search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "pm hasina"

    • எதிர்க்கட்சியினர் உள்பட 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • இதனால் தலைநகர் டாக்காவில் பதற்ற நிலை உருவாகியுள்ளது.

    டாக்கா:

    வங்காளதேசத்தின் பிரதமராக பதவி வகித்து வருபவர் ஷேக் ஹசீனா.

    இந்நிலையில், கோலாபாக் மைதானத்தில் எதிர்க்கட்சியான வங்காளதேசம் தேசிய கட்சியினர் திரண்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். ஷேக் ஹசீனா வாக்குகளை திருடிவிட்டதாக குற்றம் சாட்டி கோஷமிட்டனர்.

    மேலும் அவர்கள் பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலக வேண்டும், விரைவில் தேர்தல் நடத்த வேண்டும் என கோஷங்கள் எழுப்பினர்.

    எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 7 எம்பிக்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்யப்போவதாக அறிவித்தனர்.

    பாராளுமன்றத்தை கலைத்து, நடுநிலையான காபந்து அரசாங்கம் அமைக்க சுதந்திரமான, நம்பகத்தன்மையுடன் தேர்தலை நடத்த வேண்டும் என்பதே எங்களது முக்கிய கோரிக்கை என எதிர்க்கட்சியின் தெரிவித்தனர்.

    எதிர்க்கட்சியினர் உள்பட 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் தலைநகர் டாக்காவில் பதற்ற நிலை உருவாகியுள்ளது.

    ரோகிங்கியா அகதிகளின் துயரங்களை உலகின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் யுனிசெப் தூதரான பிரியங்கா சோப்ரா இன்று வங்கதேசத்தில் உள்ள அகதிகளை சந்தித்தார். #PriyankaChopra #PriyankaMetRohingyas
    டாக்கா:

    நடிகையும் யுனிசெப் நல்லெண்ண தூதருமான பிரியங்கா சோப்ரா, வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். மியான்மரில் இருந்து வந்துள்ள ரோகிங்கியா அகதிகள் தங்கியிருக்கும் காக்ஸ் பஜார் முகாம்களுக்கு பிரியங்கா சோப்ரா இன்று சென்று அகதிகளை சந்தித்து கலந்துரையாடினார். பின்னர் வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனாவை சந்தித்து பேசினார். அப்போது மிகப்பெரிய மனிதநேய உதவிகளை செய்து வரும் வங்காளதேச அரசுக்கு பாராட்டு தெரிவித்தார்.

    இந்த சந்திப்பின்போது ‘வங்காளதேசத்திடம் இருந்து உலக நாடுகள் கற்றுக்கொள்ள வேண்டும்’ என பிரியங்கா சோப்ரா கூறியதாக பிரதமர் அலுவலக செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். 

    குறிப்பாக, கட்டாயத்தின்பேரில் இடம்பெயர்ந்து வந்துள்ள 10 லட்சத்துக்கும் அதிகமான மியான்மர் சிறுபான்மை இன மக்களின் சுமையை ஏற்றுள்ள ஹசீனாவை பிரியங்கா சோப்ரா வெகுவாகப் பாராட்டியதாக பிரதமரின் ஊடகப்பிரிவு கூடுதல் செயலாளர் தெரிவித்தார்.

    ரோகிங்கியா முகாம்களுக்கு பிரியங்கா சோப்ரா சென்று அகதிகளுடன் கலந்துரையாடுவது இது இரண்டாவது முறையாகும். #PriyankaChopra #PriyankaMetRohingyas
    ×