என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    கரூர் கூட்டநெரிசல்: வீடியோவில் பேசிய விஜய்க்கு இதயத்தில் காயமோ வலியோ இல்லை - சீமான்
    X

    கரூர் கூட்டநெரிசல்: வீடியோவில் பேசிய விஜய்க்கு இதயத்தில் காயமோ வலியோ இல்லை - சீமான்

    • கரூர் துயரம் குறித்து தவெக தலைவர் விஜய் வெளியிட்ட வீடியோவில் எனக்கு உடன்பாடில்லை.
    • அவரது பேச்சு அந்த இறப்புகளை விட அதிக வலியை தருகிறது.

    கடந்த சனிக்கிழமை கரூரில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜயின் பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர் மற்றும் பலர் காயமடைந்தனர்.

    கூட்டநெரிசல் திட்டமிட்ட சதியால் நடந்தது என கூறி தவெக நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. கரூர் துயரம் குறித்து விளக்கம் அளித்து விஜய் தனது எக்ஸ் பக்கத்தில் 5 நிமிட வீடியோ வெளியிட்டார்.

    இந்நிலையில், 'விஜய் வெளியிட்ட வீடியோவில் உடன்பாடில்லை' என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

    செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், "கரூர் துயரம் குறித்து தவெக தலைவர் விஜய் வெளியிட்ட வீடியோவில் எனக்கு உடன்பாடில்லை. விஜய் பேசியது திரைப்பட வசனம் போல் உள்ளது. இது நல்ல அணுகுமுறை இல்லை. வீடியோவில் பேசிய விஜய்க்கு இதயத்தில் காயமோ வலியோ இல்லை. அதை கேட்கும்போது கஷ்டமாக இருக்கிறது. வீடியோவில் பேசும்போது விஜய் வலியை கடத்தவில்லை. அவரது பேச்சு அந்த இறப்புகளை விட அதிக வலியை தருகிறது.

    கள்ளக்குறிச்சி சம்பவத்துக்கு காரணமானவர், கள்ளக்குறிச்சிக்கு போகவில்லை. கரூர் சம்பவத்துக்கு காரணமானவர், கரூருக்கு போகவில்லை.

    இன்று இந்த இடங்களுக்கு வரும் பாஜகவும், காங்கிரஸும் தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டிற்கு ஏன் வரவில்லை? கொடநாடு கொலை, ஆந்திரா காட்டிற்குள் தமிழர்கள் சுட்டுக்கொன்றதை பற்றியெல்லாம் இவர்களெல்லாம் பேசாதது ஏன்? இந்த அரசியலை எப்படி பார்ப்பது?

    ஏன் கரூரில் மட்டும் என கேட்போர், பிற இடங்களிலும் இத்துயரம் நடக்க வேண்டும் என நினைக்கிறார்களா? விஜய் சென்றதால்தானே அங்கே கூட்டம் கூடியது? எனில் யார் காரணம் அதற்கு?" என்று தெரிவித்தார்.

    Next Story
    ×