என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

அரசியலில் வந்தவுடனேயே விஜய்க்கு முதலமைச்சர் கனவு கூடாது - வேல்முருகன்
- காமராஜர் போன்ற பெருந்தலைவர்களுடன் நடிகர் விஜய்யை ஒப்பிடுவது ஏற்புடையதல்ல.
- மக்களுக்காக களத்திற்கு வராதவர் விஜய்.
கடலூர்:
தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
* தமிழக உரிமைகள், தமிழ்த்தேசிய அரசியலை தமிழக வாழ்வுரிமை கட்சி தொடர்ந்து முன்னெடுக்கும்.
* த.வெ.க. தலைவர் விஜய் நிகழ்ச்சி குறித்து தான் சொல்லாததை திரித்து கூறுகிறார்கள். மாணவர்களுடன் விஜய் கலந்து கொண்ட நிகழ்ச்சியை நான் கொச்சைப்படுத்தி பேசியதாக வதந்தி பரப்பப்படுகிறது.
* பெற்றோர் முன்னிலையில் ஒரு நடிகரை மாணவிகள் கட்டிப்பிடிப்பது தமிழ் கலாச்சாரம் அல்ல.
* கலையை கலையாக பார்க்காமல், நடிகரை தூக்கி வைத்து கொண்டாடுவது வருந்தத்தக்கது.
* விஜயின் அரசியல் வருகைக்கு ஒரு போதும் எதிர்ப்பு தெரிவித்ததில்லை வாழ்த்து கூறினேன்.
* சினிமாக்காரர்களிடம் பிள்ளைகள் அதிக உரிமை எடுக்க பெற்றோர் அனுமதிக்க கூடாது என்று கூறினேன்.
* தமிழராக விஜய் அரசியலுக்கு வருவதில் தவறில்லை, ஆனால் வந்தவுடனேயே முதலமைச்சர் கனவுடன் வரக்கூடாது.
* தவெக தொண்டர்கள் என்னை மிரட்டுவதெல்லாம் வேண்டாம், அனைத்தையும் பார்த்துவிட்டு வந்தவன் நான்.
* காமராஜர் போன்ற பெருந்தலைவர்களுடன் நடிகர் விஜய்யை ஒப்பிடுவது ஏற்புடையதல்ல.
* காமராஜரோடு விஜயை ஒப்பிடுவதை ஏற்க முடியாது, மக்களுக்காக களத்திற்கு வராதவர் விஜய் என்றார்.






