என் மலர்
தமிழ்நாடு செய்திகள்
மாமல்லபுரம்-புதுச்சேரி இடையே கரையைக் கடந்தது ஃபெஞ்சல் புயல்- லைவ் அப்டேட்ஸ்
- ஃபெஞ்சல் புயல் கரையை கடக்கும் நேரத்தில் 70 முதல் 90 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- சென்னை உள்பட வடமாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது
வங்கக்கடலில் உருவான தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஃபெஞ்சல் புயலாக உருவாகி இன்று மதியம் மாமல்லபுரம்- காரைக்காலுக்கு இடையே புதுச்சேரிக்கும், சென்னைக்கும் இடையே கரையை கடக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், ஃபெஞ்சல் புயல் இன்று மணிக்கு 7 கி.மீ. வேகத்தில் நகருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் இருந்து 190 கி.மீ. தொலைவில் உள்ள ஃபெஞ்சல் புயல் இன்று கரையைக் கடக்கும் போது அதி கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஃபெஞ்சல் புயல் கரையை கடக்கும் நேரத்தில் 70 முதல் 90 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Live Updates
- 30 Nov 2024 8:07 AM IST
ஃபெஞ்சல் புயல் காரணமாக கல்பாக்கத்தில் உள்ள சட்ராஸ் என்ற மீனவ கிராமத்தில் தற்போது 13 அடி வரை கடல் அலை எழுந்து, கடல் கடுமையான சீற்றத்துடன் காணப்படுகிறது.
- 30 Nov 2024 8:05 AM IST
சென்னை மெரினாவில் கடல்சீற்றத்துடன் காணப்படுவதால் மக்கள் கடற்கரை பக்கம் செல்ல வேண்டாம் என அறிவுறுத்த பட்டுள்ளது.
- 30 Nov 2024 8:04 AM IST
சென்னையில் பலத்த காற்றுடன் மழை பெய்துவரும் நிலையில் வழக்கம்போல் புறநகர் மின்சார ரயில்கள் இயங்கி வருகின்றன.
- 30 Nov 2024 8:03 AM IST
ஃபெங்கல் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இன்று அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
- 30 Nov 2024 8:02 AM IST
ஃபெங்கல் புயல் முன்னெச்சரிக்கையாக தியாகராய நகர் ஜி.என். செட்டி ரோடு மேம்பாலத்தில் கார்கள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
- 30 Nov 2024 7:28 AM IST
சென்னையில் அதிகபட்சமாக கத்திவாக்கத்தில் 7 செ.மீ. மழைப்பதிவு திருவொற்றியூர் - 5 செ.மீ, தண்டையார்பேட்டை - 4.6 செ.மீ., மணலி 4.2 செ.மீ மழைப்பதிவு; சென்னையில் சராசரியாக 3.45 செ.மீ. மழைப்பதிவு
- 30 Nov 2024 7:26 AM IST
சென்னையில் பெய்து வரும் கனமழை காரணமாக சிங்கப்பூர், திருச்சி, மங்களூரு உள்பட பல பகுதிகளில் இருந்து சென்னை வரும் 6 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
- 30 Nov 2024 7:25 AM IST
கனமழை, புயல் காரணமாக தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருவிடைமருதூர், கும்பகோணம் ஆகிய இரண்டு தாலுகாக்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று (30.11.2024) விடுமுறை அறிவிப்பு
- 30 Nov 2024 7:03 AM IST
ஃபெங்கல் புயல் காரணமாக மாமல்லபுரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த காற்று வீசி வருவதால் முன்னெச்சரிக்கையாக அப்பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தம்.
- 30 Nov 2024 7:00 AM IST
ஃபெங்கல் புயல் காரணமாக "மிதமானது முதல் தீவிர மழையை கொடுக்கக்கூடிய மழை மேகங்கள் சென்னை கரையை தற்போது தொடுகின்றன. இதன் காரணமாக வரும் நேரங்களில் தீவிர மழையை எதிர்பார்க்கலாம்" என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
















