search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மழை பெய்த நிலையில் மைதானம்
    X
    மழை பெய்த நிலையில் மைதானம்

    மழையால் ஆட்டம் பாதிப்பு : ஐசிசி விதி என்ன சொல்கிறது?

    இந்தியா-நியூசிலாந்து மோதிய அரையிறுதி போட்டி மழையால் பாதிக்கப்பட்டதையடுத்து ஐசிசி கூறும் விதி என்ன என்பதை பார்க்கலாம்.
    இந்தியா-நியூசிலாந்து மோதிய அரையிறுதி போட்டி மழையால் பாதிக்கப்பட்டதால் ஐசிசி-யின் ரிசர்வ் டே விதிப்படி ஆட்டம் நடைபெற வாய்ப்பு உள்ளது.

    உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் அரையிறுதி ஆட்டம் மான்செஸ்டர் ஓல்டு டிராபோர்டில் நடைபெற்றது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 46.1 ஓவரில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 211 ரன்கள் சேர்த்திருந்தபோது மழை குறிக்கீட்டது. இதனால் ஆட்டம் பாதியில் தடைபட்டது.

    விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் இந்திய அணி வீரர்கள்


    இதுபோன்ற முக்கியமான போட்டிகளில் மழை குறிக்கீடு செய்து ஆட்டம் தடைபட்டால் வெற்றி தோல்வி முடிவை நிர்ணயம் செய்ய மாற்றுநாள் எனப்படும் ரிசர்வ் டே என்ற முறையை ஐசிசி அறிமுகப்படுத்தியது.

    ஐசிசி-யின் ரிசர்வ் டே விதி கூறுவதாவது:-

    உலகக்கோப்பை தொடரின் முக்கிய போட்டிகள் மழையால் தடைபட்டால் ரிசர்வ் டே என்ற முறைப்படி ஆட்டம் வேறொரு நாளுக்கு மாற்றப்படும். மேலும் போட்டி கைவிடப்பட்ட அதே மைதானத்திலேயே  ஆட்டத்தில் மீதம் இருக்கும் ஓவரில் இருந்து வீசப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

    ஐசிசி-யின் இந்த விதியின் மூலம் மழைகாரணமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ள இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையேயான அரையிறுதி ஆட்டம் இன்று ஒருவேளை முடிவு தெரியாமால் கைவிடப்பட்டாலும் ரிசர்வ் டே முறைப்படி மீண்டும் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.  

    இன்றைய நிலவரப்படி ஒருவேளை மழை முற்றிலும் நின்று ஆட்டம் மீண்டும் தொடர்ந்தால் டக்வொர்த் லீவிஸ் முறை பின்பற்றப்பட்டு இந்திய அணிக்கு 46 ஓவர்களில் 237 ரன்கள் என்ற இலக்கு நிர்ணயம் செய்யப்படும். ஒருவேளை நேரமின்மை காரணம் ஏற்பட்டால் ஆட்டம் 20-ஓவர்களாக குறைக்கப்படும். அவ்வாறு குறைக்கப்பட்டால் 148 ரன்கள் என்ற இலக்கு இந்திய அணிக்கு நிர்ணயிக்கப்படும்.
    Next Story
    ×