என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    மாமல்லபுரம்-புதுச்சேரி இடையே கரையைக் கடந்தது ஃபெஞ்சல் புயல்- லைவ் அப்டேட்ஸ்

    • ஃபெஞ்சல் புயல் கரையை கடக்கும் நேரத்தில் 70 முதல் 90 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • சென்னை உள்பட வடமாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது

    வங்கக்கடலில் உருவான தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஃபெஞ்சல் புயலாக உருவாகி இன்று மதியம் மாமல்லபுரம்- காரைக்காலுக்கு இடையே புதுச்சேரிக்கும், சென்னைக்கும் இடையே கரையை கடக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இந்த நிலையில், ஃபெஞ்சல் புயல் இன்று மணிக்கு 7 கி.மீ. வேகத்தில் நகருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    சென்னையில் இருந்து 190 கி.மீ. தொலைவில் உள்ள ஃபெஞ்சல் புயல் இன்று கரையைக் கடக்கும் போது அதி கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஃபெஞ்சல் புயல் கரையை கடக்கும் நேரத்தில் 70 முதல் 90 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    Live Updates

    • 30 Nov 2024 6:59 AM IST

      ஃ பெங்கல் புயல் இன்று பிற்பகலில் காரைக்கால் மற்றும் மாமல்லபுரம் இடையே கரையை கடக்கிறது. புயல் கரையை கடக்கும்போது மணிக்கு 70 முதல் 90 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்றுடன் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது.

    • 30 Nov 2024 6:59 AM IST

      தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள ஃபெங்கல் புயல் கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 7 கிமீ வேகத்தில் வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வருகிறது.

      தற்போது திருச்சிக்கு 370 கி.மீ வடக்கிலும், நாகப்பட்டினத்திற்கு வடகிழக்கே 210 கி.மீ. தொலைவிலும் புதுச்சேரியில் இருந்து கிழக்கே 180 கி.மீ. தொலைவிலும் சென்னைக்கு தென்கிழக்கே 190 கி.மீ. தொலைவிலும் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வருகிறது.

    • 30 Nov 2024 4:04 AM IST

      தமிழகத்தில் திருவண்ணாமலை, திருவள்ளூர், வேலூர், கடலூர், விழுப்புரம், காஞ்சிபுரம் மற்றும் சென்னை ஆகிய 7 மாவட்டங்களில் உள்ள நீர் நிலைகளில் சிறிய அளவிற்கு வெள்ளம் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும் என மாநில பேரிடர் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

    • 30 Nov 2024 1:31 AM IST

      பெங்கல் புயல் இன்று கரையை கடக்க உள்ள நிலையில், பாதுகாப்பு நடவடிக்கையாக சென்னை மெரினா கடற்கரை சாலை, மறு அறிவிப்பு வரும் வரை தற்காலிகமாக தடுப்புகள் அமைத்து மூடப்பட்டுள்ளது.

    • 30 Nov 2024 12:24 AM IST

      பெங்கல் புயல் கரையை கடக்கும்போது சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர் விழுப்புரம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் 60 கி.மீ. முதல் 90 கி.மீ. வரையிலான வேகத்தில் காற்று வீசக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

    • 29 Nov 2024 11:18 PM IST

      பெங்கல் புயலின் நகரும் வேகம் 15 கி.மீட்டரில் இருந்து 12 கி.மீ ஆக குறைந்துள்ளது. கடந்த 6 மணி நேரத்தில் வடமேற்கு திசையில் மணிக்கு 12 கி.மீ வேகத்தில் புயல் நகர்ந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    • 29 Nov 2024 10:35 PM IST

      டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் நாளை நடைபெற இருந்த தேர்வுகள் அனைத்தும் ஒத்தி வைக்கப்படுகின்றன. தேர்வு தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • 29 Nov 2024 10:24 PM IST

      சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட 16 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    • 29 Nov 2024 9:23 PM IST

      சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைதூரக் கல்வித்தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. புயல் காரணமாக, நாளை காலையும், பிற்பகலிலும் நடைபெற இருந்த தேர்வுகள் டிசம்பர் 14ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

    • 29 Nov 2024 9:17 PM IST

      ஃபெங்கல் புயல் காரணமாக, வண்டலூர் பூங்கா நாளை ஒரு நாள் மட்டும் தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×