

தீபாவளி பண்டிகைக்கு மறுநாளான அக்டோபர் 21ம் தேதி அன்று தமிழ்நாடு அரசு விடுமுறை அறிவித்துள்ளது.
அதன்படி, தமிழகத்தில் அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு வரும் அக்டோபர் 21ம் தேதி விடுமுறை அறிவித்து தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
சொந்த ஊருக்கு சென்று திரும்பும் மாணவர்கள், அவர்களது பெற்றோர்களின் நலம் கருதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அந்த விடுமுறை தினத்தை ஈடு செய்யும் வகையில் 25.10.2025ம் தேதி அன்று பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.