என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

கொடநாடு கொலை வழக்கில் எடப்பாடிதான் A1 - செங்கோட்டையன் பரபரப்பு பேச்சு
- ஆட்சியை காப்பாற்றிய பா.ஜ.க. கூட்டணியில் இருந்து வெளியேறியவர் இ.பி.எஸ்.
- இ.பி.எஸ். எப்படி முதலமைச்சர் பதவியை பெற்றார் என்பது அனைவருக்கும் தெரியும்.
அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட நிலையில் கோபிசெட்டிபாளையம் அலுவலகத்தில் இருந்து செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* அ.தி.மு.க.வில் தொடர்ந்து இயங்க வேண்டும் என்பது தான் எனது விருப்பம்.
* என்னை தி.மு.க.வின் பி டீம் என்றனர். நான் தி.மு.க.வின் பி டீம் இல்லை. தி.மு.க.வின் ஏ டீமாக எடப்பாடி பழனிசாமி செயல்படுகிறார்.
* இ.பி.எஸ். தற்போது வரை அ.தி.மு.க.வின் தற்காலிக பொதுச்செயலாளர் தான்.
* நான் தி.மு.க.வின் பி டீம் இல்லை. இ.பி.எஸ். தான் ஏ1 ஆக இருக்கிறார்.
* ஆட்சியை காப்பாற்றிய பா.ஜ.க.விற்கு இ.பி.எஸ். துரோகம் செய்தவர்.
* ஆட்சியை காப்பாற்றிய பா.ஜ.க. கூட்டணியில் இருந்து வெளியேறியவர் இ.பி.எஸ்.
* பொதுச்செயலாளராக இருந்த இ.பி.எஸ். தான் கொடநாடு கொலை, கொள்ளை பற்றி பேச வேண்டும்.
* இ.பி.எஸ். எப்படி முதலமைச்சர் பதவியை பெற்றார் என்பது அனைவருக்கும் தெரியும்.
இவ்வாறு அவர் கூறினார்.






