என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருத்தணி கோவிலில் பக்தர்கள் குவிந்தனர்: பல மணி நேரம் காத்திருந்து தரிசனம்
Byமாலை மலர்1 Jan 2019 6:13 AM GMT (Updated: 1 Jan 2019 6:13 AM GMT)
ஆங்கில புத்தாண்டு மற்றும் முருகப்பெருமானுக்கு உகந்த நாளான செவ்வாய்கிழமை என்பதால் திருத்தணி கோவிலில் காலை முதல் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் குவிந்தனர்.
ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு, திருத்தணி முருகன் கோவிலில், இன்று அதிகாலை, 4 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், நடந்தது, தொடர்ந்து, மூலவருக்கு தங்ககீரிடம், தங்கவேல், பச்சை மாணிக்க மரகதகல் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து சிறப்பு தீபாராதனை நடந்தது.
இரவு, 7.30 மணிக்கு வெள்ளிநாக வாகனத்தில் உற்சவர் முருகப்பெருமான் வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளி, மாடவீதியில் திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஆங்கில புத்தாண்டு மற்றும் முருகப்பெருமானுக்கு உகந்த நாளான செவ்வாய்கிழமை என்பதால் திருத்தணி கோவிலில் காலை முதல் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் குவிந்தனர். இதனால், பொது வழியில் 6 மணி நேரம் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து மூலவரை தரிசனம் செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X