என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாததால் தி.மு.க. மீது மக்கள் கோபத்தில் உள்ளனர்- விஜயதாரணி
- ஜி.எஸ்.டி. வரி குறைப்பை யாரும் தவறாக பேசக் கூடாது.
- நான் பா.ஜ.க.வில் மகிழ்ச்சியாக இருக்கிறேன்.
நெல்லை:
நெல்லை மாவட்ட பா.ஜ.க. அலுவலகத்தில் விஜயதாரணி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
இந்தியாவில் மருத்துவக் கல்லூரிகள் அதிகமாக அனைத்து மாநிலங்களுக்கும் அறிவிக்கப்பட்டு கட்டப்பட்டது, எய்ம்ஸ் கட்டப்பட்டது போன்ற பல்வேறு விஷயங்களில் நாட்டின் உள்கட்டமைப்புகளை பன்மடங்காக மத்திய அரசு உயர்த்தி உள்ளது.
அந்த வகையில் ஜி.எஸ்.டி. வரி என்பது மாநிலங்களுக்கு பிரித்து வழங்கப்பட்டாலும் தேசிய வளர்ச்சிக்கு உதவியாக இருக்கிறது. அதே நேரத்தில் மக்களுக்கு அதன் பயன் சென்றடைய வேண்டும் என்ற நோக்கில் ஒரு காலகட்டத்திற்கு பின்பு அதற்கான பார்வைகள் இன்று குறைத்துள்ளனர். இதனால் பெரிய பலன் மக்களை சென்றடைந்து இருக்கிறது.
வரி குறைப்பு மூலம் பெரும்பாலான உணவுப் பொருட்கள் பூஜ்ஜியம் ஜி.எஸ்.டி. வரி என்று ஆக்கப்பட்டிருக்கிறது. அதாவது உணவு பொருட்களுக்கு வரி இல்லாத சூழல் உருவாகி இருக்கிறது.
வருகிற 22-ந் தேதி முதல் அமலுக்கு வரும் ஜி.எஸ்.டி. வரி குறைப்பை யாரும் தவறாக பேசக் கூடாது. நடுத்தர மற்றும் சாமானிய மக்கள் பயன்படுத்தும் பொருட்களுக்கு வரியே இல்லாத பூஜ்ஜியம் என்ற நிலையை மோடி தலைமையிலான மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அறிவித்தது வரவேற்கத்தக்கது.
தி.மு.க. தலைவர் எதிரில் இருக்கும் அணி பிரிந்து இருக்கிறதா? சேர்ந்து இருக்கிறதா என்பதை அடிப்படையாக கொண்டு வெற்றி பெறலாம் என்று எண்ணி கொண்டிருக்கிறார். ஆனால் அவர்களது ஆட்சியில் ஏதாவது நல்லது செய்திருக்கிறோமா? என்பதை சொல்லி வெற்றி பெறுவோம் என்று சொல்லி இருந்தால் மகிழ்ச்சி. ஆனால் பெரும்பாலான தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. இதனால் தி.மு.க. மீது மக்கள் கோபத்தில் உள்ளனர்.
எடப்பாடி பழனிசாமி முகத்தை துடைத்து கொண்டு வந்ததை முகத்தை மூடிக் கொண்டு வந்ததாக தவறான செய்தியை பரப்பி உள்ளனர்.
அமித்ஷாவை சந்தித்து சால்வையை அணிவிக்கும் புகைப்படம் வெளிவந்துள்ளது. பிறகு ஏன் எடப்பாடி முகத்தை மூட வேண்டும்.
திமு.க. கூட்டணியில் தினமும் பல்வேறு சர்ச்சைகள் உள்ளது. ஆனால் அ.தி.மு.க., பா.ஜ.க. கூட்டணி உறுதியாகவும் வலுவாகவும் உள்ளது. மேலும் சில கட்சிகளும் இந்த கூட்டணியில் வந்து சேரும்.
வருகிற டிசம்பர் மாதத்துக்குள் மிக வலிமையான கூட்டணியாக எழக்கூடிய 100 சதவீத சாத்திய கூறுகள் உள்ளன.
பா.ஜ.க.-அ.தி.மு.க. கூட்டணி தேர்தலில் மிகப்பெரிய பலத்தோடு சந்தித்து வெற்றி பெறுவார்கள். அனைவரும் ஒன்று சேர்ந்து தேர்தலை சந்திப்பார்கள். நான் பா.ஜ.க.வில் மகிழ்ச்சியாக இருக்கிறேன்.
அ.தி.மு.க. பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி இருந்து வருகிறார். அவர்களது கட்சியில் நாங்கள் எதுவும் தலையிட முடியாது என்றார்.






