என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "2nd t20 match"

    • 17.4 ஓவர்கள் தாக்குப்பிடித்த இலங்கை அணி 80 ரன்களில் ஆல் அவுட் ஆனது.
    • இலங்கை தரப்பில் அதிகபட்சமாக கமில் மிஸ்ரா 20 ரன்கள் அடித்தார்.

    இலங்கை - ஜிம்பாப்வே கிரிக்கெட் அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரின் 2-வது போட்டி ஹராரே மைதானத்தில் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இலங்கை அணி ஆரம்பம் முதலே ஜிம்பாப்வே பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது.

    இதில் அதிகபட்சமாக, கமில் மிஸ்ரா (20 ரன்கள்), சரித் அசலன்கா (18 ரன்கள்) மற்றும் தசுன் ஷனகா (15 ரன்கள்) தவிர வேறு எந்த பேட்ஸ்மேனும் இரட்டை இலக்கை தொடவில்லை.

    17.4 ஓவர்கள் தாக்குப்பிடித்த இலங்கை அணி 80 ரன்களில் ஆல் அவுட் ஆனது.

    அபாரமாக பந்துவீசிய ஜிம்பாப்வே தரப்பில் பிராட் எவன்ஸ் மற்றும் சிக்கந்தர் ராசா தலா 3 விக்கெட்டுகளும், முசரபானி 2 விக்கெட்டுகளும் வீழ்த்தி அசத்தினர்.

    இதனையடுத்து 81 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஜிம்பாப்வே களமிறங்கியது.

    இந்நிலையில், ஜிம்பாப்வே அணி 14.2 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 84 ரன்களை எடுத்து வெற்றிப் பெற்றது.

    இதில், அதிகபட்சமாக டஷிங்கா முசேகிவா 21 ரன்களும், ரியான் பர்ல் 20 ரன்கள் எடுத்து இருவரும் அவுட் ஆகாமல் இருந்தார். தொடர்ந்து, பிரெயின் பென்னட் 19 ரன்களும், தடிவானாஷே மருமணி 17 ரன்களும் எடுத்து அவுட் ஆகினர்.

    துஷ்மந்தா சமீரா அதிகட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதும் 2-வது 20 ஓவர் போட்டி கார்டிப் நகரில் நாளை நடக்கிறது. இந்த போட்டியிலும் இந்திய அணியின் அதிரடி தொடருமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. #ENGvIND
    கார்டிப்:

    விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.

    இரு அணிகள் இடையேயான மூன்று 20 ஓவர் போட்டித்தொடரில் மான்செஸ்டரில் நடந்த முதல் ஆட்டத்தில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதும் 2-வது 20 ஓவர் போட்டி கார்டிப் நகரில் நாளை (6-ந்தேதி) நடக்கிறது.

    முதல் ஆட்டத்தை போலவே இந்த போட்டியிலும் இந்திய அணியின் அதிரடி தொடருமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. இங்கிலாந்தை மீண்டும் வீழ்த்தி தொடரை வெல்லும் ஆர்வத்துடன் இந்தியா உள்ளது.

    பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சமபலத்துடன் இந்திய அணி திகழ்கிறது. லோகேஷ் ராகுல் கடந்த போட்டியில் சதம் அடித்து முத்திரை பதித்தார்.


    அவர் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகவே இருக்கிறது. ரோகித்சர்மா, கேப்டன் விராட்கோலி, ரெய்னா, டோனி ஆகியோரும் பேட்டிங்கில் அதிரடியை வெளிப்படுத்தக் கூடியவர்கள்.

    குல்தீப் யாதவ் தனது அபாரமான பந்துவீச்சால் இங்கிலாந்தை கடந்த போட்டியில் நிலை குலைய வைத்தார்.



    இதேபோல யசுவேந்திர சாஹல், உமேஷ்யாதவ், புவனேஷ்வர்குமார் ஆகியோரும் சிறப்பாக வீசக்கூடியவர்கள். நாளை போட்டிக்கான அணியில் மாற்றம் எதுவும் இருக்காது.

    மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணி தொடரை இழக்காமல் இருக்க வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. முதல் போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு அந்த அணி பதிலடி கொடுக்கும் ஆர்வத்தில் உள்ளது.

    பட்லர், ஜேசன்ராய் ஆகியோரை தவிர எந்த பேட்ஸ்மேனும் ரன்களை குவிக்கவில்லை. இதேபோல பந்துவீச்சிலும் முத்திரை பதிக்கவில்லை. இதனால் இந்த இரண்டையும் சரி செய்யும் வகையில் ஆட வேண்டும். உள்ளூர் ரசிகர்களின் ஆதரவுடன் இந்தியாவை வீழ்த்த போராடும்.

    இரு அணிகளும் இதுவரை 12 ஆட்டத்தில் விளையாடி உள்ளன. தலா 6 போட்டியில் இரு அணிகளும் வெற்றி பெற்றுள்ளன.

    நாளைய ஆட்டமும் இந்திய நேரப்படி இரவு 10 மணிக்கு தொடங்குகிறது. சோனி சிக்ஸ், சோனி டென் 2 டெலிவிசன்களில் இந்தப்போட்டி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது. #ENGvIND
    ×