என் மலர்
அயர்லாந்து
- அயர்லாந்து அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.
- இந்திய அணியில் ரிங்கு மற்றும் ப்ரஷித் கிருஷ்ணா அறிமுகமாகினர்.
இந்திய கிரிக்கெட் அணி அயர்லாந்தில் பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது.
கேப்டன் ஹர்திக் பாண்ட்யா, சுப்மன் கில், சூர்யகுமார் யாதவ், குல்தீப் யாதவ், சஹல் உள்ளிட்ட முன்னணி வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
இந்திய அணிக்கு வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா தலைமை தாங்குகிறார். ருதுராஜ் கெய்க்வாட், ஜெய்ஸ்வால், திலக் வர்மா, ரிங்கு சிங், வாஷிங்டன் சுந்தர், ஷிவம் துபே, ஷபாஸ் அகமது, சஞ்சு சாம்சன், ஜிதேஷ் ஷர்மா, ரவி பிஷ்னோய், பிரசித் கிருஷ்ணா, அர்ஷ்தீப்சிங், முகேஷ்குமார், அவேஷ்கான் ஆகியோரும் இடம் பிடித்துள்ளனர். இந்திய அணியில் ரிங்கு மற்றும் ப்ரஷித் கிருஷ்ணா அறிமுகமாகினர்.
இந்நிலையில், இந்தியா, அயர்லாந்து அணிகள் மோதும் முதல் டி20 போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்கியது.
இந்த ஆட்டத்திற்கான டாஸ் போடப்பட்டது. இதில், டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் பும்ரா பவுலிங் தேர்வு செய்தார்.
இதையடுத்து அயர்லாந்து அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.
- பும்ரா தலைமையில் இந்திய அணி அயர்லாந்து தொடரில் பங்கேற்கிறது.
- இன்றைய ஆட்டம் இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.
டப்ளின்:
இந்திய கிரிக்கெட் அணி அயர்லாந்தில் பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது.
கேப்டன் ஹர்திக் பாண்ட்யா, சுப்மன் கில், சூர்யகுமார் யாதவ், குல்தீப் யாதவ், சஹல் உள்ளிட்ட முன்னணி வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
இந்திய அணிக்கு வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா தலைமை தாங்குகிறார்.
ருதுராஜ் கெய்க்வாட், ஜெய்ஸ்வால், திலக் வர்மா, ரிங்கு சிங், வாஷிங்டன் சுந்தர், ஷிவம் துபே, ஷபாஸ் அகமது, சஞ்சு சாம்சன், ஜிதேஷ் ஷர்மா, ரவி பிஷ்னோய், பிரசித் கிருஷ்ணா, அர்ஷ்தீப்சிங், முகேஷ்குமார், அவேஷ்கான் ஆகியோரும் இடம் பிடித்துள்ளனர்.
இந்நிலையில், இந்தியா, அயர்லாந்து அணிகள் மோதும் முதல் டி20 போட்டி இன்று நடைபெறுகிறது. இதனையொட்டி இந்திய அணி வீரர்கள் நேற்று பயிற்சியில் ஈடுபட்டனர்.
பால்பிரீன் தலைமையிலான அயர்லாந்து அணி இந்தியாவுக்கு அதிர்ச்சி கொடுத்து முதல் முறையாக வெற்றி பெறும் ஆர்வத்தில் இருக்கிறது. இன்றைய ஆட்டம் இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.
- இந்திய அணி அயர்லாந்து தொடரில் பங்கேற்கிறது.
- வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா கேப்டன் பொறுப்பேற்றுள்ளார்.
புதுடெல்லி:
இந்திய கிரிக்கெட் அணி அயர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது.
கேப்டன் ஹர்திக் பாண்ட்யா, சுப்மன் கில், சூர்யகுமார் யாதவ், குல்தீப் யாதவ், சஹல் உள்ளிட்ட முன்னணி வீரர்களுக்கு இந்திய அணியில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
ஜஸ்பிரித் பும்ரா, ருதுராஜ் கெய்க்வாட், ஜெய்ஸ்வால், திலக் வர்மா, ரிங்கு சிங், வாஷிங்டன் சுந்தர், ஷிவம் துபே, ஷபாஸ் அகமது, சஞ்சு சாம்சன், ஜிதேஷ் ஷர்மா, ரவி பிஷ்னோய், பிரசித் கிருஷ்ணா, அர்ஷ்தீப்சிங், முகேஷ் குமார், ஆவேஷ்கான் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.
இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணி நேற்று விமானம் மூலம் அயர்லாந்து புறப்பட்டுச் சென்றது.
இந்திய அணி கேப்டனாக வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா நியமிக்கப்பட்டுள்ளார். சி.எஸ்.கே .வீரர் ருதுராஜ் கெய்வாட் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி டப்ளினில் நாளை மறுதினம் இரவு 7.30 மணிக்கு நடக்கிறது. 2-வது டி20 போட்டி ஆகஸ்ட் 20-ம் தேதியும், 3-வது டி20 போட்டி 23-ம் தேதியும் நடைபெறுகிறது.
- இறுதிச்சுற்றில் பிரியன்ஷ், அல்ஜாஷ் பிரென்க் என்ற வீரரை வீழ்த்தினார்.
- இந்தியா இதுவரை 5 தங்கம் உள்பட 9 பதக்கங்களை வென்றுள்ளது.
லிமரிக்:
அயர்லாந்தில் இளையோருக்கான உலக வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றுவருகிறது. இதில், 21 வயதிற்குட்பட்டோருக்கான காம்பவுண்டு வில்வித்தை போட்டியில், இந்தியாவின் பிரியன்ஷ், சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தார். இவர் இறுதிச்சுற்றில் ஸ்லோவேனியாவைச் சேர்ந்த அல்ஜாஷ் பிரென்க் என்ற வீரரை 147-141 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தினார்.
முன்னதாக 18 வயதுக்குட்பட்டோருக்கான போட்டியில் இந்திய வீராங்கனை அதிதி கோபிசந்த் ஸ்வாமி காம்பவுண்டு பிரிவில் அமெரிக்காவின் லீன் டிரேக்கை 142-136 என்ற கணக்கில் வீழ்த்தி தங்கம் வென்றார்.
இதன்மூலம் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது. இதில் 5 தங்கம் அடங்கும்
- அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அரசுமுறை பயணமாக அயர்லாந்து சென்றுள்ளார்.
- கொட்டும் மழையில் குடைபிடித்தபடி நின்று அவருக்கு அயர்லாந்து மக்கள் வரவேற்பு அளித்தனர்.
டப்ளின்:
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அரசுமுறை பயணமாக அயர்லாந்து சென்றுள்ளார். அங்கு நடைபெற்ற புனித வெள்ளி சமாதான ஒப்பந்தத்தின் 25-வது ஆண்டு விழாவில் அவர் பங்கேற்றார்.
இந்தப் பயணத்தின் மூலம் அயர்லாந்தில் தொழில் முதலீடுகளை அதிகரிப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து அயர்லாந்து வெளியுறவு மந்திரி மைக்கேல் மார்ட்டினுடன் அங்குள்ள கார்லிங்போர்ட் கோட்டைக்கு அதிபர் ஜோ பைடன் சென்றார். அப்போது அங்கு கொட்டும் மழையிலும் குடைபிடித்தபடி நின்று ஜோ பைடனுக்கு அயர்லாந்து மக்கள் வரவேற்பு அளித்தனர்.
- 87 உறுப்பினர்கள் லியோ வரத்கர் பிரதமராவதற்கு ஆதரவாக வாக்களித்தனர்.
- 62 பேர் எதிராக வாக்களித்தனர்.
டுப்ளின் :
அயர்லாந்து நாட்டின் பிரதமராக கடந்த 2017 முதல் 2020 வரை பதவி வகித்தவர் இந்திய வம்சாவளியை சேர்ந்த லியோ வரத்கர். 38 வயதில் பிரதமர் ஆனது மூலம் அயர்லாந்தின் இளம் பிரதமர் என்கிற பெருமையை பெற்றார். கடந்த 2020ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் லியோ வரத்கர் தலைமையிலான பைன் கேல் கட்சி பியனா பெயில் மற்றும் பசுமை கட்சியுடன் இணைந்து கூட்டணி ஆட்சியை அமைத்தது. அதில் லியோ வரத்கர் துணைப் பிரதமராகவும், தொழில், வர்த்தகம் மற்றும் வேலைவாய்ப்பு மந்திரியாகவும் பணியாற்றினார்.
முன்னதாக கூட்டணி அரசாங்கத்தை அமைப்பது தொடர்பாக செய்து கொண்ட ஒப்பந்தத்தில் 2022 டிசம்பர் வரை பியானா பெயில் கட்சியின் தலைவர் மைக்கேல் மார்ட்டின் பிரதமராகவும், அதன் பிறகு அரசின் எஞ்சிய பதவிக்காலம் முழுவதும் லியோ வரத்கர் பிரதமராக இருப்பார் என்றும் முடிவு செய்யப்பட்டது. அதன்படி லியோ வரத்கரை புதிய பிரதமராக தேர்வு செய்வதற்கான ஓட்டெடுப்பு நாடாளுமன்றத்தில் நடந்தது.
இதில் 87 உறுப்பினர்கள் லியோ வரத்கர் பிரதமராவதற்கு ஆதரவாக வாக்களித்தனர். 62 பேர் எதிராக வாக்களித்தனர். இதன் மூலம் லியோ வரத்கர் மீண்டும் அயர்லாந்து பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
- மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர்.
- நிலநடுக்கம் காரணமாக ஏற்பட்ட சேத விவரங்கள் உடனடியாக தெரியவில்லை.
பப்புவா நியூ கினியா அருகே உள்ள நியூ அயர்லாந்து தீவு பிராந்தியத்தில் இன்று காலை சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.2 புள்ளிகளாக பதிவானது.
நில நடுக்கம் 100 கி.மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. நில நடுக்கத்தால் வீடுகள் குலுங்கின. இதனால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர்.
நிலநடுக்கம் காரணமாக ஏற்பட்ட சேத விவரங்கள் உடனடியாக தெரியவில்லை.
- முதலில் ஆடிய ஆப்கானிஸ்தான் 15 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 95 ரன்கள் எடுத்தது.
- அடுத்து ஆடிய அயர்லாந்து வெற்றிக்கு தேவையான ரன்களை எடுத்து டி20 தொடரை வென்றது.
பெல்பாஸ்ட்:
அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆப்கானிஸ்தான் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. 4 போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா 2 போட்டிகளில் வெற்றி பெற்றன.
இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 5வது மற்றும் கடைசி டி20 போட்டி பெல்பாஸ்டில் நடைபெற்றது. டாஸ் வென்ற அயர்லாந்து முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் 15 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 95 ரன்கள் எடுத்தபோது மழை பெய்ததால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. அதிகபட்சமாக உஸ்மான் கனி 44 ரன்கள் எடுத்தார்.
மழை தொடர்ந்து பெய்ததால், ட்க்வொர்த் லூயிஸ் முறையில் 7ஓவரில் 56 ரன்கள் எடுத்தால் வெற்றி என அயர்லாந்து அணிக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
இதையடுத்து களமிறங்கிய அயர்லாந்து அணி 6.4 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 56 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதன்மூலம் டி20 தொடரை 3-2 என கைப்பற்றி அசத்தியது.
ஆட்ட நாயகன் விருது மார்க் அடைருக்கும், தொடர் நாயகன் விருது டாக்ரெலுக்கும் வழங்கப்பட்டது.
- முதலில் ஆடிய ஆப்கானிஸ்தான் அணி 132 ரன்கள் குவித்தது.
- அடுத்து ஆடிய அயர்லாந்து 105 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
பெல்பாஸ்ட்:
அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆப்கானிஸ்தான் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. முதல், 2வது டி20 போட்டியில் அயர்லாந்தும், 3வது போட்டியில் ஆப்கானிஸ்தானும் வெற்றி பெற்றது.
இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான நான்காவது டி20 பெல்பாஸ்டில் நடைபெற்றது. டாஸ் வென்ற அயர்லாந்து முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. மழை காரணமாக ஆட்டம் 11 ஓவராகக் குறைக்கப்பட்டது.
அதன்படி, முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட 11 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 132 ரன்கள் குவித்தது. அந்த நஜிபுல்லா அரை சதமடித்தார். கடைசி கட்டமாக அதிரடி காட்டிய ரஷித்கான் 10 பந்துகளில் 3 சிக்சர், ஒரு பவுண்டரி உள்பட 31 ரன்கள் குவித்தார்.
இதையடுத்து, 133 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் அயர்லாந்து அணி களமிறங்கியது. டாக்ரெல் அதிகபட்சமாக 41 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார். இறுதியில், அயர்லாந்து 20 ஓவரில் 101 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இதன்மூலம் ஆப்கானிஸ்தான் அணி 27 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ரஷித் கான் ஆட்டநாயகன் விருது பெற்றார்.
டி20 தொடரில் இரு அணிகளும் 2-2 என சமனிலை வகிக்கிறது. வெற்றியாளரை நிர்ணயிக்கும் 5வது மற்றும் கடைசி போட்டி வரும் 17ம் தேதி நடைபெறுகிறது.
- முதலில் ஆடிய ஆப்கானிஸ்தான் 189 ரன்கள் குவித்தது.
- அடுத்து ஆடிய அயர்லாந்து 167 ரன்கள் மட்டுமே எடுத்தது.
பெல்பாஸ்ட்:
அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆப்கானிஸ்தான் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. முதல், 2வது டி20 போட்டியில் அயர்லாந்து வெற்றி பெற்றது.
இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டி20 பெல்பாஸ்டில் நடைபெற்றது. டாஸ் வென்ற அயர்லாந்து முதலில் பந்துவீச்சி தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 189 ரன்கள் குவித்தது. ஆப்கானிஸ்தான் அணியில் அதிகபட்சமாக கர்பாஸ் அரை சதமடித்து 53 ரன்கள் எடுத்தார். நஜிபுல்லா 42 ரன் எடுத்தார்.
190 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் அயர்லாந்து அணி களமிறங்கியது. டாக்ரெல் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்து 58 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார். பியான் ஹாண்ட் 36 ரன்னில் அவுட்டானார்.
இறுதியில், அயர்லாந்து 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் எடுத்தது. டாக்ரெல் 58 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.
இதன்மூலம் ஆப்கானிஸ்தான் அணி 22 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டி20 தொடரில் அயர்லாந்து 2-1 என முன்னிலை பெற்றுள்ளது.
- முதலில் ஆடிய ஆப்கானிஸ்தான் 122 ரன்கள் எடுத்தது.
- அடுத்து ஆடிய அயர்லாந்து 125 ரன்கள் எடுத்து வென்றது.
பெல்பாஸ்ட்:
அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆப்கானிஸ்தான் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது.
முதல் டி20 போட்டியில் அயர்லாந்து வெற்றி பெற்றது.
இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 பெல்பாஸ்டில் நடைபெற்றது. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 122 ரன்கள் எடுத்தது. அயர்லாந்து பந்துவீச்சாளர்கள் துல்லியமாக பந்து வீசி ஆப்கானிஸ்தானை கட்டுப்படுத்தினர். ஆப்கானிஸ்தான் அணியில் அதிகபட்சமாக ஹஷ்மதுல்லா ஷஹிதி 36 ரன்கள் எடுத்தார்.
அயர்லாந்து சார்பில் ஜோஷ்வா லிட்டில், மார்க் அடைர், காம்பெர் மற்றும் டெலானி ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
123 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் அயர்லாந்து அணி களமிறங்கியது. பால்பரின் பொறுப்புடன் ஆடினார். அரை சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 46 ரன்னில் அவுட்டானார். டக்கர் 27 ரன் எடுத்தார்.
இறுதியில், அயர்லாந்து 19 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 125 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. டாக்ரெல் 25 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார். இதன்மூலம் அயர்லாந்து அணி டி20 தொடரில் 2-0 என முன்னிலை பெற்றுள்ளது.
- முதலில் ஆடிய நியூசிலாந்து 360 ரன்கள் குவித்தது.
- தொடர்ந்து ஆடிய அயர்லாந்து 359 ரன் எடுத்து மிரட்டியது.
டப்ளின்:
அயர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்துள்ள நியூசிலாந்து அணி 3 ஒருநாள் போட்டி, 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
முதலில் நடைபெற்ற 2 ஒருநாள் போட்டிகளிலும் நியூசிலாந்து வெற்றி பெற்று ஒருநாள் தொடரைக் கைப்பற்றியது.
இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி டப்ளினில் நடைபெற்றது. டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த நியூசிலாந்து நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 360 ரன்கள் குவித்தது. தொடக்க ஆட்டக்காரர் குப்தில் அதிரடியாக ஆடி சதமடித்தார். அவர் 115 ரன்னில் அவுட்டானார். ஹென்றி நிகோலஸ் 79 ரன்னும், பிலிப்ஸ் 47 ரன்னும் எடுத்தனர்.
இதையடுத்து, 361 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் அயர்லாந்து களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் பால் ஸ்டிரிங் 120 ரன்னும், ஹாரி டெக்டர் 108 ரன்னும் குவித்து அசத்தினர். அடுத்து வந்த வீரர்களும் விடாது போராடினர்.
கடைசி 2 ஓவரில் அயர்லாந்து அணி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால் அயர்லாந்து அணி போராடி 15 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் ஒரு ரன்னில் தோற்றது.
இறுதியில், அயர்லாந்து நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 359 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் நியூசிலாந்து ஒரு ரன்னில் திரில் வெற்றி பெற்றதுடன், ஒருநாள் தொடரை 3-0 என கைப்பற்றியது.
ஆட்டநாயகன் விருது மார்ட்டின் குப்திலுக்கும், தொடர் நாயகன் விருது மைக்கேல் பிரேஸ்வெலுக்கும் வழங்கப்பட்டது.
எளிதில் வீழ்ந்து விடும் என நினைத்த நியூசிலாந்து அணிக்கு அயர்லாந்து வீரர்கள் தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி திணறடித்தனர்.






