என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    அ.தி.மு.க.வின் நிரந்தர பொதுச்செயலாளராக இ.பி.எஸ்.தான் தொடர வேண்டும்- உதயநிதி கோரிக்கை
    X

    அ.தி.மு.க.வின் நிரந்தர பொதுச்செயலாளராக இ.பி.எஸ்.தான் தொடர வேண்டும்- உதயநிதி கோரிக்கை

    • அ.தி.மு.க. ஆம்புலன்சில் செல்லும் நிலையில் உள்ளதாகவே பேசினேன்.
    • இ.பி.எஸ்.-ஆல் பா.ஜ.க.விடமிருந்து அ.தி.மு.க.வை காப்பாற்ற முடியவில்லை.

    சட்டசபை தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சுற்றுப்பயணத்தை தொடங்கி உள்ளார். தேர்தல் பயணத்தை காஞ்சிபுரத்தில் நேற்று தொடங்கிய உதயநிதி, செங்கல்பட்டு சட்டசபை தொகுதி நிர்வாகிகளுடன் இன்று ஆலோசனை நடத்தினார்.

    இதையடுத்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது:

    * இ.பி.எஸ். ஆம்புலன்சில் செல்வார் என பேசவில்லை. மனிதாபிமானம் உள்ள ஒரு மனிதர் அப்படி பேசுவானா?

    * அ.தி.மு.க. ஆம்புலன்சில் செல்லும் நிலையில் உள்ளதாகவே பேசினேன்.

    * அ.தி.மு.க. கட்சி ஐ.சி.யூ.வில் அனுமதிக்கப்படும்போது காப்பாற்றும் மருத்துவராக முதல்வர் வருவார் என்று கூறினேன்.

    * எந்தக் கட்சித் தலைவர் கூட்டம் போட்டாலும் அவசரத் தேவைக்காக ஆம்புலன்ஸ் வாகனம் வரத்தான் செய்யும்.

    * இ.பி.எஸ்.-ஆல் பா.ஜ.க.விடமிருந்து அ.தி.மு.க.வை காப்பாற்ற முடியவில்லை.

    * அ.தி.மு.க.வின் நிரந்தர பொதுச்செயலாளராக இ.பி.எஸ்.தான் தொடர வேண்டும். அதுதான் தமிழ்நாட்டு மக்களுக்கு நீங்கள் செய்யும் ஒரே நல்ல காரியம். அப்போதுதான் எங்கள் வேலையும் சுலபமாக இருக்கும்.

    * அ.தி.மு.க.வினர் இதை ஒத்துக்கொள்வார்களா என தெரியாது. ஆனால் நான் முன்மொழிகிறேன். நீங்கள்தான் நிரந்தர பொதுச்செயலாளர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×