search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    550 ஆண்டுகளுக்கு முன்பு பெரு நாட்டில் 140 குழந்தைகள் நரபலி
    X

    550 ஆண்டுகளுக்கு முன்பு பெரு நாட்டில் 140 குழந்தைகள் நரபலி

    பெரு நாட்டில் 550 ஆண்டுகளுக்கு 140 குழந்தைகள் நரபலி கொடுக்கப்பட்டதையும், அவர்களது உடல்கள் புதைக்கப்பட்டு இருந்ததையும் தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து உள்ளனர்.
    லிமா:

    தென் அமெரிக்க நாடான பெரு நாட்டில், தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் 140 குழந்தைகள் நரபலி கொடுக்கப்பட்டதையும், அவர்களது உடல்கள் புதைக்கப்பட்டு இருந்ததையும் கண்டுபிடித்து உள்ளனர்.

    பெரு நாட்டின் வட பகுதியில் அமைந்து உள்ள கடலோரப் பகுதியில் இந்த குழந்தைகளின் எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டு உள்ளன.



    நரபலி கொடுக்கப்பட்ட குழந்தைகள், 5-14 வயதுக்கு இடைப்பட்டவர்கள். இவர்கள் 550 ஆண்டுகளுக்கு முன்பு நரபலி கொடுக்கப்பட்டு இருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது.

    முற்கால சிமு பேரரசு காலத்தில் இந்த சம்பவம் நடந்து இருக்க வேண்டும் என்றும் தகவல்கள் கூறுகின்றன. ஒரே நேரத்தில் இத்தனை பேர் நரபலி கொடுக்கப்பட்டு இருப்பது வரலாற்றில் இதுவே முதல் முறையாக இருக்கும் என கூறப்படுகிறது. 
    Next Story
    ×