என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

திமுக-வை வீட்டுக்கு அனுப்பும் வரை உறங்க மாட்டேன்- முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
- என் மீது நீதிமன்றங்களில் தொடர்ந்து வழக்கு போடப்பட்டது.
- நான் பயந்து விட்டேனா? ஒடுங்கி விட்டேனா?. ஓரம் போய்விட்டேனா?
அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி "என் மீது நீதிமன்றங்களில் தொடர்ந்து வழக்கு போடப்பட்டது. நான் பயந்து விட்டேனா? ஒடுங்கி விட்டேனா?. ஓரம் போய்விட்டேனா? அல்லது சேர்ந்து விட்டேனா?. திமுக-வை வீட்டுக்கு அனுப்பும் வரை நான் ஓய மாட்டேன். உறங்க மட்டேன்.
பிரபாகரனுக்கு ஈடான வீரம் பெற்றவர் எடப்பாடி பழனிசாமி. அதிமுக ஒரு அற்புதமான அணையாத விளக்கு. எடப்பாடி பழனிசாமி இருக்கும் இடத்தில் மதவாதம் இருக்காது. மதவாதம் துளிர்விட்டால் அங்கு எடப்பாடி பழனிசாமி இருக்கமாட்டார்." தெரிவித்துள்ளார்.
Next Story






