என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

தந்தையை உளவு பார்த்த ஒரே மகன் அன்புமணி- ராமதாஸ் பரபரப்பு குற்றச்சாட்டு
- அன்புமணி அறிவித்துள்ள பொதுக்குழு கட்சி விதிகளுக்கு எதிரானது.
- அன்புமணி கூட்டியுள்ள பொதுக்குழு செல்லாது.
சென்னை:
பா.ம.க. பொதுக்குழுவுக்கு அதன் நிறுவனர் ராமதாசுக்கு அன்புமணி அழைப்பு விடுத்து இருந்ததாக தகவல் வெளியாகி இருந்தது. இந்த நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த ராமதாஸ் கூறுகையில்,
அன்புமணி அறிவித்துள்ள பொதுக்குழு கட்சி விதிகளுக்கு எதிரானது. அன்புமணி கூட்டியுள்ள பொதுக்குழு செல்லாது. 15 நாட்களுக்கு முன்னர் பொதுக்குழு உறுப்பினர்களுக்கு அறிவிப்புக் கொடுக்க வேண்டும்.
தந்தையை உளவு பார்த்த ஒரே மகன் அன்புமணி தான். தனது இல்லத்தில் ஒட்டுக்கேட்பு கருவி வைத்தது அன்புமணி தான் என்று குற்றம்சாட்டினார்.
Next Story






