என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    அ.தி.மு.க.வில் இருந்து விலக முடிவா? 5-ந்தேதி வரை பொறுத்திருங்கள்- செங்கோட்டையன்
    X

    அ.தி.மு.க.வில் இருந்து விலக முடிவா? 5-ந்தேதி வரை பொறுத்திருங்கள்- செங்கோட்டையன்

    • ஆதரவாளர்கள், முக்கிய நிர்வாகிகள் திரண்டு வந்தனர்.
    • மனம் திறந்து பேசப்போகிறேன்.

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அதிருப்தியில் உள்ளார். இதனால் அவர் அ.தி.மு.க.வில் இருந்து விலக முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுதொடர்பாக அவர் வருகிற 5-ந்தேதி முக்கிய அறிவிப்பை வெளியிட உள்ளதாகவும் கூறப்படுகிறது.

    இந்த நிலையில், இன்று கோபிசெட்டிபாளையத்தில் உள்ள செங்கோட்டையன் தோட்டத்து வீட்டின் முன்பு காலை முதலே அவரது ஆதரவாளர்கள், முக்கிய நிர்வாகிகள் திரண்டு வந்தனர். அவர்களுடன் செங்கோட்டையன் ஆலோசனை நடத்தினார்.

    இதன் பின் செய்தியாளர்களை சந்தித்த செங்கோட்டையன் கூறுகையில், வருகிற 5-ந்தேதி கோடிசெட்டிப்பாளையத்தில் மனம் திறந்து பேசப்போகிறேன் என முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

    மேலும், என்ன கருத்து சொல்லப்போகிறேன் என்று அப்போது தெரிந்து கொள்ளலாம், அதுவரை பொறுத்திருங்கள் என்று கூறியுள்ளார்.

    Next Story
    ×