search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    பும்ரா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி அயர்லாந்து சென்றது
    X

    பும்ரா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி அயர்லாந்து சென்றது

    • இந்திய அணி அயர்லாந்து தொடரில் பங்கேற்கிறது.
    • வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா கேப்டன் பொறுப்பேற்றுள்ளார்.

    புதுடெல்லி:

    இந்திய கிரிக்கெட் அணி அயர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது.

    கேப்டன் ஹர்திக் பாண்ட்யா, சுப்மன் கில், சூர்யகுமார் யாதவ், குல்தீப் யாதவ், சஹல் உள்ளிட்ட முன்னணி வீரர்களுக்கு இந்திய அணியில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

    ஜஸ்பிரித் பும்ரா, ருதுராஜ் கெய்க்வாட், ஜெய்ஸ்வால், திலக் வர்மா, ரிங்கு சிங், வாஷிங்டன் சுந்தர், ஷிவம் துபே, ஷபாஸ் அகமது, சஞ்சு சாம்சன், ஜிதேஷ் ஷர்மா, ரவி பிஷ்னோய், பிரசித் கிருஷ்ணா, அர்ஷ்தீப்சிங், முகேஷ் குமார், ஆவேஷ்கான் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.

    இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணி நேற்று விமானம் மூலம் அயர்லாந்து புறப்பட்டுச் சென்றது.

    இந்திய அணி கேப்டனாக வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா நியமிக்கப்பட்டுள்ளார். சி.எஸ்.கே .வீரர் ருதுராஜ் கெய்வாட் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

    இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி டப்ளினில் நாளை மறுதினம் இரவு 7.30 மணிக்கு நடக்கிறது. 2-வது டி20 போட்டி ஆகஸ்ட் 20-ம் தேதியும், 3-வது டி20 போட்டி 23-ம் தேதியும் நடைபெறுகிறது.

    Next Story
    ×