என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ஜாதகப்படி கால சர்ப்ப தோஷம் உள்ளவர்களுக்கும், ராகு, கேது, சரியான ஸ்தானங்களில் அமையாதவர்களும் இந்த மந்திரங்களைக் கூறிப்பலன் பெறலாம்.

    ஓம் தத்புருச்ஷாய வித்மஹே

    சுவர்ண பக்சாய தீமஹி

    தந்நோ கருட பிரசோதயாத்

    சிறப்பான கருட மந்திரம்

    ஓம் நமோ பகவதே கருடாய காலாக்னி வர்ணாய

    ஏஹி ஏஹி காலாநல, லோல ஜிஹ்வாய

    பாதய பாதய, மோஹய மோஹய

    வித்ராவய வித்ராவய பிரமபிரம, பிரமய பிரமய

    ஹந ஹந, தஹ தஹ, பதபத ஹ¨ம்பட் ஸ்வாஹா.

    கருட பஞ்சாட்சரி

    ஓம் ஷிப ஸ்வாஹா

    ஜாதகப்படி கால சர்ப்ப தோஷம் உள்ளவர்களுக்கும், ராகு, கேது, சரியான ஸ்தானங்களில் அமையாதவர்களும் இந்த மந்திரங்களைக் கூறிப்பலன் பெறலாம்.

    • வேதாந்த தேசிகர் ‘கருட பஞ்சாசத்’ என்ற நூலை திருவகிந்திரபுரத்தில் இயற்றினார்.
    • இதற்குச் சான்றாக அங்கு கருட பகவானால் நிர்மானிக்கப்பட்ட ‘கருட நதி’ ஓடுகிறது.

    வேதாந்த தேசிகர் 'கருட பஞ்சாசத்' என்ற நூலை திருவகிந்திரபுரத்தில் இயற்றினார்.

    இதற்குச் சான்றாக அங்கு கருட பகவானால் நிர்மானிக்கப்பட்ட 'கருட நதி' ஓடுகிறது.

    ஆதிசங்கரர் இயற்றிய நூல்களில் சவுந்தர்ய லஹரி' என்பது ஒன்று.

    மந்திர சாஸ்திரமாகக் கருதப்படும் இந்த நூலின் 20 வது பாடலில் கருடனைப் பற்றிய செய்தி வருகிறது.

    அது வருமாறு:

    "தேவியை எவன் உள்ளத்தில் நிலைநிறுத்தி தியானம் செய்கிறானோ, அவன் பட்சி ராஜனாகிய கருடனைப் போல் பாம்புகளின் விஷத்தை அடக்குகிறான். ஜூரத்தால் பீடிக்கப்பட்டவர்களைப் பீடை நீங்கிச் சுகமடையச் செய்கிறான்".

    தொண்டரடிப் பொடியாழ்வார் தமது 'திருமாலை' என்ற பாசுரங்களில் 10வது பாடலில் கருடனைப் பற்றி பின் வருமாறு கூறுகிறார்.

    "கேட்டிரே நம்மீர்காள்!

    கருட வாகனனும் நிற்க!

    சேட்டை தன் மடிய கத்துச்

    செல்வம் பார்த்திருக்கின்றீரே!"

    பொருள்: கருடனை வாகனடாகக் கொண்டுள்ள மலர் மகள் மணவாளன் இருக்கும் போது, பிற தேவதைகளைப் பற்றுவது மூதேவியிடம் செல்வத்தை வேண்டுவது போலாகும்.

    • கருடனை கைகூப்பி வணங்குதல் கூடாது.
    • மாறாக வலது கை மோதிர விரலால் இரண்டு கன்னங்களில் ஒற்றிக் கொண்டே வணங்க வேண்டும்.

    கருடனை கைகூப்பி வணங்குதல் கூடாது.

    மாறாக வலது கை மோதிர விரலால் இரண்டு கன்னங்களில் ஒற்றிக் கொண்டே வணங்க வேண்டும்.

    கருடனை வணங்கும் போது சொல்ல வேண்டிய கருட அஞ்சலி துதி பின்வருமாறு

    "குங்குமங்கித வர்ணாய

    குந்தேற்து தவளாயச

    விஷ்ணு வாஹ நமஸ்துப்யம்

    பட்சிராஜாயதே நமஹ"

    • இது மாயவரம் அருகில் உள்ள கொல்லுமாங்குடி என்ற ஊரின் அருகாமையில் உள்ளது.
    • இங்கு பூமிக்குக் கீழ் கருடன் சன்னதியும், பூமிக்கு மிக உயர்ந்த இடத்தில் ஆதிசேஷன் சந்நதியும் இருக்கிறது.

    பெருமாள் கருடனுக்கு அபயம் அளித்த தலம் "திருச்சிறு புலியூர்" என்ற தலமாகும்.

    இது மாயவரம் அருகில் உள்ள கொல்லுமாங்குடி என்ற ஊரின் அருகாமையில் உள்ளது.

    இங்கு பூமிக்குக் கீழ் கருடன் சன்னதியும், பூமிக்கு மிக உயர்ந்த இடத்தில் ஆதிசேஷன் சந்நதியும் இருக்கிறது.

    "கருடா சவுக்கியமா" என்று பாம்பு கேட்டதற்கு "அவரவர்கள் இருக்க வேண்டிய இடத்தில் இருந்தால் எல்லாம் சவுக்கியமே" என்று கருடன் சொன்னதாக புராணங்களில் உள்ளது.

    இந்த நிகழ்வு நடந்தது இந்த தலத்தில்தான்.

    கருடாழ்வாரை வணங்கும் துதி

    பெருமாள் கோவிலில் வீற்றிருக்கும் கருட பகவானை வணங்கும் போது பின்வரும் கருட துதியைக் கூறி வணங்கினால் கருட பகவான் அருள்கிட்டும்.

    கருடாய நமஸ்துப்யம் ஸர்வ

    சர்பேந்நர சத்ரவே

    வாஹனாய மஹாவிஷ்ணோ

    தார்ஷ்யாய அமித தேஜயே

    • அப்போது, கருடன் வட்டமிட்டு சுயம்புலிங்கம் ஒன்றை குறிப்பிட்டுக் காட்டினார்.
    • அதே சமயம் பல்லி சப்தம் செய்தது. இதனைக் கண்ட அனுமன் சுயம்புலிங்கம் இருக்கும் இடத்தை கண்டுக் கொண்டார்.

    ராமபிரான் ஆணையால் அனுமான் சுயம்புலிங்கம் ஒன்றைக் எடுத்துவர ராமேசுவரத்தில் இருந்து காசிக்கு சென்றார்.

    காசியில் எங்கு பார்த்தாலும் லிங்கங்களே இருந்தன.

    இதில் எது சுயம்புலிங்கம் என்று கண்டுபிடிக்க முடியாமல் அனுமான் சிந்தனையில் ஆழ்ந்தார்.

    அப்போது, கருடன் வட்டமிட்டு சுயம்புலிங்கம் ஒன்றை குறிப்பிட்டுக் காட்டினார்.

    அதே சமயம் பல்லி சப்தம் செய்தது. இதனைக் கண்ட அனுமன் சுயம்புலிங்கம் இருக்கும் இடத்தை கண்டுக் கொண்டார்.

    இதனால்தான் காசியில் எல்லைக் காவல் தெய்வமான ஸ்ரீ பைரவர் கருடனையும், பல்லியையும் சபித்து விட்டார்.

    இதிலிருந்து காசியில்கருடன் பறப்பதில்லை, பல்லி ஒலிப்பதில்லை.

    • ஆனால் ஸ்ரீ கருட பகவான் வழிபாடு மட்டும் அவ்வளவாகக் கொண்டாடுவதாக தெரியவில்லை.
    • எனவே இனியேனும் கருட வழிபாட்டை பக்த கோடிகள் கடைப்பிடித்து கருடாழ்வாரின் அருளாசியை பெற்றுய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    கருட பகவான் எல்லாப் பெருமாள் கோவில்களிலும் பெரிய திருவடியாக வீற்றிருக்கிறார்.

    மற்ற தெய்வங்களின் சிறப்பு வழிபாடு போல கருட பகவானுக்கும் சிறப்பு வழிபாடுகள் உண்டு.

    இதை பக்தர்கள் அனைவரும் சிரத்தையோடு கடை பிடித்து ஸ்ரீ கருடபகவானின் அருளாசிக்குப் பாத்திரமாக வேண்டும்.

    பிரதோஷ வழிபாடு, பவுர்ணமி அம்பாள் பூஜை, அமாவாசை அனுமன் வழிபாடு, விஷ்ணுபதி புண்ணியகால வழிபாடு, அஷ்டமி அன்று பைரவர் வழிபாடு, சதுர்த்தியில் விநாயகர் வழிபாடு, சஷ்டியில் முருக வழிபாடு, ஏகாதசியில் விஷ்ணு வழிபாடு, புரட்டாசியில் நவராத்திரி உற்சவம்.

    இது போல இன்னும் ஏராளம், ஏராளமான தெய்வ வழிபாடுகள் கொண்டாடப்படுகின்றன.

    ஆனால் ஸ்ரீ கருட பகவான் வழிபாடு மட்டும் அவ்வளவாகக் கொண்டாடுவதாக தெரியவில்லை.

    எனவே இனியேனும் கருட வழிபாட்டை பக்த கோடிகள் கடைப்பிடித்து கருடாழ்வாரின் அருளாசியை பெற்றுய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    ஸ்ரீ கருட வழிபாட்டை ஒவ்வொரு மாதத்திலும் அவரின் திதி, நட்சத்திரத்தில் கொண்டாடலாம்.

    மாதந்தோறும் வருகின்ற வளர்பிறை பஞ்சமி திதி அன்றும், சுவாதி நட்சத்திரத்தன்றும் கருட வழிபாடு செய்ய ஏற்ற திதி. நட்சத்திரமாகும்.

    மேலும் அவரவர் ஜென்ம நட்சத்திரத்தன்றும் கருட வழிபாட்டை செய்து அவரின் அருளாசியால் சகல நன்மைகளையும் பெறலாம்.

    கருட பகவானுக்கு பிடித்தமான அபிஷேக ஆராதனைகள், பலகார பட்சணங்கள் போன்றவற்றைச் சிறப்பாக சமர்பித்து அவரது அருளைப் பெறலாம்.

    • பொதுவாக கன்னி கோவில்களில் மேற்கூரை போட்டு முகடு அமைப்பது இல்லை.
    • சப்த கன்னியர் ஆலயங்களை நகர்ப்புறங்களில் காண முடியும்.



    மதுராந்தகம்

    மதுராந்தகத்தில் வரலாற்று சிறப்புமிக்க ஏரிகாத்த ராமர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் வெள்ளைக்காரர்கள் இந்தியாவில் இருந்தபோது அப்போதைய கலெக்டரால் உருவாக்கப்பட்டு நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பு இருந்து இருக்கிறது. இந்த கோவிலிருந்து மதுராந்தகம் ஏரி கலங்கல் செல்லும் வழியில் மதுராந்தகம் கிராம மக்களால் சப்தகன்னிகள் கோவில் உருவாக்கப்பட்டு மக்கள் வழிபட்டு வருகின்றனர்.

    இந்த கோவிலில் ஆடி மாதம் ஐந்தாம் வாரம் அல்லது ஆவணி முதல் வாரம் கோவிலில் பால் குடம் எடுத்தல், தீச்சட்டி எடுத்தல், பால் அபிஷேகம் செய்தல், சாமி வீதி உலா போன்றவற்றை கிராம மக்கள் ஆண்டு தோறும் செய்து வருகின்றனர்.

    மேலும் அமாவாசை நாளில் இக்கோவிலுக்கு வந்து பூஜை செய்தால் நினைத்த காரியம் நடக்கும். நன்மைகள் நடைபெறும் என்று மக்கள் மனதில் நம்பிக்கையை உருவாக்கியுள்ளது இந்த கோவில்.

    மதுராந்தகம் அடுத்த முதுகரை கிராமத்தில் குளக்கரையில் அமைந்துள்ள சப்த கன்னிகள் ஆலயத்தில் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள பெண்கள் விசேஷ வெள்ளிக்கிழமைகளில் பொங்கல் வைத்து வழிபட்டு வருகின்றனர்.

    இதனால் பெண்கள் தங்களுடைய தாலி பாக்கியம், குழந்தை வரம் வேண்டியும் வழிபட்டு வருவதனால் அங்கு கூட்டம் அலை மோதுகிறது.

    இதுபோன்று சுற்று வட்டார பகுதிகளில் சித்தாமூர், இலத்தூர், செய்யூர், அச்சிறுப்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் சப்த கன்னிகள் கோவில்கள் அமைந்துள்ளதால் மக்கள் சென்று வழிபட்டு வருகின்றனர்.


    மேல்மருவத்தூர்

    புற்று மண்டபத்தின் வலப்புறம் சப்த கன்னியர் கோவில் ஒன்று உள்ளது. ஏழு கன்னிக்கும் அமைந்த கோவிலாதலின் இதனைக் கன்னி கோவில் என்றே மக்கள் வணங்குகின்றனர்.

    பொதுவாக கன்னி கோவில்களில் மேற்கூரை போட்டு முகடு அமைப்பது இல்லை. அதன்படியே கன்னி கோவிலின் நான்கு புறத்திலும் சுற்றுச்சுவர் மட்டுமே எழுப்பப்பட்டுள்ளது.

    அன்னை சப்த கன்னியர் கோவிலைக் கட்டுமாறு தன் பக்தர் ஒருவருக்கு ஆணையிட்டாள். "எந்த குலம் இதுவரை ஆலயத்தின் உள்ளே வர அனுமதிக்கப்படவில்லையோ, அக்குலத்தைச் சேர்ந்த நீயே இந்த கோவிலைக் கட்டு.

    எந்த சமுதாயம் உன்னைத் தள்ளி வைத்ததோ, அந்த சமுதாயமே நீ கட்டிய கோவிலுக்குள் வந்து வணங்கப் போகிறது பார்" என்றாள் அன்னை. இது சாதி சமயங்களைக் கடந்த சித்தர் நெறி ஆகும். ஆகம விதிகளையெல்லாம் கடந்த ஒரு நெறியைக் கொண்ட கோவில் என்பதற்கு இதுவும் ஒரு சிறந்த எடுத்துக் காட்டு.


    காஞ்சிபுரம்

    கிராமப்புற மக்களின் வழிபாட்டுத் தெய்வமான சப்த கன்னியரின் வழிபாட்டு இடங்கள் பெரும்பாலும் நகர்புற பகுதிகளில் காண்பது நகரிலுள்ள வேப்ப மரத்தின் அடியில் முற்றிலும் பிரபலமாகாத ஒருசில சப்த கன்னியர் அமைந்துள்ள இடங்களையே நகர்ப்புறங்களில் காண முடியும்.

    இந்நிலையில் காஞ்சிபுரத்தின் இதயப்பகுதியான காந்தி ரோட்டில் மூலவராக சப்த கன்னியர் அருள் பாலிக்கும் திருக்கோவில் உள்ளது.

    காஞ்சிபுரம் காந்தி ரோடு, ரங்கசாமி குளம் பகுதியில் பிரதான சாலையில் சப்த கன்னியரும் வீற்றிருக்கும், ஸ்ரீ ஆகாய கன்னியம்மன் ஆலயம் அமைந்துள்ளது. வடக்கு நோக்கி அமைந்துள்ள திருக்கோவிலில் 5 தலை நாகம் படம் விறித்தாட அதன் கீழ் சப்த கன்னியர் மூலவராக எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்து அருள்பாலிக்கிறார்.

    எதிரே திரிசூலத்திற்கு பின்னர் பலிபீடமும் அடுத்து, சப்த கன்னியருக்கு காவலாக சீறி நிற்கும் வேங்கையும் உள்ளது. இத் திருக் கோவிலினை வலம் வரும் போது நவகிரகமும், விநாயகர், முருகர், துர்க்கை, சனிபகவான் உள்ளிட்ட தெய்வங்களுக்கும் சன்னதிகள் அமைக்கப்பட்டுள்ளது.

    திருக்கோவிலினுள் ஏறத்தாழ 100 ஆண்டுகள் பழமையான புற்றுடன் கூடிய வேப்பமரத்தின் கீழ் சப்த கன்னியர்கள் திரு உருவமாக எழுந்தருளி உள்ளனர்.

    ஆண்டு தோறும் ஆடிமாதம் முழுவதும் ஆயிரக் கணக்கான பக்தர்கள் அலகு குத்தியும், தீ மிதித்தும் தங்களின் நேர்த்தி கடனை நிறைவேற்றி வரும் இத்திருக்கோவிலில் ஒவ்வொரு அமாவாசையன்றும் அன்னதானம் செய்யப்படுகின்றது.

    இத்திருக் கோவிலை பற்றி மேலும் விவரம் வேண்டுவோர் 044-27229159 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.


    திருத்தணி

    அறுபடை வீடுகளில் சிறந்து விளங்கும் திருத்தணி முருகன் கோவிலின் துணை கோவில்களாக திருவாலங்காடு, மத்தூர், பெரிய நாகப்பூண்டி, சந்தான வேணுகோபாலபுரம் உள்பட 5 சைவ திருக்கோவில்கள் 7 வைணவ திருக்கோவில்கள், 4 சக்தி கோவில்கள், மடாலயம் என மொத்தம் 27 ஆலயங்கள் உள்ளன. இதில் சப்த கன்னிகைகள் கோவில் என்பது ஒன்று.

    இது கோவில் என்று மட்டுமல்லாமல், சுற்றுலாத்தலமாகவும் விளங்குகிறது. பக்தியை கலந்து விருந்துகள், விழாக்கள் என பண்டிகை காலம் போல் மக்கள் கொண்டாடி வந்தனர்.

    காலப்போக்கில் முறையான பராமரிப்பு இல்லாததால் பக்தர்கள், பொதுமக்கள் உள்ளே வந்து செல்ல அச்சப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

    முருகன் கோவிலுக்கு தெற்கே கன்னிகாபுரம் எனும் பகுதியில் அடர்ந்த காடாகவும், பசுமையான சோலையாகவும் அமைந்துள்ளது சப்த கன்னிகையர் கோவில்.

    சப்தம் என்றால் ஏழு. சப்த ரிஷிகளால் வசிஷ்டர் முதலிய ஏழு முனிவர்கள் இங்கு அமர்ந்து தியானம் செய்த வண்ணம், முருகக்கடவுளை பூஜித்துள்ளனர். அவர்களால் உருவாக்கப்பட்ட கோவில் தான் சப்த கன்னிக்கோவில் என அழைக்கப்படுகிறது.

    இங்கு 7 சுனைகளில் தண்ணீர் வந்துக் கொண்டிருந்தது. தற்போது நமத்து போய் புதைந்து 6 சுனைகள் காணாமல் போனது. ஆனாலும் பாறைகளின் நடுவே ஒரு சுனையில் மட்டும் வற்றாமல் தண்ணீர் வந்துக் கொண்டிருக்கிறது.

    மொத்தம் 13 ஏக்கர் நிலப்பரப்பில் பரந்து விரிந்து கிடக்கிற இந்த பூமியில் நிழல் தரும் மரங்களும், செடி, கொடிகளும், இயற்கையாக சுகம் தரும் காற்றோட்ட வசதிகளும் உள்ளதால், திருத்தணி நகரம் மற்றும் சுற்றுப்புற கிராம மக்களும் பொழுது போக்க இதை பயன்படுத்தி வருகிறார்கள்.

    காதணி விழாக்கள், வன போஜனம் என பல நேரங்களில் விருந்தோம்பல் நடப்பதையும் இங்கு பார்க்க முடிகிறது. குறிப்பாக பெண்கள் இந்த சுனை நீரை எடுத்து சமையல் செய்து பொங்கல் வைத்து படையல் இட்டு சப்த கன்னியர்களை வழிபடுகின்றனர்.

    ஏழு கன்னிகைகளும் தனித் தனியாக இல்லாமல் ஒரே இடத்தில் கோவில் கொண்டு உள்ளார்கள். தினசரி அம்மன்களுக்கு அபிஷேகம், பூஜைகள் நடைபெறுகிறது. கடந்த 21.11.1999-ம் ஆண்டு இக்கோவிலுக்கு திரு குட முழுக்கு நடைபெற்றது.


    பிடாரி செல்லியம்மன் கோவில்

    வேளச்சேரி பிரதான மெயின் ரோட்டில் தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத்துறையின் ஆளுகைக்குட்பட்ட பிடாரி செல்லியம்மன் திருக்கோவில் உள்ளது. சென்னை மாநகரத்தின் வேதஸ்ரேணி என்கின்ற வேளச்சேரியில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கிராம எல்லை சப்தமாதாவாக ஸ்ரீசாமுண்டீஸ்வரி, ஸ்ரீஇந்திராணி, ஸ்ரீவராகி, ஸ்ரீவைஷ்ணவி, ஸ்ரீபிரம்மி, ஸ்ரீமகேஸ்வரி, ஸ்ரீகவுமாரி ஆகியோர் தேவதைகளாக எழுந்தருளி பக்தர்களுக்கு வேண்டியவண்ணம் வரங்களை வாரி வழங்கி வருகிறார்கள்.


    மாமல்லபுரம்

    மாமல்லபுரத்தில் உள்ள சப்தகன்னியர் கோவில் தமிழ்நாட்டில் உள்ள முக்கியமான கோவில்களில் இருக்கும் சப்தகன்னியர் பீடங்களைவிட வித்தியாசமாக இருக்கும். எல்லா கோவில்களிலும் ஏழுகன்னிகள் மட்டும்தான் இருக்கும்.

    ஆனால் மாமல்லபுரத்தில் மட்டும்தான் நடுவில் எல்லைகாக்கும் கருக்காத்தம்மனும் வலது பக்கம் மூன்று கன்னிகளும் இடது பக்கம் நான்கு கன்னியரும் கடற்கரை பகுதியை பார்த்த வண்ணம் இருக்கும் பழங்காலத்து சிலையாக பீடங்களை பார்க்க முடியும்.

    1956-ல் தொல்லியல்துறை கையகப்படுத்தும் முன்னர் பல ஆண்டுகளுக்கு முன் மாமல்லபுரம் கிராமப்பகுதிகளில் ஆங்காங்கே சப்த கன்னியர் உலா வந்ததை கன்னிப் பெண்கள் பார்த்ததாகவும் பார்த்து பயந்ததாகவும் அதனால் கன்னிப் பெண்களுக்கு ஆபத்து வரக்கூடாது என கருக்காத்தம்மனிடம் வழிபட்டு அம்மனை வடிவமைத்து தற்போது இருக்கும் பீடத்தில் முதலில் வைத்து அதை சப்தகன்னியர்கள் கோவிலாக வழிபட்டு வந்துள்ளனர்.

    ஏழு கன்னியர் சிலைகளும் மாமல்லபுரம் கிராம சுற்று பகுதிகளில் ஆங்காங்கே கண்டெடுக்கப்பட்டு அம்மனுடன் வைத்து வருடாவருடம் ஊர் பூஜை, கன்னிபூஜை என சப்த கன்னிமார்களுக்கான பூஜைகளை செய்து வந்துள்ளனர்.

    மாலை 6மணிக்கு மேல் கன்னிப்பெண்களை கோவில் தாண்டிச்செல்ல விடமாட்டார்களாம் . அவ்வளவு பயபக்தி. சப்தகன்னியர் சிலைகள் ஆங்காங்கே கண்டெடுக்கப்பட்டு ஒரே இடத்தில் வைத்துள்ளதாலும் தற்போது தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் இருப்பதாலும் பெயர்களை சின்னமாக வரைந்துள்ளதாலும் இவை பல்லவர் கால சிலைகளாக இருக்கலாம் எனவும் 1300 ஆண்டுகளுக்கு முன்னரே சப்தகன்னியர் வழிபாடுகளும் இருந்திருக்க வேண்டும் எனவும் பேசப்படுகிறது.

    பண்டைய காலத்தில் நடந்த சப்தகன்னிகள் வழிபாடுகள் பூஜைகள் முன்புபோல் தற்போது நடப்பதில்லை. காரணம் இன்றைய கன்னிப் பெண்களிடம் அந்த ஆர்வம் குறைவாலும் தொல்லியல் துறை கட்டுப்பாட்டாலும் மாமல்லபுரம் சப்தகன்னியர் கோவில் வெளியே தெரியாமல் இருந்து வருகிறது.


    திருப்போரூர்

    சென்னையில் இருந்து சுமார் 50 கி.மீ. தொலைவில் திருப்போரூரில் இருந்து செங்கல்பட்டு செல்லும் சாலையில் உள்ள செம்பாக்கம் கிராமத்தில் புகழ் பெற்ற அழகாம்பிகை சமேத ஜம்புகேஸ்வரர் ஆலயத்தின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள கோவில் சப்த கன்னியர் கோவில் ஆகும்.

    இங்குள்ள செல்லியம்மன் ஆலயத்தின் துணைக் கோவிலாக விளங்குகிறது. திருமணமாகாத கன்னிப்பெண்கள் இக்கோவிலில் உள்ள சப்த கன்னியர்களை வேண்டி பொங்கல் வைத்து வழிபட்டால் விரைவில் திருமண தடை நீங்கி திருமணம் நடைபெறும் என்பது ஐதகீம்.

    மேலும் குழந்தைப் பேறு இல்லாதவர்கள் வியாபார அபிவிருத்தி பெற இக்கோவிலில் உள்ள சப்த கன்னியர்களை வேண்டி வலம் வந்தால் நினைத்தது விரைவில் கைகூடும் எனவும் சொல்லப்படுகிறது.

    இங்குள்ள ஒரு சமூகத்தினரின் குலதெய்வமாக இந்த சப்த கன்னியர் கோவில் உள்ளது. சென்னை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் இருந்து பலர் இந்த சப்த கன்னியர் ஆலயத்திற்கு வந்து வேண்டி வழிபட்டு செல்கின்றனர். 

    • வாஸ்து நாள் (காலை 7.44 மணி முதல் 8.20 மணி வரை வாஸ்து செய்ய நன்று).
    • இன்று ஏகாதசி.

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு ஐப்பசி-11 (திங்கட்கிழமை)

    பிறை: தேய்பிறை

    திதி: ஏகாதசி காலை 10.27 மணி வரை பிறகு துவாதசி

    நட்சத்திரம்: பூரம் மாலை 6.22 மணி வரை பிறகு உத்திரம்

    யோகம்: சித்தயோகம்

    ராகுகாலம்: காலை 7.30 மணி முதல் 9 மணி வரை

    எமகண்டம்: நண்பகல் 10.30 மணி முதல் 12 மணி வரை

    சூலம்: கிழக்கு

    நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 3 மணி முதல் 4 மணி வரை

    இன்று ஏகாதசி. வாஸ்து நாள் (காலை 7.44 மணி முதல் 8.20 மணி வரை வாஸ்து செய்ய நன்று). சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம். கோவில்பட்டி ஸ்ரீசெண்பகவல்லியம்மன், பத்தமடை ஸ்ரீ மீனாட்சியம்மன், வீரவநல்லூர் ஸ்ரீ மரகதாம்பிகை, தூத்துக்குடி ஸ்ரீ பாகம்பிரியாள், தென்காசி ஸ்ரீ உலகம்மை கோவில்களில் திருமண வைபவக்காட்சி. திருமாலி ருஞ்சோலை ஸ்ரீ கள்ளழகர் புறப்பாடு. கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதியில் ஸ்ரீ கருடாழ்வா ருக்குத் திருமஞ்சன சேவை. திருமயிலை ஸ்ரீ கபாலீஸ்வரர், திருமான்மியூர் ஸ்ரீ மருந்தீஸ்வரர், பெசன்ட்நகர் ஸ்ரீ ரத்தின கிரீஸ்வரர், திருவிடைமருதூர் ஸ்ரீ மகாலிங்க சுவாமி கோவில்களில் காலை சிறப்பு சோமவார அபிஷேகம்.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-மதிப்பு

    ரிஷபம்-வெற்றி

    மிதுனம்-செலவு

    கடகம்-அமைதி

    சிம்மம்-பரிசு

    கன்னி-கவனம்

    துலாம்- கவனம்

    விருச்சிகம்-சிரத்தை

    தனுசு- புகழ்

    மகரம்-லாபம்

    கும்பம்-பாராட்டு

    மீனம்-தெளிவு

    • திருச்சியை அடுத்த லால்குடி அருகே மணக்கால் கிராமம் உள்ளது.
    • கோவில் 800 வருடங்கள் பழைமை வாய்ந்தது.

    திருச்சியை அடுத்த லால்குடி அருகே மணக்கால் கிராமம் உள்ளது. இந்த ஊரில் அற்புதமாகக் கோவில் கொண்டிருக்கிறாள் ஸ்ரீநங்கையார் அம்மன்.

    பொதுவாகவே, சிவாலயங்களில் சப்தமாதர்களுக்கென ஒரு சந்நிதி இருக்கும். சோழர்கள் காலத்தில் கட்டப்பட்ட கோவில்கள் பலவற்றிலும் சப்தமாதர்கள் சந்நிதி கொண்டிருப்பார்கள்.


    சப்தமாதர்களும் வடக்கு நோக்கியபடி காட்சி தருவார்கள். ஆனால், இங்கே கிழக்கு நோக்கியபடி காட்சி தருவது சிறப்பு என்று போற்றுகின்றனர் பக்தர்கள்.

    இந்த கோவிலை கவுமாரி அம்மன் கோவில் என்றும், நங்கையார் கோவில் என்றும் அழைக்கின்றனர் பக்தர்கள்..

    கோவிலில் மதுரைவீரனும் சந்நிதி கொண்டி ருக்கிறார். ஊருக்கு காவல்தெய்வமாகவும் போற்றப்படுகிற இந்த ஆலயம், சுமார் 800 வருடங்கள் பழைமை வாய்ந்தது என்கிறது ஸ்தல வரலாறு.

    மணக்கால் நங்கையார் அம்மன் கோவிலுக்கு வந்து வேண்டுவோர்க்கு வேண்டும் வரம் தந்தருள்வாள் அம்மன் என்று சிலாகித்து போற்றுகின்றனர் ஊர்மக்கள். பிராகாரத்தில் யானை மேல் அமர்ந்த அய்யனார், குதிரை மீது அமர்ந்தபடி காட்சி தரும் கருப்பண்ணசாமி ஆகியோரையும் தரிசிக்கலாம்.

    கருப்பண்ணசாமிக்கும் அவரின் வாகனமான குதிரைக்கும் மாலை சார்த்தி மனமுருக வேண்டிக் கொண்டால், கொடுத்த கடன் தொகை விரைவில் கைக்கு வந்து சேரும் என்கிறார்கள். குடும்பத்தில் இருந்த குழப்பமும் பிரிவினைகளும் விலகும் என்கிறார்கள் பக்தர்கள்!


    தெற்குப் பிராகாரத்தில் பிரமாண்டமாகப் பரந்து விரிந்து நிற்கிறது நருவுளி மரம். இந்த மரத்தைச் சுற்றி வந்து, இதன் கொழுந்து இலையைப் பிரசாதமாகச் சாப்பிட்டு வந்தால், குழந்தை இல்லாதவர்களுக்கு விரைவிலேயே பிள்ளை பாக்கியம் கிடைக்கப் பெறலாம் என்பது ஐதீகம்.

    நவராத்திரியின்போது, பத்தாம் நாளில், தயிர்ப்பாவாடை எனும் வழிபாடு இந்த தலத்தில் வெகு பிரசித்தம். அப்போது, அர்த்தமண்டபத்தில் தயிர்சாதத்தைத் தயாரித்து மிகப்பெரிய துணியில் கொட்டிப் பரப்பி வைப்பார்கள். பிறகு, அம்மனுக்கு தயிர்சாதம் நைவேத்தியம் செய்து, பக்தர்களுக்குப் பிரசாதத்தை வழங்குவார்கள்.

    இந்த பிரசாதத்தைச் சாப்பிட்டு, அம்மனை வேண்டிக்கொண்டால், சகல ஐஸ்வரியங்களும் கிடைக்கும் என்கிறார்கள் பக்தர்கள்.

    மாங்கல்ய பாக்கியம் கிடைக்க, மஞ்சள் குங்குமம் நிலைக்கவும், வாராக் கடன் வசூலாக, குடும்பப் பிரச்சனைகள் நீங்கவும், கணவன் மனைவி இடையே ஒற்றுமை மேலோங்கவும், பிரிந்த தம்பதி சேரவும் நங்கையார் அம்மனும் சப்தமாதர்களும் அருள்புரிகிறார்கள்.

    • சூரியனார் கோவில் ஸ்ரீ சூரிய நாராயணருக்கு திருமஞ்சனம்.
    • திருநெல்வேலி ஸ்ரீ காந்திமதியம்மன் தபசுக் காட்சி.

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு ஐப்பசி-10 (ஞாயிற்றுக்கிழமை)

    பிறை: தேய்பிறை

    திதி: தசமி காலை 8.54 மணி வரை பிறகு ஏகாதசி

    நட்சத்திரம்: மகம் மாலை 4.10 மணி வரை பிறகு பூரம்

    யோகம்: மரண, சித்தயோகம்

    ராகுகாலம்: மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை

    எமகண்டம்: நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை

    சூலம்: மேற்கு

    நல்ல நேரம்: காலை 7 மணி முதல் 8 மணி வரை மாலை 3 மணி முதல் 4 மணி வரை

    சூரியனார் கோவில் ஸ்ரீ சூரிய நாராயணருக்கு திருமஞ்சனம். திருநெல்வேலி ஸ்ரீ காந்திமதியம்மன் தீர்த்தம். இரவு தங்க சப்பரத்தில் தபசுக் காட்சி. வீரவநல்லூர் ஸ்ரீ மரகதாம்பிகை, தென்காசி ஸ்ரீ உலகம்மை கோவில்களில் திருவீதியுலா. ஸ்ரீபெரும்புதூர் ஸ்ரீ மணவாளமாமுனிகள் உற்சவம் ஆரம்பம். கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதி எதிரில் உள்ள ஸ்ரீ அனுமாருக்கு திருமஞ்சனம். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் குளக்கரை ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு திருமஞ்சனம். சாத்தூர் ஸ்ரீ வேங்கடேசப் பெருமாள் புறப்பாடு. திருப்போரூர் முருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம். வைத்தீஸ்வரன் கோவில் ஸ்ரீ அங்காரகனுக்கும், ஸ்ரீசெல்லமுத்துக்குமார சுவாமிக்கும் அபிஷேகம்.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-இரக்கம்

    ரிஷபம்-ஆதரவு

    மிதுனம்-இன்பம்

    கடகம்-ஆக்கம்

    சிம்மம்-பக்தி

    கன்னி-மகிழ்ச்சி

    துலாம்- ஓய்வு

    விருச்சிகம்-ஆதரவு

    தனுசு- பரிவு

    மகரம்-லாபம்

    கும்பம்-ஆர்வம்

    மீனம்-புகழ்

    • திருநள்ளாறு ஸ்ரீ சனிபகவானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம்.
    • ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ கள்ளபிரானுக்கு பாலபிஷேகம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு ஐப்பசி-9 (சனிக்கிழமை)

    பிறை: தேய்பிறை

    திதி: நவமி காலை 7.44 மணி வரை பிறகு தசமி

    நட்சத்திரம்: ஆயில்யம் பிற்பகல் 2.22 மணி வரை பிறகு மகம்

    யோகம்: மரண, அமிர்தயோகம்

    ராகுகாலம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

    எமகண்டம்: நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை

    சூலம்: கிழக்கு

    நல்ல நேரம்: காலை 7 மணி முதல் 8 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    திருநள்ளாறு ஸ்ரீ சனிபகவானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம். சங்கரன்கோவில் ஸ்ரீகோமதியம்மன், பத்தமடை ஸ்ரீ மீனாட்சியம்மன் கோவில்களில் புறப்பாடு. உத்திரமாயூரம் ஸ்ரீ வள்ளலார் சந்நிதியில் ஸ்ரீ சந்திரசேகரர் புறப்பாடு. நெல்லை ஸ்ரீ காந்திமதியம்மன் தேரோட்டம். மன்னார்குடி ஸ்ரீ ராஜகோபால சுவாமி, திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ வரதராஜ மூலவருக்கு திருமஞ்சன சேவை. உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீ சீனிவாசப் பெருமாள் ஸ்திரவார திருமஞ்சன அலங்கார சேவை. திருமோகூர் ஸ்ரீ காளமேகப் பெருமாள் திருமஞ்சன சேவை. குறுக்குத்துறை ஸ்ரீ முருகப்பெருமான் புறப்பாடு. ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ கள்ளபிரானுக்கு பாலபிஷேகம். இருக்கன்குடி ஸ்ரீ மாரியம்மன் புறப்பாடு.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-லாபம்

    ரிஷபம்-நலம்

    மிதுனம்-தனம்

    கடகம்-ஆர்வம்

    சிம்மம்-வரவு

    கன்னி-ஊக்கம்

    துலாம்- ஈகை

    விருச்சிகம்-போட்டி

    தனுசு- முயற்சி

    மகரம்-இன்பம்

    கும்பம்-நிறைவு

    மீனம்-மகிழ்ச்சி

    • தீமையை பொறுக்காத சினம் கொண்டவள் ஸ்ரீவாராகி.
    • எதிரிகள் தொல்லை நீங்க பாடுவது நன்மை தரும்.

    மெய்சிறந்தார் பணியார் மனம்காயம் மிக வெகுண்டு

    கை சிரத்து ஏந்திப் ப-லால் நீணம் நாறக் கடித்து உதறி

    வச்சிரத் தந்த முகபணியால் குத்தி வாய் கடித்து

    பச்சிரத்தம் குடிப்பாளே வாராகி பகைஞரையே.

    பொருள்: தீமையை பொறுக்காத சினம் கொண்டவள் ஸ்ரீவாராகி.

    அதுவும் தூயவர்களை அவளிடம் ஆழ்ந்த பக்தி கொண்டவர்களை தீயவர்கள் துன்புறுத்தினால் அன்னை கோபம் கொள்கிறாள்.

    அந்த பகைவர் கடுமையாக தண்டிக்கப்படுகிறார்.

    அவர்கள் மட்டுமல்ல, உண்மையான பக்தியின்றி பணிபவர்களும் இந்த தண்டனையை ஏற்க வேண்டியதுதான்.

    பகைவர் உடலை தன் கூரிய நகங்களால் கிழித்து கூரிய கொம்புகளாக குத்தி குருதி குடிப்பாள்.

    எனவே வாராகி வழிபாடு மிகவும் கட்டுப்பாடு உரியது. விளையாட்டல்ல என எச்சரிக்கப்படுகிறது.

    பயன்பாடு: எதிரிகள் தொல்லை நீங்க பாடுவது நன்மை தரும்.

    ×