என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

ஒன்றிணைந்தாலே அ.தி.மு.க. வெற்றி உறுதி- ஓ.பன்னீர்செல்வம்
- நாங்கள் அமித்ஷாவிடம் சென்று தமிழகத்தினுடைய அரசியல் கள நிலவரங்களை தெரிவித்து வந்தோம்.
- ஜே.சி.டி. பிரபாகர் த.வெ.க.வில் இணைந்தாலும் என்னுடன் தொடர்பில் உள்ளார்.
போடி:
தேனி மாவட்டம் போடியில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
அ.தி.மு.க.வில் பிரிந்த அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்பதுதான் அ.தி.மு.க. தொண்டர்களின் எதிர்பார்ப்பு. அனைவரும் ஒருங்கிணைய வேண்டும் என்பது சாத்தியமா என்பதற்கு சாத்தியப்பட வேண்டும் என்பதுதான் எங்கள் நோக்கமே. அதற்காகத்தான் இந்த போராட்டம். இன்று மக்களுடைய குரலாக அது ஒலித்துக் கொண்டிருக்கிறது.
அ.தி.மு.க. ஒருங்கிணைப்பு செய்ய வேண்டும் என்று குரல் கொடுத்த செங்கோட்டையன் தற்போது த.வெ.க.வில் இணைந்து விட்டார். அ.தி.மு.க. ஒருங்கிணைய வேண்டும் என்று முதன் முதலில் குரல் கொடுத்தது நான் தான். தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறி வெகு நாள் ஆகிவிட்டது.
நாங்கள் அமித்ஷாவிடம் சென்று தமிழகத்தினுடைய அரசியல் கள நிலவரங்களை தெரிவித்து வந்தோம். எம்.ஜி.ஆர். இந்த இயக்கத்தை உருவாக்கியபோது தொண்டர்களால் உருவாக்கப்பட்ட கட்சி என்ற அடிப்படையில் அதன் சட்ட விதிமுறைகள் உருவாக்கப்பட்டது.
ஆனால் தற்போது அவைகள் மீறிவிட்டது மீண்டும் எம்.ஜி.ஆர். உடைய இயக்கத்தை நிலை நிறுத்த வேண்டும் என்பதற்காகத்தான் பல சோதனைகளையும் வேதனைகளையும் தாண்டி தற்போது வரை நீதிமன்றங்களில் வழக்கு தொடுத்து போராடி வருகிறோம். கழக சட்ட விதிகளை கேள்விக்குறியாகி விடக்கூடாது என்பதில் முழு மூச்சாக இயங்கி வருகிறோம்.
ஜே.சி.டி. பிரபாகர் த.வெ.க.வில் இணைந்தாலும் என்னுடன் தொடர்பில் உள்ளார். மேலும் பலர் எங்கு சென்றாலும் எங்களுக்கு கவலை இல்லை. எங்களை பொறுத்தவரை அ.தி.மு.க. ஒன்றிணைய வேண்டும் என்பதற்காகத்தான் தொடர்ந்து சட்ட போராட்டம் நடத்தி வருகிறோம். அனைவரும் ஒன்றிணைந்தாலே வெற்றி உறுதி. கட்சி விதிகளை மீட்டெடுக்கும்வரை எங்களது சட்டபோராட்டம் தொடரும் என்றார்.






