என் மலர்tooltip icon

    ஸ்பெயின்

    • ஸ்பெயினில் பார்சிலோனா ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது.
    • இதில் ஆஸ்திரேலிய வீரர் டி மினார் காலிறுதிக்கு முன்னேறினார்.

    மாட்ரிட்:

    ஸ்பெயினின் பார்சிலோனா நகரில் பார்சிலோனா ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. ஆண்களுக்கான டென்னிஸ் தொடரில் முன்னணி வீரர்கள் பங்கேற்று உள்ளனர். கடந்த 12ம் தேதி தொடங்கிய இந்தத் தொடர் வரும் 20ம் தேதி வரை நடைபெற உள்ளது.

    இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினார், பிரிட்டனின் ஜேக்கப் பெர்ன்லி உடன் மோதினார்.

    இதில் டி மினார் 6-1, 6-2 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

    இன்று நடைபெறும் காலிறுதியில் டி மினார், கார்லோஸ் அல்காரசை சந்திக்கிறார்.

    • ஸ்பெயினில் பார்சிலோனா ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது.
    • ரஷிய வீரர் ரூப்லெவ் 2வது சுற்றில் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

    மாட்ரிட்:

    ஸ்பெயினின் பார்சிலோனா நகரில் பார்சிலோனா ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. ஆண்களுக்கான டென்னிஸ் தொடரில் முன்னணி வீரர்கள் பங்கேற்று உள்ளனர். கடந்த 12ம் தேதி தொடங்கிய இந்தத் தொடர் வரும் 20ம் தேதி வரை நடைபெற உள்ளது.

    இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் ரஷியாவின் ஆண்ட்ரே ரூப்லெவ், ஸ்பெயினின் டேவிடோவிச் உடன் மோதினார்.

    இதில் ரூப்லெவ் 5-7, 4-6 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார். டேவிடோவிச் காலிறுதிக்கு முன்னேறினார்.

    நாளை நடைபெறும் காலிறுதியில் காஸ்பர் ரூட், ஹோல்ஜர் ரூனேவை சந்திக்கிறார்.

    • ஸ்பெயினில் பார்சிலோனா ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது.
    • இதில் ஸ்பெயின் வீரர் கார்லோஸ் காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

    மாட்ரிட்:

    ஸ்பெயினின் பார்சிலோனா நகரில் பார்சிலோனா ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. ஆண்களுக்கான டென்னிஸ் தொடரில் முன்னணி வீரர்கள் பங்கேற்று உள்ளனர். கடந்த 12ம் தேதி தொடங்கிய இந்தத் தொடர் வரும் 20ம் தேதி வரை நடைபெற உள்ளது.

    இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்காரஸ், செர்பியாவின் லாஸ்லோ டிரே உடன் மோதினார்.

    இதில் அல்காரஸ் 6-2, 6-4 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

    • ஸ்பெயினில் பார்சிலோனா ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது.
    • இதில் செர்பிய வீரர் மெட்ஜேடோவிக் 2வது சுற்றில் தோல்வி அடைந்தார்.

    மாட்ரிட்:

    ஸ்பெயினின் பார்சிலோனா நகரில் பார்சிலோனா ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. ஆண்களுக்கான டென்னிஸ் தொடரில் முன்னணி வீரர்கள் பங்கேற்று உள்ளனர். கடந்த 12ம் தேதி தொடங்கிய இந்தத் தொடர் வரும் 20ம் தேதி வரை நடைபெற உள்ளது.

    இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் நார்வேயின் காஸ்பர் ரூட், செர்பியான் மெட்ஜேடோவிக் உடன் மோதினார்.

    இதில் காஸ்பர் ரூட் 7-5, 7-5 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

    நாளை நடைபெறும் காலிறுதியில் காஸ்பர் ரூட், ஹோல்ஜர் ரூனேவை சந்திக்கிறார்.

    • ஸ்பெயினில் பார்சிலோனா ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது.
    • இதில் டென்மார்க் வீரர் ஹோல்ஜர் ரூனே 2வது சுற்றில் வெற்றி பெற்றார்.

    மாட்ரிட்:

    ஸ்பெயினின் பார்சிலோனா நகரில் பார்சிலோனா ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. ஆண்களுக்கான டென்னிஸ் தொடரில் முன்னணி வீரர்கள் பங்கேற்று உள்ளனர். கடந்த 12ம் தேதி தொடங்கிய இந்தத் தொடர் வரும் 20ம் தேதி வரை நடைபெற உள்ளது.

    இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் டென்மார்க்கின் ஹோல்ஜர் ரூனே, அர்ஜெண்டினாவின் செபாஸ்டியன் பேயஸ் உடன் மோதினார்.

    இதில் 4-6 என முதல் செட்டை இழந்த ரூனே அடுத்த இரு செட்களை 6-1, 6-2 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

    மற்றொரு போட்டியில் கிரீஸ் வீரர் ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ் 7-6 (7-4), 6-4 என்ற செட் கணக்கில் ரெய்லி ஒபெல்காவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.

    • ஸ்பெயினில் பார்சிலோனா ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது.
    • இதில் ஆஸ்திரேலிய வீரர் அலெக்ஸ் டி மினார் 2வது சுற்றுக்கு முன்னேறினார்.

    மாட்ரிட்:

    ஸ்பெயினின் பார்சிலோனா நகரில் பார்சிலோனா ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. ஆண்களுக்கான டென்னிஸ் தொடரில் முன்னணி வீரர்கள் பங்கேற்று உள்ளனர். கடந்த 12ம் தேதி தொடங்கிய இந்தத் தொடர் வரும் 20ம் தேதி வரை நடைபெற உள்ளது.

    இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினார், அர்ஜெண்டினாவின் தாமஸ் மார்ட்டின் உடன் மோதினார்.

    இதில் டி மினார் 6-4, 6-4 என்ற செட் கணக்கில் வென்று 2வது சுற்றுக்கு முன்னேறினார்.

    மற்றொரு போட்டியில் ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்காரஸ் 6-2, 7-6 (8-6) என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் ஈதன் குயினை வீழ்த்தி 2வது சுற்றுக்கு முன்னேறினார்.

    • ஸ்பெயினில் பார்சிலோனா ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது.
    • இதில் ரஷிய வீரர் ரூப்லெவ் முதல் சுற்றில் வெற்றி பெற்றார்.

    மாட்ரிட்:

    ஸ்பெயினின் பார்சிலோனா நகரில் பார்சிலோனா ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. ஆண்களுக்கான டென்னிஸ் தொடரில் முன்னணி வீரர்கள் பங்கேற்று உள்ளனர். கடந்த 12ம் தேதி தொடங்கிய இந்தத் தொடர் வரும் 20ம் தேதி வரை நடைபெற உள்ளது.

    இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் ரஷியாவின் ஆண்ட்ரே ரூப்லெவ், நெதர்லாந்தின் ஜெஸ்பர் டி ஜாங் உடன் மோதினார்.

    இதில் ரூப்லெவ் 6-1, 6-3 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    மற்றொரு போட்டியில் கிரீஸ் வீரர் ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ் 6-2, 6-2 என்ற செட் கணக்கில் ரெய்லி ஒபெல்காவை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    • ஸ்பெயினில் பார்சிலோனா ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது.
    • இந்தத் தொடரில் இருந்து இத்தாலி வீரர் லாரன்சோ முசெட்டி காயம் காரணமாக விலகினார்.

    மாட்ரிட்:

    ஸ்பெயினின் பார்சிலோனா நகரில் பார்சிலோனா ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. ஆண்களுக்கான டென்னிஸ் தொடரில் முன்னணி வீரர்கள் பங்கேற்று உள்ளனர்.

    கடந்த 12ம் தேதி தொடங்கிய இந்தத் தொடர் வரும் 20ம் தேதி வரை நடைபெற உள்ளது.

    இந்நிலையில், பார்சிலோனா ஓபன் தொடரில் இருந்து இத்தாலி வீரர் லாரன்சோ முசெட்டி காயம் காரணமாக விலகியுள்ளார்.

    லாரன்சோ முசெட்டி நேற்று நடந்த மாண்டே கார்லோ டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டியில் கார்லோஸ் அல்காரசிடம் தோல்வி அடைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த வாடிக்கையாளர்கள் இந்த ஆய்வில் பங்கேற்றனர்.
    • ஸ்பெயினின் மாட்ரிட் நகரில் விருதுகள் வழங்கும் விழா நேற்று முன்தினம் நடைபெற்றது.

    மாட்ரிட்:

    பிரிட்டனில் செயல்பட்டு வருவது ஸ்கைட்ரேக்ஸ் நிறுவனம். இந்த நிறுவனம் ஆகஸ்ட் 2024 முதல் பிப்ரவரி 2025 வரை ஆய்வு ஒன்றை நடத்தியது. நூற்றுக்கும் அதிகமான நாடுகளைச் சேர்ந்த விமான நிலைய வாடிக்கையாளர்கள் இந்த ஆய்வில் பங்கேற்றனர்.

    உலகெங்கிலும் உள்ள 565 விமான நிலையங்களில் ஸ்கைட்ராக்ஸ் நிறுவனம் பயணிகளிடம் சேவை குறித்து ஆய்வு நடத்தி உள்ளது.

    அதன்படி, உலகின் தலைசிறந்த விமான நிலைய உணவு, உலகின் தலைசிறந்த விமான நிலைய கழிவறை, ஆசியாவின் தலைசிறந்த விமான நிலையம் என பல்வேறு விருதுகளை சாங்கி விமான நிலையம் குவித்துள்ளது. இரண்டாவது இடத்தில் டோஹா விமான நிலையமும், ஜப்பானின் டோக்கியோ விமான நிலையம் மூன்றாவது இடத்திலும் உள்ளது.

    ஸ்பெயினின் மாட்ரிட் நகரில் விருதுகள் வழங்கும் விழா நேற்று முன்தினம் நடைபெற்றது.

    இந்நிலையில், இந்தியாவின் 4 விமான நிலையங்கள் முதல் நூறு இடங்களில் இடம் பிடித்துள்ளன. டெல்லி இந்திராகாந்தி விமான நிலையம் 32வது இடத்திலும், பெங்களூரு விமான நிலையம் 48வது இடத்திலும், ஐதராபாத் 56வது இடத்திலும், மும்பை விமான நிலையம் 76வது இடத்திலும் நீடிக்கின்றன.

    • வருமானத்தில் பாதி வாடகைக்கே செலவிட வேண்டியுள்ளது என மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
    • இந்த விஷயம் தொடர்பாக அரசாங்கம் தரப்பில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    மாட்ரிட்:

    ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட் மக்கள் அடர்த்தி மிகுந்த நகரங்களில் ஒன்று. வேலைவாய்ப்பு, கல்வி உள்ளிட்ட பல தேவைகளுக்காக வெளிநாடுகளில் இருந்து ஏராளமானோர் அங்கு குடியேறுகின்றனர். ஆனால் அந்த அளவுக்கு அங்கு வீடுகளின் எண்ணிக்கை இல்லை.

    இதனை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட வீட்டு உரிமையாளர்கள், தங்கள் வீட்டின் வாடகையை உயர்த்தி வருகின்றனர். இதனால் வருமானத்தில் பாதி வாடகைக்கே செலவிட வேண்டியுள்ளது என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

    இந்த விஷயம் தொடர்பாக அரசாங்கம் தரப்பில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதையடுத்து, வீட்டு வாடகை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து அங்குள்ள பல்வேறு தொழிற்சங்கங்கள் போராட்டத்தில் குதித்தன.

    இந்நிலையில், தலைநகர் மாட்ரிட்டில் நடைபெற்ற போராட்டத்தில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் கலந்துகொண்டு பேரணியாகச் சென்றனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து முடங்கியது.

    • ஸ்பெயினில் நடந்து வரும் கார் ரேசில் நடிகர் அஜித் பங்கேற்றார்.
    • கார் விபத்துக்கு உள்ளானதில் அஜித் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

    வாலென்சியா:

    நடிகர் அஜித்குமாரின் குட் பேட் அக்லி படம் வரும் ஏப்ரல் மாதம் 10-ம் தேதி வெளியாக உள்ளது. சினிமாவில் நடித்து வரும் அஜித்குமார் கடந்த சில தினங்களாக கார் ரேசில் பங்கேற்பதில் ஆர்வம் காட்டி வருகிறார்.

    சமீபத்தில் துபாயில் நடந்த கார் ரேசில் அஜித்குமாரின் அணி 3-வது இடத்தைப் பிடித்தது. இந்த ரேசில் அஜித்குமாரின் கார் விபத்தில் சிக்கியது. அதில் அதிர்ஷ்டவசமாக காயமின்றி அவர் தப்பினார்.

    இந்நிலையில், ஸ்பெயினின் வாலென்சியா நகரில் நடந்த கார் ரேசில் அஜித்குமார் பங்கேற்றார். கடந்த சில தினங்களாக பயிற்சியில் ஈடுபட்ட வந்த அவர், தற்போது ரேசில் பங்கேற்றார்.

    ரேசின் போது குறுக்கே வந்த ஒரு காரால் அஜித் ஓட்டிச்சென்ற கார் விபத்தில் சிக்கியது. இதில் அவரது கார் 3 முறை பல்டியடித்தது. ஆனாலும் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்.

    அஜித்தின் கார் விபத்தில் சிக்கியது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    கார் ரேசில் விபத்தில் சிக்கிய அஜித்குமார் நலமுடன் உள்ளார் என தெரிவித்த அவரது தரப்பினர், இந்த ரேசில் அஜித்குமார் 14வது இடம் பிடித்தார் என தெரிவித்தனர்.

    • புகையிலை மற்றும் சிகரெட் பாக்கெட்டுகளில் எழுதப்பட்ட எச்சரிக்கைகள் போல.
    • குழந்தைகள் விளையாட்டிலும் அதிக கவனம் செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இன்றைய உலகில் அன்றாட வாழ்க்கையில் இன்றியமையாததாக அமைந்துள்ளது செல்போன்... உணவு, தூக்கம் இல்லாமல் கூட இருந்திடலாம்.. ஆனால் செல்போன் இல்லாத வாழ்க்கையை வாழ முடியாது என்றாகிவிட்டது.

    அதிக நேரம் செல்போன் பயன்படுத்துவதால் ஏற்படும் உடல்நல பாதிப்புகள் குறித்து பல ஆய்வு முடிவுகள் வெளிவந்தாலும் அதனை கண்டுகொள்வதில்லை. இதனால் அதிரடி நடவடிக்கையில் ஸ்பெயின் அரசு இறங்கி உள்ளது.

    ஐரோப்பிய நாடான ஸ்பெயினில் விற்கப்படும் செல்போன்களில் எச்சரிக்கை வாசகங்களை விரைவில் பார்க்கலாம். அதாவது, செல்போன்களால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து அதில் எழுதப்பட்டிருக்கும். புகையிலை மற்றும் சிகரெட் பாக்கெட்டுகளில் எழுதப்பட்ட எச்சரிக்கைகள் போல.

    செல்போன் உபயோகிப்பதை 'பொது சுகாதார தொற்றுநோய்' எனக்குறிப்பிட்டுள்ள அரசு, நாட்டு மக்கள் அதிக நேரம் மொபைலை உபயோகிப்பதை தடுக்கும் நோக்கில் இந்த புதிய முன்னெடுப்பை எடுக்க உள்ளது.

    இதில் மொபைல் போன்களின் தீய விளைவுகள் பற்றி இடம்பெறும். இதற்காக 250 பக்க அறிக்கை தயாரிக்க 50 பேர் நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது.

    13 வயது வரையிலான குழந்தைகளுக்கான டிஜிட்டல் சாதனங்களைப் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்த இந்தக் குழு அறிவுறுத்தியுள்ளது. குழந்தைகளுக்கு 3 வயது வரை டிஜிட்டல் சாதனம் கொடுக்கக்கூடாது. 6 வயது குழந்தைக்கு தேவைப்படும் போதெல்லாம் செல்போன் கொடுக்க வேண்டும். இது தவிர, 6-12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் இணையம் இல்லாத போன்களைப் பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இது தவிர, குழந்தைகள் விளையாட்டிலும் அதிக கவனம் செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    ×