என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    வயநாடு இடைத்தேர்தல்- பிரியங்கா காந்திக்கு நேரில் வாழ்த்து தெரிவித்த விஜய் வசந்த்

    • காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை சார்பில் வயநாட்டில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்திக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
    • பிரியங்கா காந்தி, ராகுல் காந்தி இருவரும் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் ஒரே மேடையில் கலந்துகொண்டு பேசினர்.

    வயநாடு எம்.பி. பதவியை ராகுல்காந்தி ராஜினாமா செய்ததால், காலியான அந்த தொகுதிக்கு வருகிற 13-ந் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இதில் காங்கிரஸ் வேட்பாளராக பிரியங்கா போட்டியிடுகிறார்.

    தேர்தல் பிரசாரம் செய்வதற்காக பிரியங்கா நேற்று வயநாடு வந்தார். அவருடன் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி வந்திருந்தார்.

    கன்னியாகுமரி தொகுதி எம்.பி. விஜய் வசந்த், காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை சார்பில் வயநாட்டில் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்திக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து வயநாட்டில் பிரியங்கா காந்தி, ராகுல் காந்தி இருவரும் மானந்தவாடி காந்தி பார்க் பகுதியில் நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் ஒரே மேடையில் கலந்துகொண்டு பேசினர்.

    இந்நிலையில் அகில இந்திய பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியை கன்னியாகுமரி தொகுதி எம்.பி. விஜய் வசந்த் இன்று சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×