என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    மக்களின் இதயங்களில் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒப்பற்ற ஆளுமை... ஜெயலலிதாவிற்கு இபிஎஸ் புகழாரம்
    X

    மக்களின் இதயங்களில் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒப்பற்ற ஆளுமை... ஜெயலலிதாவிற்கு இபிஎஸ் புகழாரம்

    • அம்மா வழியில் மக்களின் குரலாய் என்றென்றும் ஒலிப்போம்.
    • "அமைதி, வளம், வளர்ச்சி" பொருந்திய தமிழ்நாட்டைக் கட்டமைப்பதே அம்மா அவர்களுக்கு நாம் செலுத்தும் புகழஞ்சலி!

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    மக்களால் மக்களுக்காவே தன்னை அர்ப்பணித்துக் கொண்டு, தன் ஈடு இணையில்லா மக்கள் நலத் திட்டங்களால் தமிழ்நாட்டு மக்களின் இதயங்களில் என்றென்றும் வாழ்ந்துக் கொண்டிருக்கும் ஒப்பற்ற ஆளுமை,

    இந்த இயக்கத்தை, பல்வேறு சோதனைகளையும் கடந்து மக்களுக்காண பாதையில் தொடர்ந்து பயணிக்க

    உயிராய், உணர்வாய், உந்துசக்தியாய்த் திகழும் இதயதெய்வம் புரட்சித்தலைவி "அம்மா" அவர்களை அவர்தம் நினைவு நாளில் போற்றி வணங்குகிறேன்.

    அம்மா வழியில் மக்களின் குரலாய் என்றென்றும் ஒலிப்போம். தீயசக்திகளின் ஆட்சியை விரட்டி, அம்மாவின் ஆட்சியை மீண்டும் அமைத்து, அனைவருக்கும் அனைத்தும் கிடைக்கக் கூடிய "அமைதி, வளம், வளர்ச்சி" பொருந்திய தமிழ்நாட்டைக் கட்டமைப்பதே அம்மா அவர்களுக்கு நாம் செலுத்தும் புகழஞ்சலி! என்று தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×