என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    தேர்தலுக்காக தீர்மானம் கொண்டு வரும் கட்சி திமுக இல்லை: இ.பி.எஸ்.-க்கு அமைச்சர் ரகுபதி பதில்
    X

    தேர்தலுக்காக தீர்மானம் கொண்டு வரும் கட்சி திமுக இல்லை: இ.பி.எஸ்.-க்கு அமைச்சர் ரகுபதி பதில்

    • தேர்தலை பார்த்து பயப்படும் கட்சியும் திமுக இல்லை.
    • கச்சத்தீவு விவகாரத்தில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஒப்புதல் பெற்றது போன்று எதுவும் தெரியவில்லை.

    தமிழக சட்டசபையில் இன்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கச்சத்தீவு மீட்பு தொடர்பாக அரசினர் தனித் தீர்மானத்தை கொண்டு வந்தார். இந்த தீர்மானம் மீது விவாதம் நடைபெற்று ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

    தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில் அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தேர்தலை கருத்தில் கொண்டு கச்சத்தீவு மீட்பு தீர்மானத்தை திமுக அரசு கொண்டு வந்துள்ளதாக தெரிவித்திருந்தார். இதற்கு அமைச்சர் ரகுபதி பதில் அளித்துள்ளார்.

    இ.பி.எஸ்.க்கு பதில் அளிக்கும் வகையில் அமைச்சர் ரகுபதி கூறியதாவது:-

    * தேர்தலுக்காக தீர்மானம் கொண்டு வரும் கட்சி திமுக இல்லை.

    * தேர்தலை பார்த்து பயப்படும் கட்சியும் திமுக இல்லை.

    * கச்சத்தீவு விவகாரத்தில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஒப்புதல் பெற்றது போன்று எதுவும் தெரியவில்லை.

    * இந்தியா- இலங்கை பிரிக்கப்பட்டபோது கச்சத்தீவு இலங்கைக்கு பிரிக்கப்பட்டது.

    * எங்களை சொல்லும் அதிமுக, அவர்கள் மத்தியில் கூட்டணியில் இருந்தபோது கச்சத்தீவை மீட்டு இருக்கலாம்.

    * கச்சத்தீவு குறித்து திமுக தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தது.

    இவ்வாறு ரகுபதி தெரிவித்தார்.

    Next Story
    ×