search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "12 injured"

    • சாவு ஒன்றுக்கு பெண்கள் பண்ருட்டிக்கு வந்தனர் .
    • மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் ஜெயக்குமார் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த நத்தம் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயக்குமார் ( 22),இவர் பண்ருட்டி அம்மாபேட்டை கிராமத்தில் உள்ள அய்யனார் கோவிலில் சாமி கும்பிட்டு விட்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பினார்.அப்போது விழுப்புரம் மாவட்டம் ஆனவாரி கிராமத்தில் இருந்து பண்ருட்டி அடுத்துள்ள சூரக்குப்பம் கிராமத்தில் சாவு ஒன்றுக்கு பெண்கள் பண்ருட்டிக்கு வந்தனர் ஷேர் ஆட்டோவை ஆனவாரியை சேர்ந்த வீரபாண்டியன் (28) ஒட்டி வந்தார். ஷேர் ஆட்டோ அம்மாபேட்டை அருகே வந்தபோது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் ஜெயக்குமார் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். ஷேர் ஆட்டோ நிலை தடுமாறி ஓடியது இதனால் ஆட்டோவில் வந்த கஸ்தூரி சாந்தி சக்தி உள்பட 10 பெண்கள் படுகாயம் அடைந்தனர். காயமடைந்தவர்கள் பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இது பற்றி தகவல் அறிந்ததும் புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பஸ் முன்னால் சென்று கொண்டிருந்த லாரியின் பின்புறம் மோதியது. இதில் பஸ்சில் பயணம் செய்த 12 பயணிகள் பலத்த காயம் அடைந்தனர்.
    • இது தொடர்பாக தகவல் அறிந்த பெருந்துறை சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

    பெருந்துறை:

    திருப்பூரில் இருந்து ஈரோடு நோக்கி ஒரு தனியார் பஸ் சென்று கொண்டிருந்தது. இந்த பஸ் இரவு பெருந்துறையை அடுத்துள்ள சரளை ஏரிகருப்பராயன் கோவில் அருகே சென்றது. அப்போது பஸ் முன்னால் சென்று கொண்டிருந்த லாரியின் பின்புறம் மோதியது.

    இதில் பஸ்சில் பயணம் செய்த 12 பயணிகள் பலத்த காயம் அடைந்தனர். பஸ்சில் இருந்தவர்களின் அலறல் சுத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து அவர்களை மீட்டனர்.

    பின்னர் ஆம்புலன்ஸ் மூலம் பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் ஈரோடு பகுதியை சேர்ந்த கீர்த்தி (26), அவரது தாயார் சரஸ்வதி (55), முகமது ஹுசைன் (49), சுல்தான் (49), முனீரியா (46), நசீமா பானு (18), முரளி (34), அன்புக்கரசி (50), சிவஞானம் (53), ரஹிக் (31), ரஷீதா பேகம் (20) மற்றும் பஸ் டிரைவர் பெருந்துறை சேர்ந்த மோகன்ராஜ் ஆகியோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இது தொடர்பாக தகவல் அறிந்த பெருந்துறை சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

    ×