என் மலர்tooltip icon

    உலகம்

    பிப்ரவரியில் அமெரிக்க அதிபர் டிரம்ப்-ஐ சந்திக்கிறார் பிரதமர் மோடி?
    X

    பிப்ரவரியில் அமெரிக்க அதிபர் டிரம்ப்-ஐ சந்திக்கிறார் பிரதமர் மோடி?

    • அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் மாபெரும் வெற்றி பெற்றார்.
    • இஸ்ரேல் பிரதமர் அதிபர் டிரம்ப்-ஐ சந்திப்பார் என்று தகவல்.

    பிரதமர் நரேந்திர மோடி பிப்ரவரி மாதம் வெள்ளை மாளிகையில் வைத்து தன்னை சந்திப்பார் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார்.

    "இன்று காலை அவருடன் நீண்ட நேரம் பேசினேன். அவர் அடுத்த மாதம், அநேகமாக பிப்ரவரியில் வெள்ளை மாளிகைக்கு வருவார். இந்தியாவுடன் எங்களுக்கு நல்ல உறவு இருக்கிறது," என்று டிரம்ப் கூறினார்.

    முதல் முறை அதிபராக பதவி வகித்த போது, டொனால்டு டிரம்ப் கடைசியாக இந்தியாவுக்கு தான் வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    அதிபர் டிரம்ப் மற்றும் பிரதமர் மோடியும் இடையே நல்ல நட்புறவு நீடிக்கிறது. இருவரும் கடந்த செப்டம்பர் 2019-ல் ஹூஸ்டனில் நடந்த இரண்டு வெவ்வேறு பேரணிகள் மற்றும் கடந்த பிப்ரவரி 2020-ல் அகமதாபாத்தில் ஆயிரக்கணக்கான மக்களிடம் உரையாற்றினர்.

    2024 நவம்பர் மாதம் அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றதும் அவருடன் பேசிய முதல் மூன்று உலகத் தலைவர்களில் பிரதமர் மோடியும் ஒருவர் ஆவார்.

    Next Story
    ×