என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    எனது உரிமையை ஒருபோதும் விட்டுக்கொடுக்க முடியாது- ராமதாஸ் திட்டவட்டம்
    X

    எனது உரிமையை ஒருபோதும் விட்டுக்கொடுக்க முடியாது- ராமதாஸ் திட்டவட்டம்

    • அன்புமணியால் பணம் கொடுத்து தான் கூட்டம் கூட்ட முடியும்.
    • தான் உருவாக்கிய கட்சியை அன்புமணி அபகரிக்க முயற்சி.

    கடந்த சில மாதங்களாக பா.ம.க. தலைவர் யார் என்பதில் குழப்பங்கள் நீடித்து வந்த நிலையில், பா.ம.க. தலைவர் அன்புமணி தான் என இந்திய தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்தது.

    இதனை தொடர்ந்து, 'அன்புமணி தலைவர் இல்லை' என ராமதாஸ் அளித்த மனுவை, ஆணையம் நிராகரித்துவிட்டது. தேர்தல் ஆணையம் செய்தது ஜனநாயக படுகொலை. தேர்தல் ஆணையத்தை கண்டித்து டெல்லியில் பா.ம.க. சார்பில் போராட்டம் நடத்த உள்ளதாக பா.ம.க. கௌரவ தலைவர் ஜி.கே.மணி தெரிவித்து இருந்தார்.

    இந்த நிலையில், எனது உரிமையை ஒருபோதும் விட்டுக்கொடுக்க முடியாது என ராமதாஸ் திட்டவட்டமாக கூறியுள்ளார். இதுதொடர்பாக நிர்வாகிகள் மத்தியில் பேசிய ராமதாஸ்,

    * அன்புமணியின் பா.ம.க. தலைவர் பதவிக்காலம் முடிந்துவிட்டது.

    * தேர்தல் ஆணையத்தை பணம் கொடுத்து அன்புமணி விலைக்கு வாங்கிவிட்டார்.

    * எனது உரிமையை ஒருபோதும் விட்டுக்கொடுக்க முடியாது.

    * எனது உரிமையை யாராலும் திருட முடியாது.

    * இனி வெல்லப்போவது ராமதாஸ் தான்.

    * சட்டமன்றத்தில் பா.ம.க. பிரநிதித்துவம் குறைந்ததற்கு காரணம் அன்புமணியின் செயல்பாடுகளால் தான்.

    * அன்புமணியால் பணம் கொடுத்து தான் கூட்டம் கூட்ட முடியும்.

    * தான் உருவாக்கிய கட்சியை அன்புமணி அபகரிக்க முயற்சி.

    * கட்சி விவகாரத்தில் அன்புமணி கூறுவது அனைத்தும் பொய்தான் என்றார்.

    Next Story
    ×