என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

கலைஞர் பாணியில் என் மூச்சு இருக்கும் வரை நான் தான் பா.ம.க.விற்கு தலைவர்- ராமதாஸ்
- எல்லாவற்றிற்கும் ஒரு முடிவு உண்டு, அந்த முடிவு இன்னும் வரவில்லை.
- பா.ம.க.வில் பொறுப்பாளர்களை நியமிக்கும் அதிகாரம் எனக்கு மட்டுமே உள்ளது.
தைலாபுரம்:
பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
* செய்தியாளர்கள் எந்த கேள்வி எழுப்பினாலும் பதிலளிக்கத் தயார்.
* அன்புமணி மன்னிப்பு கேட்பது இங்கு பிரச்சனை இல்லை, நான் தொடங்கிய கட்சியில் நான் கூறியது படிதான் நடக்க வேண்டும்.
* என்னோடு தொடக்கத்தில் இருந்து பயணித்தவர்களுக்கு பதவி கொடுத்திருக்கிறேன்.
* எல்லாவற்றிற்கும் ஒரு முடிவு உண்டு, அந்த முடிவு இன்னும் வரவில்லை.
* கலைஞர் பாணியில் என் மூச்சு இருக்கும் வரை நான் தான் பா.ம.க.விற்கு தலைவர், அன்புமணி செயல்தலைவர் தான்.
* கலைஞர் தி.மு.க. தலைவராக இருந்தபோது மு.க.ஸ்டாலின் எந்த முணுமுணுப்பையும் செய்யவில்லை.
* எந்த போஸ்டர்களையும் கிழிப்பது நாகரிகமான செயல் அல்ல.
* பா.ம.க.வில் பொறுப்பாளர்களை நியமிக்கும் அதிகாரம் எனக்கு மட்டுமே உள்ளது.
* நான் நியமித்தவர்கள் அனைவரும் நிரந்தர பொறுப்பாளர்கள்.
* 60-வது மணிவிழாவிற்கு அன்புமணி வராதது வருத்தமான மனநிலையை ஏற்படுத்தியது.
* பெரியாரையும் அண்ணாவையும் விமர்சித்திருப்பது வருத்தத்துக்குரியது
* தேர்தல் நெருங்கும் சமயத்தில் பா.ம.க. பொதுக்குழு கூட்டப்படும்
* கூட்டணி குறித்து பொதுக்குழுவில் தான் முடிவெடுக்கப்படும் என்றார்.






