என் மலர்tooltip icon

    செய்திகள்

    மீனாட்சி அம்மன்-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம்
    X
    மீனாட்சி அம்மன்-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம்

    இன்று பக்தர்கள் பங்கேற்பின்றி நடந்தது மீனாட்சி அம்மன்-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம்

    இன்று இரவு அனந்தராயர் பூப்பல்லக்கில் மீனாட்சி அம்மனும், தங்க அம்பாரியுடன் கூடிய யானை வாகனத்தில் பிரியா விடையுடன் சுந்தரேசுவரரும் ஆடி வீதிகளில் வலம் வருகிறார்கள்.

    மதுரை, ஏப். 24-

    மதுரை என்றதும் நினைவுக்கு வருவது சித்திரை திருவிழாதான். அதிலும் மீனாட்சி அம்மன்-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த ஆண்டு இந்த திருவிழா பாதிக்கப் பட்டது.

    இந்த ஆண்டும் கொரோனா பரவல் காரணமாக கோவில் விழாக்களை நடத்த தமிழக அரசு தடை விதித்துள்ளது. இருப்பினும் கோவில் வழிபாடுகளுக்கு தடை விதிக்கப்படவில்லை. சிறப்புமிக்க விழாக்களை பக்தர்கள் இன்றி கோவில் வளாகத்தில் நடத்திக் கொள்ளவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    அதன்படி உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா கடந்த 15-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    விழா தொடங்கிய நாளில் இருந்து தினமும் காலை, மாலை வேளைகளில் சிறப்பு அலங்காரத்தில் பல்வேறு வாகனங்களில் சுவாமி-அம்பாள் எழுந் தருளி கோவிலுக்குள் உள்ள ஆடி வீதிகளில் உலா வந்தனர்.

    அந்த நேரத்தில் பக்தர் கள் கோவிலுக்குள் அனு மதிக்கப்படவில்லை. சிவாச்சாரியார்கள், அதிகாரிகள், கோவில் ஊழியர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான மீனாட்சி அம்மன் பட்டா பிஷேகம் 22-ந்தேதி நடந்தது. அன்று மதுரையின் அரசியாக மீனாட்சி அம் மனுக்கு பட்டம் சூட்டப்பட் டது.

    இதைத்தொடர்ந்து மீனாட்சி அம்மன் 8 திசைகளிலும் சென்று தேவர்களை வென்று இறைவன் சுந்தரேசு வரரிடம் அடையும் திக்கு விஜயம் நேற்று நடந்தது. இவை அனைத்தும் கோவிலின் ஆடி வீதியில் பக்தர்கள் இன்றி நடந்தது.

    சித்திரை திருவிழாவின் முத்திரை பதிக்கும் நிகழ்ச்சி யான மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் இன்று நடைபெற்றது.

    வழக்கமாக இந்த விழா வடக்கு-மேற்கு ஆடி வீதியில் உள்ள மண்டபத்தில் நடைபெறும். இந்த ஆண்டு கோவிலில் உள்ள பழைய திருக்கல் யாண மண்டபத்தில் நடைபெற்றது.

    இதற்காக அந்த மண்ட பம் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந் தது. வெளிமாநிலம் மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வரவழைக்கப்பட்ட சிறப்பு மலர்களால் இந்த அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. யாகசாலை பூஜை களும் நடைபெற்றன.

    அதிகாலை யில் சுவாமி- அம்மன் புறப்பட்டு ஆடி வீதிகளில் வலம் வந்தனர். அதன் பிறகு கன்னி ஊஞ்சலாகி வைபவம் நடைபெற்றது. பின்னர் மீனாட்சி அம்மன்-பிரியா விடையுடன் சுந்தரேசுவரர் திருக்கல்யாண மேடையில் எழுந்தருளினர்.

    தொடர்ந்து சிவாச்சாரி யார்கள் வேத மந்திரங்கள் ஓத திருமண சடங்குகள் தொடங்கின. காலை 8.35 மணி முதல் 8.50 மணிக்குள் சிவாச்சாரியார்கள் மாலை மாற்றி மீனாட்சி அம்மன்- சுந்தரேசுவரர் திருக்கல் யாணத்தை நடத்தினர்.

    மீனாட்சி அம்மன் பட்டுச்சேலை அணிந்து ராயர் வைர கிரீடம், வைர மூக்குத்தி, பவளக்கல் பொதிந்த மாலைகள் அணிந் திருந்தார். சுந்தரேசுவரர் பட்டாடை அணிந்து ஊதா நிற கல் பதித்த வைர கிரீடமும் அணிந்திருந்தார்.

    தொடர்ந்து பட்டர்கள் மீனாட்சி அம்மன்- சுந்தரேசுவரருக்கு தீபாராதனை காட்டினர். அதன் பிறகு சுவாமியும், அம்மனும் பட்டாடை மாற்றுதல் மற்றும் மாலை மாற்றுதல் வைபவங்கள் நடைபெற்றன. சுவாமி- அம்மன், பிரியாவிடை முன்பு 3 முறை காட்டப் பட்டது.

    தொடர்ந்து மல்லிகை மலர்களால் சுற்றப்பட்ட தங்கத்தில் வைரம் பதித்த மங்கல நாணுக்கு சிறப்பு வழிபாடு செய்யப்பட்டது. அதன் பின்பு வேத மந்திரங்கள் முழங்க, மேளதாளம் இசைக்க மீனாட்சி அம்மன் கழுத்தில் மங்கல நாண் அணிவிக்கப்பட்டது. அப்போது மேடையின் மேல் புறத்தில் இருந்து அம்மன்-சுவாமி மீது மலர்கள் தூவப்பட்டது.

    வழக்கமாக திருக்கல் யாண திருநாள் அன்று கோவிலுக்கு வரும் பெண் பக்தர்களும், வீடுகளில் இருந்து தொலைக்காட்சி களில் பார்க்கும் பெண் பக்தர்களும் மீனாட்சி திருக் கல்யாணம் நடைபெறும் போது தாலி கயிற்றை மாற்றிக்கொள்வது வழக்கம்.

    இந்த ஆண்டு கோவிலுக்கு வர அனுமதி இல்லாததால் வீட்டில் இருந்து தொலைக் காட்சி, யூ-டியூப் மூலம் திருக்கல்யாண நிகழ்ச்சியை பார்த்த திருமணமான பெண்கள் தங்களது தாலிக்கயிறை புதிதாக மாற்றி அதில் குங்குமம் இட்டு கண்களில் ஒற்றிக் கொண்டனர்.

    கொரோனா காரணமாக கடந்த வருடமும், இந்த வருடமும் பக்தர்கள் இன்றி மீனாட்சி அம்மன் திருக் கல்யாணம் எளிமையாக நடந்து முடிந்தது.

    முன்னதாக இன்று காலை பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு இருந்தது. இருப்பினும் ஏராளமானோர் அம்மன் சன்னதி புது மண்டபம் முன்பு திரண்டிருந்தனர். இன்று சித்திரை வீதிகளிலும் பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு இருந்தது.

    திருமண நிகழ்ச்சிகள் முடிந்து காலை 10 மணிக்கு பிறகு பக்தர்கள் தரிசனத்துக்கு கோவிலுக்குள் அனுமதிக் கப்பட்டனர். பழைய திருக் கல்யாண மண்டபத்தில் எழுந்தருளி இருந்த மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரரை காண பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

    இன்று இரவு அனந்த ராயர் பூப்பல்லக்கில் மீனாட்சி அம்மனும், தங்க அம்பாரியுடன் கூடிய யானை வாகனத்தில் பிரியா விடையுடன் சுந்தரேசுவரரும் ஆடி வீதிகளில் வலம் வரு கிறார்கள்.

    Next Story
    ×