என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    நா.த.க. வரைவு அறிக்கையை அண்ணாமலை ஒழுங்காக படிக்க வேண்டும்- சீமான்
    X

    நா.த.க. வரைவு அறிக்கையை அண்ணாமலை ஒழுங்காக படிக்க வேண்டும்- சீமான்

    • கொள்கை மொழி தமிழ் என தெளிவாகவே குறிப்பிட்டுள்ளோம்.
    • இந்தி எனக்கு எதற்காக தேவை என்பதை அண்ணாமலை தெளிவாக கூறுவாரா?

    மும்மொழி கொள்கை தொடர்பாக நா.த.க. வரைவு அறிக்கையை சுட்டிக்காட்டிய பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலைக்கு கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பதில் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * அண்ணாமலை நாம் தமிழர் வரைவு அறிக்கையை ஒழுங்காக படிக்க வேண்டும்.

    * கொள்கை மொழி தமிழ் என தெளிவாகவே குறிப்பிட்டுள்ளோம். பயன்பாட்டு மொழி ஆங்கிலம் தெளிவாக எழுதி இருக்கிறேன்.

    * உலகின் எல்லா மொழிகளும் விருப்ப மொழிகள். இந்தி உட்பட விரும்பினால் கற்போம் என்று போட்டுள்ளேன்.

    * இந்தி எனக்கு எதற்காக தேவை என்பதை அண்ணாமலை தெளிவாக கூறுவாரா?

    * தெற்காசியா முழுவதும் பரவி வாழ்ந்தோர் தமிழ் பேசும் நாகர்கள் என்றார் அம்பேத்கர்.

    * தேவை என்றால் இந்தி படிக்கிறோம். உணவு, மொழி, உடை எல்லாம் அங்கங்கு வாழுகின்ற கால சூழல் தான் தீர்மானிக்கும் என்று கூறினார்.

    Next Story
    ×