என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஷேக் ஹசினாவை கொல்ல முயற்சி: 11 பேருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை
Byமாலை மலர்29 Oct 2017 1:06 PM GMT (Updated: 29 Oct 2017 1:07 PM GMT)
வங்காளதேசம் நாட்டின் பிரதமர் ஷேக் ஹசினாவை 23 ஆண்டுகளுக்கு முன்னர் கொல்ல முயன்ற சதி வழக்கில் 11 குற்றவாளிகளுக்கு தலா 20 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
டாக்கா:
பாகிஸ்தானில் இருந்து தனியாக பிரிந்த வங்காளதேசம் நாட்டின் தந்தை என்றழைக்கப்பட்ட ஷேக் முஜிபுர் ரஹ்மான் கடந்த 1975-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் படுகொலை செய்யப்பட்டார். அவரது மறைவுக்கு பின்னர் அவாமி லீக் கட்சியின் தலைமையை ஷேக் ஹசினா ஏற்றார்.
ஷேக் ஹசினாவை கொல்ல 19 முறை தீட்டப்பட்ட சதி திட்டங்கள் சரியான நேரத்தில் முறியடிக்கப்பட்டன. அவ்வகையில், கடந்த 11-8-1989 அன்று ஷேக் ஹசினாவின் பூர்விக வீட்டுக்கு வந்த சில மர்ம நபர்கள் அவர் வீட்டில் இருந்த வேளையில் காவலர்களையும் மீறி வீட்டின்மீது வெடி குண்டுகளை வீசிவிட்டு தப்பிச் சென்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக கடந்த 1997-ம் ஆண்டு இரு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. 2009-ம் ஆண்டில் வங்காளதேசம் விடுதலை கட்சியை சேர்ந்த 16 பேர்மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு டாக்காவில் உள்ள நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.
இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 11 குற்றவாளிகளுக்கு 20 ஆண்டு சிறை தண்டனை மற்றும் தலா 20 ஆயிரம் டாக்கா அபராதம் விதித்து டாக்கா நகர நான்காவது கூடுதல் நீதிமன்ற நீதிபதி முஹம்மது ஸாஹிதுல் கபிர் இன்று தீர்ப்பளித்தார்.
முன்னதாக, ஷேக் ஹசினாவை கொல்ல முயன்ற மற்றொரு வழக்கில் கடந்த ஆகஸ்ட் மாதம் 10 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது, நினைவிருக்கலாம்.
பாகிஸ்தானில் இருந்து தனியாக பிரிந்த வங்காளதேசம் நாட்டின் தந்தை என்றழைக்கப்பட்ட ஷேக் முஜிபுர் ரஹ்மான் கடந்த 1975-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் படுகொலை செய்யப்பட்டார். அவரது மறைவுக்கு பின்னர் அவாமி லீக் கட்சியின் தலைமையை ஷேக் ஹசினா ஏற்றார்.
ஷேக் ஹசினாவை கொல்ல 19 முறை தீட்டப்பட்ட சதி திட்டங்கள் சரியான நேரத்தில் முறியடிக்கப்பட்டன. அவ்வகையில், கடந்த 11-8-1989 அன்று ஷேக் ஹசினாவின் பூர்விக வீட்டுக்கு வந்த சில மர்ம நபர்கள் அவர் வீட்டில் இருந்த வேளையில் காவலர்களையும் மீறி வீட்டின்மீது வெடி குண்டுகளை வீசிவிட்டு தப்பிச் சென்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக கடந்த 1997-ம் ஆண்டு இரு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. 2009-ம் ஆண்டில் வங்காளதேசம் விடுதலை கட்சியை சேர்ந்த 16 பேர்மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு டாக்காவில் உள்ள நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.
இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 11 குற்றவாளிகளுக்கு 20 ஆண்டு சிறை தண்டனை மற்றும் தலா 20 ஆயிரம் டாக்கா அபராதம் விதித்து டாக்கா நகர நான்காவது கூடுதல் நீதிமன்ற நீதிபதி முஹம்மது ஸாஹிதுல் கபிர் இன்று தீர்ப்பளித்தார்.
முன்னதாக, ஷேக் ஹசினாவை கொல்ல முயன்ற மற்றொரு வழக்கில் கடந்த ஆகஸ்ட் மாதம் 10 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது, நினைவிருக்கலாம்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X