என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தூத்துக்குடி-பெங்களூரு இடையே சிறப்பு ரெயில்
    X

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தூத்துக்குடி-பெங்களூரு இடையே சிறப்பு ரெயில்

    • பெங்களூருவில் இருந்து 16-ந்தேதி மாலை புறப்பட்டு கொல்லம் செல்லும் சிறப்பு ரெயில் சேலம், ஈரோடு, திருப்பூர், போத்தனூர் வழியாக மறுநாள் காலை கொல்லம் சென்றடையும்.
    • கொல்லத்தில் இருந்து வருகிற 22-ந்தேதி மாலை புறப்பட்டு பெங்களூரு செல்லும் சிறப்பு ரெயில் மறுநாள் காலை பெங்களூரு சென்றடையும்.

    சென்னை:

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பயணிகளின் வசதிக்காகவும், கூட்ட நெரிசலை தடுக்கவும் சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளது.

    இதுகுறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    * பெங்களூருவில் இருந்து வருகிற 16-ந்தேதி மாலை 3 மணிக்கு புறப்பட்டு கொல்லம் செல்லும் சிறப்பு ரெயில் (வண்டி எண்.06561), சேலம், ஈரோடு, திருப்பூர், போத்தனூர் வழியாக மறுநாள் காலை 6.20 மணிக்கு கொல்லம் சென்றடையும். மறுமார்க்கமாக, கொல்லத்தில் இருந்து வருகிற 17-ந்தேதி காலை 10.45 மணிக்கு புறப்பட்டு பெங்களூரு செல்லும் சிறப்பு ரெயில் (06562), மேற்கண்ட வழித்தடம் வழியாக மறுநாள் அதிகாலை 3.30 மணிக்கு பெங்களூரு சென்றடையும்.

    * பெங்களூருவில் இருந்து வருகிற 21-ந்தேதி இரவு 11 மணிக்கு புறப்பட்டு கொல்லம் செல்லும் சிறப்பு ரெயில் (06567), சேலம், ஈரோடு, திருப்பூர், போத்தனூர் வழியாக மறுநாள் மதியம் 12.55 மணிக்கு கொல்லம் சென்றடையும். மறுமார்க்கமாக, கொல்லத்தில் இருந்து வருகிற 22-ந்தேதி மாலை 5 மணிக்கு புறப்பட்டு பெங்களூரு செல்லும் சிறப்பு ரெயில் (06568), மேற்கண்ட வழித்தடம் வழியாக மறுநாள் காலை 9.45 மணிக்கு பெங்களூரு சென்றடையும்.

    * பெங்களூருவில் இருந்து வருகிற 17, 21 ஆகிய தேதிகளில் இரவு 10 மணிக்கு புறப்பட்டு தூத்துக்குடி வரும் சிறப்பு ரெயில் (06297), சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், கொடைக்கானல் சாலை, சோழவந்தான், மதுரை, திருப்பரங்குன்றம், திருமங்கலம், விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, தூத்துக்குடி மேலூர் வழியாக மறுநாள் காலை 11 மணிக்கு தூத்துக்குடி வந்தடையும். மறுமார்க்கமாக தூத்துக்குடியில் இருந்து வருகிற 18, 22 ஆகிய தேதிகளில் மதியம் 2 மணிக்கு புறப்பட்டு பெங்களூரு செல்லும் சிறப்பு ரெயில் (06298), மேற்கண்ட வழித்தடம் வழியாக மறுநாள் அதிகாலை 4.15 மணிக்கு பெங்களூரு சென்றடையும். இந்த சிறப்பு ரெயில்களுக்கான முன்பதிவு இன்று (திங்கட்கிழமை) காலை 8 மணிக்கு தொடங்க உள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×