search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    டாஸ்மாக் முறைகேடு வழக்கு வரும் காலங்களில் பூதாகரமாக மாறும்- அண்ணாமலை
    X

    டாஸ்மாக் முறைகேடு வழக்கு வரும் காலங்களில் பூதாகரமாக மாறும்- அண்ணாமலை

    • செந்தில் பாலாஜி சிறை சென்று வந்த பிறகும் கூட இந்த முறைகேடு நடந்துள்ளது.
    • மோசடியை மறைப்பதற்காகவே தமிழக அரசு கண்ணாமூச்சி ஆடிக் கொண்டிருக்கிறது.

    சென்னையில், டாஸ்மாக் தலைமை அலுவலகம், மது ஆலை நிறுவனங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.

    இதன்மூலம், டாஸ்மாக் கொள்முதல் முறைகேடு வழக்கில் ரூ.1000 கோடி கணக்கில் காட்டப்படாத பணம் புழங்குவதாக அமலாக்கததுறை கண்டுபிடித்துள்ளது.

    இதுதொடர்பாக கூறிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை," டாஸ்மாக்கில் மிகப்பெரிய மோசடி நடந்திருக்கிறது" என்று தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது:-

    டாஸ்மாக்கில் மிகப்பெரிய மோசடி நடந்திருக்கிறது. சத்தீஸ்கர், டெல்லியில் நடைபெற்றதைவிட தமிழகத்தில் மிகப்பெரிய மோசடியாக இருக்கும்.

    டாஸ்மாக் முறைகேடு வழக்கு வரும் காலத்தில் பூதாகரமாக மாறும். செந்தில் பாலாஜி சிறை சென்று வந்த பிறகும் கூட இந்த முறைகேடு நடந்துள்ளது.

    மோசடியை மறைப்பதற்காகவே தமிழக அரசு கண்ணாமூச்சி ஆடிக் கொண்டிருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×