என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    பால்குளம் அரசு கலைக் கல்லூரிக்கு 11 கூடுதல் வகுப்பறைகள்- பணிகளைத் தொடங்கி வைத்த விஜய் வசந்த் எம்பி
    X

    பால்குளம் அரசு கலைக் கல்லூரிக்கு 11 கூடுதல் வகுப்பறைகள்- பணிகளைத் தொடங்கி வைத்த விஜய் வசந்த் எம்பி

    • தமிழக முதலமைச்சர் சுமார் 6 கோடி ரூபாய் மதிப்பிலான 11 வகுப்பறைகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
    • விஜய் வசந்த் விழாவை குத்து விளக்கேற்றி வைத்து அடிக்கல் நாட்டினார்.

    தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் சென்னையில் இருந்து காணொளி காட்சி வாயிலாக கன்னியாகுமரி மாவட்டம் பால்குளம் அரசு கலைக் கல்லூரிக்கு சுமார் 6 கோடி ரூபாய் மதிப்பிலான 11 வகுப்பறைகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

    இதை தொடர்ந்து பால்குளம் அரசு கலைக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் விழாவை குத்து விளக்கேற்றி வைத்து அடிக்கல் நாட்டினார்.

    இந்நிகழ்ச்சியில் அரசு வழக்கறிஞர் மதியழகன், அஞ்சுகிராமம் பேரூராட்சி தலைவி ஜானகி இளங்கோ, மாநில காங்கிரஸ் செயலாளர் சீனிவாசன், காங்கிரஸ் வட்டாரத் தலைவர் சாம் சுரேஷ், கிழக்கு மாவட்ட வர்த்தக காங்கிரஸ் செயலாளர் கிங்ஸ்லி, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் ஆரோக்யராஜன், கல்லூரி முதல்வர் சரோஜா உட்பட பல அரசு அதிகாரிகள், ஆசிரியை, ஆசிரியர்கள், கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×