என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

9 பேர் கொண்ட தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவை அமைத்தது இந்திய கம்யூனிஸ்ட்!
- இந்திய கம்யூனிஸ்ட் கட்சி திமுக கூட்டணியில் உள்ளது.
- தேசிய செயற்குழு தலைவர் மூர்த்தி தலைமையில் குழு அமைப்பு
தமிழ்நாட்டில் 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கிவரும் நிலையில், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. தேசிய செயற்குழு உறுப்பினர் மூர்த்தி தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அக்கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தோழர்கள் டி.எம்.மூர்த்தி - ஒருங்கிணைப்பாளர், க.சந்தானம், வஹிதா நிஜாம், மருத்துவர் ஜி.ஆர்.ரவீந்திர நாத், எம்.செல்வராஜ், த.லெனின், சு.மோகன் குமார், பி.எஸ்.மாசிலாமணி, அ.பாஸ்கர் ஆகியோர் கொண்ட தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்கு ஏதுவாக அனைத்து துறை அமைப்புகளும், சமூக ஆர்வலர்கள், அறிவு ஜீவிகள் உள்ளிட்ட பொது மக்களும் தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் கீழ் கண்ட முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம்.
மேலும் விவரங்களுக்கு: இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு மாநிலக்குழு "பாலன் இல்லம்" எண் 43/19, செவாலியர் சிவாஜி கணேசன் சாலை, தியாகராயா நகர், சென்னை - 600 017, அலைபேசி எண்: 98408 54707, மின்னஞ்சல்: cpi.tamilnadu@gmail..com. " எனக் குறிப்பிட்டுள்ளார்.






