ஐ.ஏ. அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து, ஷாரிக்கை முதல் குற்றவாளியாக சேர்த்துள்ளனர்.

    பெங்களூரு:

    மங்களூரு பகுதியில் கடந்த 19-ந்தேதி ஆட்டோவில் குக்கர் குண்டு வெடித்ததில் ஆட்டோ டிரைவர் புருஷோத்தம் மற்றும் பயங்கரவாதி ஷாரிக் ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர். இதில் ஷாரிக் 45 சதவீத தீக்காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இந்த நிலையில் ஷாரிக்கின் செல்போனை ஆய்வு செய்ததில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

    அதாவது மங்களூருவில் 3 கோவில்கள் உள்பட 6 இடங்களில் பயங்கரவாத சம்பவங்களை அரங்கேற்ற ஷாரிக் சதி திட்டம் தீட்டியது தெரியவந்தது. மேலும் தென்னிந்தியாவில் பயங்கரவாத அமைப்பை நிறுவ திட்டமிட்டதும் அம்பலமானது. கோவை, குமரி, கேரள மாநிலம் கொச்சி ஆகிய பகுதிகளுக்கும் ஷாரிக் சென்று வந்தார். இதனால் அங்கும் கர்நாடக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    அங்கு ஷாரிக் யார், யாருடன் தொடர்பில் இருந்தார் என்பது குறித்தும் விசாரித்து வருகிறார்கள். ஷாரிக் செல்போனில் உள்ள எண்ணுக்கு தொடர்பு கொண்டாலும் அவை சுவிட்ச்-ஆப் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வருகிறது.

    இந்த நிலையில் கர்நாடக அரசின் பரிந்துரையின் பேரில் மத்திய அரசு, மங்களூரு குண்டுவெடிப்பு வழக்கை தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) வசம் ஒப்படைத்துள்ளது.

    இதுதொடர்பாக நேற்று முன்தினம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து, ஷாரிக்கை முதல் குற்றவாளியாக சேர்த்துள்ளனர்.

    இந்த நிலையில் ஷாரிக்கின் செல்போனை ஆய்வு செய்ததில் மற்றொரு திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது. அதாவது, பயங்கரவாதி ஷாரிக் கடந்த மாதம் (அக்டோபர்) 11-ந்தேதி உடுப்பியில் உள்ள புகழ் பெற்ற கிருஷ்ணன் கோவிலுக்கு சென்றது தெரியவந்துள்ளது. மேலும் அவர் கிருஷ்ணன் கோவிலின் ரத வீதியில் சுற்றித்திரிந்ததும் தெரியவந்தது.

    அங்கு வைத்து அவரது செல்போனை பெண் ஒருவர் வாங்கி பேசி உள்ளார். அதன்மூலம் ஷாரிக் உடுப்பி கிருஷ்ணன் கோவிலுக்கு வந்தது உறுதி செய்யப்பட்டது. மேலும் ரத வீதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள். மேலும் ஷாரிக்கிடம் செல்போன் வாங்கி பேசிய பெண் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

    உடுப்பி கிருஷ்ணன் கோவிலிலும் நாசவேலையில் ஈடுபட ஷாரிக் சதி திட்டம் தீட்டினாரா? என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். ஷாரிக் பற்றி தினந்தோறும் புதிய புதிய தகவல்கள் வெளியாகி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு மிக அருகில் ஷாரிக் 2 நாட்கள் தங்கி இருந்து உள்ளான்.
    • குண்டு வெடிப்பு பின்னணியில் உள்ளவர்களை கண்டறிந்து அவர்களையும் வழக்கில் சேர்க்க என்.ஐ.ஏ. திட்டமிட்டு உள்ளது.

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலம் மங்களூருவில் கடந்த 19-ந் தேதி குக்கர் குண்டு வெடிப்பு தாக்குதல் நடந்தது. இதுதொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு மூளையாக செயல்பட்டது சிவமொக்கா மாவட்டம் தீர்த்தஹள்ளியை சேர்ந்த ஷாரிக் (வயது 22) என்பது தெரியவந்தது.

    குண்டு வெடிப்பில் படுகாயம் அடைந்த ஷாரிக் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

    இந்த நிலையில் போலீசார் மைசூரில் உள்ள ஷாரிக் வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கு ஒரு டைரி சிக்கியது. அதில் தீவிரவாதி ஷாரிக் தமிழகத்தில் கோவை, மதுரை, நாகர்கோவில் ஆகிய நகரங்களுக்கு வந்து சென்ற விவரம் இருந்தது.

    இதனை தொடர்ந்து தனிப்படை போலீசார் நவீன சாதனங்கள் உதவியுடன், ஷாரிக் செல்போன் நம்பரை ஆய்வுக்கு உட்படுத்தினார்கள். இதில் அவர் மதுரை நேதாஜி ரோட்டில் உள்ள ஒரு ஓட்டலில் நவம்பர் முதல் வாரம் 2 நாட்கள் தங்கி இருந்தது தெரியவந்தது.

    ஷாரிக் மதுரைக்கு ஏன் வந்தார்? அவர் 2 நாட்கள் தங்கி இருக்க வேண்டிய அவசியம் என்ன? என்பது தொடர்பாக விசாரணை நடத்த மங்களூரு தனிப்படை போலீசார் முடிவு செய்தனர்.

    அதன்பேரில் இன்ஸ்பெக்டர் நிரஞ்சன்குமார் தலைமையில் 10 பேர் அடங்கிய தனிப்படை போலீசார் நேற்று மதியம் மதுரைக்கு வந்தனர். அவர்கள் மதுரை நேதாஜி ரோடு, டவுன்ஹால் ரோடு, கட்ராபாளையம் ஆகிய பகுதிகளை உள்ளடக்கியது. இங்கு 30-க்கும் மேற்பட்ட ஓட்டல்கள் உள்ளன.

    தனிப்படை போலீசார் 2 குழுக்களாக பிரிந்து, மதுரை நேதாஜி ரோட்டில் உள்ள ஓட்டல்கள், தங்கும் விடுதி மற்றும் உணவகங்களில் அதிரடி விசாரணை நடத்தினார்கள். சூர்யா நகரில் உள்ள ஓட்டல்களிலும் சோதனை நடத்தினர். இதன் ஒரு பகுதியாக ஓட்டல்களில் உள்ள வருகை பதிவேடு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. அப்போது சந்தேகத்துக்கிடமான சிலரின் ஆதார் பதிவுகள் உண்மைதானா? என்று அதிநவீன கருவிகள் மூலம் உறுதி செய்யப்பட்டது.

    மேலும் தனிப்படை போலீசார் ஓட்டலுக்கு அருகில் உள்ள ரெஸ்டாரண்டுகளிலும் விசாரணை நடத்தினர். அங்கு பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த காட்சிகளை ஆய்வுக்கு உட்படுத்தினர். ஓட்டல் அருகில் உள்ள ஆட்டோ நிறுத்தங்களில் டிரைவர்களிடமும் சந்தேக நபர்கள் நடமாட்டம் குறித்து விசாரணை நடத்தினர்.

    மதுரையில் தனிப்படை போலீசார் 4 மணி நேரம் அதிரடி விசாரணை நடத்தினர். பின்னர் அங்கிருந்து நாகர்கோவில் புறப்பட்டு சென்றனர்.

    மதுரையில் போலீசாரின் விசாரணையின்போது லோக்கல் போலீசார் மட்டுமின்றி மத்திய புலனாய்வு அதிகாரிகளும் உடனிருந்தனர்.

    ஷாரிக் ஏற்கனவே போலி ஆவணங்கள் மூலம் பிரேம்ராஜ் என்ற பெயரில் ஆதார் கார்டு பெற்றுள்ளார். அவற்றை பயன்படுத்தி மதுரை ஓட்டலில் தங்கி இருந்தாரா? என்பது தொடர்பாக விசாரணை நடத்தி உள்ளனர்.

    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு மிக அருகில் ஷாரிக் 2 நாட்கள் தங்கி இருந்து உள்ளான். எனவே அவன் எந்த நோக்கத்துக்காக மதுரை வந்து இருந்தான்? என்பது பற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி உள்ளனர்.

    மேலும் மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பில் இருந்ததாக 10-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். அதில் ஒரு சிலர் ஜாமீனில் வெளியே வந்துள்ளனர். அவர்கள் மதுரை ஓட்டலில் தங்கி இருந்த ஷாரிக்கை நேரில் சந்தித்தார்களா? என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாகவும் தனிப்படை போலீசார் மதுரை உயர் போலீஸ் அதிகாரிகளிடம் விசாரணை நடத்தி உள்ளனர்.

    இதற்கிடையே ஷாரிக் ஓட்டலில் இருந்து எந்தெந்த இடங்களுக்கு சென்றார்? அவரை யாரெல்லாம் சந்தித்தனர்? என்பதை உறுதிப்படுத்தும் வகையில் தனிப்படை பிரிவு போலீசார் விசாரணை நடத்தி உள்ளனர்.

    கர்நாடக தனிப்படை போலீசார் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு மிக அருகில் உள்ள நேதாஜி ரோட்டில் உள்ள ஓட்டல் மற்றும் உணவகங்களில் அதிரடி விசாரணை நடத்திய சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இதனிடையே மங்களூரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முகமது ஷாரிக், ஐ..சி.எஸ். அமைப்பின் தென்மண்டல தலைமையிடமாக மாற்ற கர்நாடகா, தமிழகம், கேரளா, ஆந்திரா மாநிலங்களின் எல்லையில் உள்ள வனப்பகுதியில் இடம் தேர்வு செய்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

    இதற்காக, 4 மாநில வனப்பகுதியில் உள்ள முக்கிய இடங்களை வீடியோக்கள் எடுத்து, ஐ.சி.எஸ். அமைப்பின் தலைமைக்கு அனுப்பி வைத்துள்ள தகவலும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    இதுதொடர்பாக கர்நாடக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இதனிடையே இந்த வழக்கு என்.ஐ.ஏ. விசாரணைக்கு மாற்றி ஒன்றிய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் கர்நாடக போலீசார் கோர்ட்டில் ஒப்படைக்க உள்ளனர்.

    அதை தொடர்ந்து கோர்ட்டு மூலமாக என்.ஐ.ஏ. முறைப்படி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள இருக்கிறது. இதற்கு முன்னோட்டமாக என்.ஐ.ஏ. தரப்பில் குண்டுவெடிப்பு தொடர்பான முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு உள்ளது.

    இதில் முகமது ஷாரிக் குற்றவாளியாக சேர்க்கப்பட்டு உள்ளார். இந்த குண்டு வெடிப்பு பின்னணியில் உள்ளவர்களை கண்டறிந்து அவர்களையும் வழக்கில் சேர்க்க என்.ஐ.ஏ. திட்டமிட்டு உள்ளது.

    • கோவை, மதுரை, நாகர்கோவில் என பல்வேறு பகுதிகளுக்கும் ஷாரிக் சென்று சிலரை சந்தித்திருப்பதும் அந்த ஊர்களில் பெண்கள் பெயரில் அறை எடுத்து தங்கி உள்ளதும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.
    • மங்களூரூ போலீசார் இன்று மீண்டும் நாகர்கோவில் வந்தனர். அவர்கள் குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத்துடன் ஆலோசனை நடத்தினர்.

    நாகர்கோவில்:

    கர்நாடக மாநிலம் மங்களூரூ மாவட்டம் நாகுரி பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆட்டோவில் குண்டு வெடித்தது. இதில் ஆட்டோ டிரைவர் மற்றும் பின் இருக்கையில் இருந்த ஒருவர் படுகாயம் அடைந்தனர்.

    இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தியதில் ஆட்டோவில் வெடித்தது குக்கர் குண்டு என தெரிய வந்தது. ஆட்டோவில் படுகாயத்துடன் கிடந்தவன் தான் வெடிகுண்டை கொண்டு சென்றவன் என்பதும் போலீஸ் விசாரணையில் கண்டு பிடிக்கப்பட்டது.

    பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்புடைய அவனது பெயர் ஷாரிக் என்ற முகமது ஷாரிக் என போலீசார் கண்டு பிடித்தனர். அவன் மங்களூரூ ரெயில் நிலையத்தை தகர்க்கும் முயற்சியில் இறங்கியதும், எதிர்பாராதவிதமாக முன் கூட்டியே குண்டு வெடித்திருப்பதும் விசாரணையில் தெரிய வந்தது.

    இதனை தொடர்ந்து என்.ஐ.ஏ. மற்றும் உளவுப்பிரிவு போலீசாரும் விசாரணையில் இறங்கினர். ஷாரிக்கின் செல்போனை கைப்பற்றி போலீசார் ஆய்வு செய்தபோது பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. அவன் தனது செல்போனில் சிவன் படத்தை ஸ்டேட்டஸ் வைத்துக்கொண்டு பிரேம்ராஜ் என்ற பெயரில் சுற்றியுள்ளான்.

    கோவை, மதுரை, நாகர்கோவில் என பல்வேறு பகுதிகளுக்கும் ஷாரிக் சென்று சிலரை சந்தித்திருப்பதும் அந்த ஊர்களில் பெண்கள் பெயரில் அறை எடுத்து தங்கி உள்ளதும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. மேலும் ஷாரிக் தொடர்புகொண்ட செல்போன் எண்களை போலீசார் ஆய்வு செய்தபோது, நாகர்கோவிலைச் சேர்ந்த பெண் மற்றும் வாலிபர் ஒருவருடன் பேசியிருப்பது தெரிய வந்தது.

    இதனைத் தொடர்ந்து மங்களூரூ போலீசார் நாகர்கோவில் வந்தனர். அவர்கள் உள்ளூர் போலீசாருடன் குறிப்பிட்ட செல்போன் எண் வைத்திருந்த பெண்ணை பிடித்து விசாரித்தனர். துரித உணவகம் நடத்தி வரும் அந்தப்பெண், தனது செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்ததாகவும், அதில் பேசியவன் மொழி தனக்கு புரியாததால், தங்கள் நிறுவனத்தில் வேலைபார்த்த வாலிபரிடம் கொடுத்து பேசச் சொன்னதாகவும் கூறினார்.

    அதன்பேரில் அந்தப் பெண் குறிப்பிட்ட கடை ஊழியரான அசாம் மாநிலத்தைச் சேர்ந்த அஜிம் ரகுமான் என்பவரை பிடித்து போலீசார் விசாரித்தனர். அவரும் பெண் கூறிய தகவலையே கூறினார். எனவே பெண்ணுக்கு வந்தது தவறான அழைப்பு என தெரிய வந்தது. இதனை தொடர்ந்து 30 மணி நேர விசரணைக்குப் பிறகு, அஜிம் ரகுமான் விடுவிக்கப்பட்டார்.

    இந்த நிலையில் மங்களூரூ போலீசார் இன்று மீண்டும் நாகர்கோவில் வந்தனர். அவர்கள் குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத்துடன் ஆலோசனை நடத்தினர். ஷாரிக் நாகர்கோவில் வந்தது ஏன்? இங்கு ஏதும் சதி செயலில் ஈடுபட திட்டமிட்டானா? செப்டம்பர் மாதம் நாகர்கோவில் வந்தபோது எங்கு தங்கினான் என்பது குறித்து விசாரணையில் ஈடுபட்டனர். குமரி மாவட்டத்தில் உள்ள விடுதிகள் அனைத்திலும் அவர்கள் சோதனை நடத்தி விசாரணை செய்தனர்.

    ×