என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தென்ஆப்பிரிக்காவுக்கு 309 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது பாகிஸ்தான்
Byமாலை மலர்23 Jun 2019 1:26 PM GMT (Updated: 23 Jun 2019 1:28 PM GMT)
லண்டன் லார்ட்ஸில் நடைபெற்று வரும் ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்காவுக்கு 309 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது பாகிஸ்தான்.
பாகிஸ்தான் - தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதும் உலகக்கோப்பை தொடரின் 30-வது லீக் ஆட்டம் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி கேப்டன் சர்பராஸ் அகமது பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி பாகிஸ்தான் அணியின் இமால் உல் ஹக், பஹர் ஜமான் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.
இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இருவரும் அரைசதம் அடிப்பார்கள் என்று எதிர்பார்த்த நிலையில் இம்ரான் தாஹிர் பந்தில் ஆட்டமிழந்தனர். இமாம் உல் ஹக் 44 ரன்களும், பஹர் ஜமான் 44 ரன்களும் சேர்த்து ஆட்டமிழந்தனர்.
இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 14.5 ஓவரில் 81 ரன்கள் சேர்த்து நல்ல அடித்தளம் அமைத்துக் கொடுத்தது. நட்சத்திர வீரர் பாபர் ஆசம் 69 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.
பாபர் ஆசம் ஆட்டமிழக்கும்போது பாகிஸ்தான் 41.2 ஓவரில் 224 ரன்களே எடுத்திருந்தது. அடுத்து வந்த ஹரிஸ் சோஹைல் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் பாகிஸ்தான் 300 ரன்னைத் தாண்டியது. அவர் 59 பந்தில் 89 ரன்கள் குவித்து கடைசி ஓவரின் ஐந்தாவது பந்தில் ஆட்டமிழக்க பாகிஸ்தான் 50 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 308 ரன்கள் குவித்துள்ளது.
பின்னர் 309 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் தென்ஆப்பிரிக்கா பேட்டிங் செய்து வருகிறது.
இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இருவரும் அரைசதம் அடிப்பார்கள் என்று எதிர்பார்த்த நிலையில் இம்ரான் தாஹிர் பந்தில் ஆட்டமிழந்தனர். இமாம் உல் ஹக் 44 ரன்களும், பஹர் ஜமான் 44 ரன்களும் சேர்த்து ஆட்டமிழந்தனர்.
இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 14.5 ஓவரில் 81 ரன்கள் சேர்த்து நல்ல அடித்தளம் அமைத்துக் கொடுத்தது. நட்சத்திர வீரர் பாபர் ஆசம் 69 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.
பாபர் ஆசம் ஆட்டமிழக்கும்போது பாகிஸ்தான் 41.2 ஓவரில் 224 ரன்களே எடுத்திருந்தது. அடுத்து வந்த ஹரிஸ் சோஹைல் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் பாகிஸ்தான் 300 ரன்னைத் தாண்டியது. அவர் 59 பந்தில் 89 ரன்கள் குவித்து கடைசி ஓவரின் ஐந்தாவது பந்தில் ஆட்டமிழக்க பாகிஸ்தான் 50 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 308 ரன்கள் குவித்துள்ளது.
பின்னர் 309 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் தென்ஆப்பிரிக்கா பேட்டிங் செய்து வருகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X