என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு
    X

    பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு

    • மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என எச்சரிக்கை.
    • வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ள நிலையில் விடுமுறை அறிவிப்பு.

    வங்கக்கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. இது 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறும் எனசென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இதனால், அடுத்த 4 தினங்களுக்கு வட தமிழக கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனவும், மேலும், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    கனமழை எதிரொலியால் நாகை மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் உத்தரவிட்டுள்ளார்.

    வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ள நிலையில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×