என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    உதயநிதி முதலமைச்சராக வருவது ஒருபோதும் நடக்காது... இதுதான் தி.மு.க.விற்கு இறுதித்தேர்தல் - இ.பி.எஸ்.
    X

    உதயநிதி முதலமைச்சராக வருவது ஒருபோதும் நடக்காது... இதுதான் தி.மு.க.விற்கு இறுதித்தேர்தல் - இ.பி.எஸ்.

    • 2026 தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி பெருவாரியான இடங்களில் வெற்றி பெறும்.
    • அ.தி.மு.க. ஆட்சியில் கடன் அதிகமாகி விட்டது என தி.மு.க. கூறுவது அனைத்தும் பொய்.

    சேலம் மாவட்டம் ஓமலூரில் மாற்றுக்கட்சியினர் அ.தி.மு.க.வில் இணையும் விழா நடைபெற்றது. அதில் பங்கேற்று பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:

    * தி.மு.க.வை பற்றி மக்கள் நன்றாக தெரிந்து கொண்டார்கள். வரும் தேர்தலில் வெற்றி பெற்று அ.தி.மு.க. ஆட்சியை பிடிக்கும்.

    * 2026 தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி பெருவாரியான இடங்களில் வெற்றி பெறும்.

    * அ.தி.மு.க. ஆட்சியில் கடன் அதிகமாகி விட்டது என தி.மு.க. கூறுவது அனைத்தும் பொய்.

    * மக்களின் வரிப்பணத்தில் பலகோடி ரூபாய் விளம்பரம் செய்யப்படுகிறது.

    * உதயநிதி முதலமைச்சராக வருவது ஒருபோதும் நடக்காது.

    * வரும் சட்டசபை தேர்தல் தான் தி.மு.க.விற்கு இறுதித்தேர்தல், மக்கள் சரியான தண்டனை கொடுப்பார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×