என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    தமிழகத்தில் மீண்டும் மன்னராட்சி கூடாது- எடப்பாடி பழனிசாமி
    X

    தமிழகத்தில் மீண்டும் மன்னராட்சி கூடாது- எடப்பாடி பழனிசாமி

    • மக்களுக்காக வாழ்ந்து மறைந்த தலைவர்கள் அ.தி.மு.க. தலைவர்கள்.
    • மக்கள் பிரச்சனைகளை தீர்க்கும் கட்சியாக இருப்பது அ.தி.மு.க. மட்டுமே.

    சேலம்:

    சேலம் மாவட்டம் ஆத்தூரில் மாற்றுக்கட்சியினர் 2,025 பேர் அ.தி.மு.க.வில் இணையும் விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சில் கலந்து கொண்ட எடப்பாடி பழனிசாமிக்கு அ.தி.மு.க. நிர்வாகிகள் வேல் வழங்கினர். இதன்பின் நிகழ்ச்சியில் பேசிய எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:-

    * தி.மு.க. கூட்டணி 200 தொகுதிகளில் வெற்றிபெறும் என்ற முதல்வரின் கூற்று பொய்யாகும்.

    * முதலமைச்சரின் எண்ணம் நடக்காது என்பதற்கு இந்த கூட்டமே சாட்சி.

    * அ.தி.மு.க. வலுப்பெற்றுள்ளது, அ.தி.மு.க.வின் செல்வாக்கு உயர்ந்துள்ளது.

    * தமிழகத்தில் மன்னராட்சி மீண்டும் அமைவதற்கு நாம் துணை நிற்க கூடாது.

    * வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் தேர்தலாக 2026 தேர்தலாக இருக்க வேண்டும்.

    * எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் தமிழக மக்களை தங்களது குழந்தைகளாக பார்த்தார்கள்.



    * மக்களுக்காக வாழ்ந்து மறைந்த தலைவர்கள் அ.தி.மு.க. தலைவர்கள்.

    * மக்கள் பிரச்சனைகளை தீர்க்கும் கட்சியாக இருப்பது அ.தி.மு.க. மட்டுமே.

    * அ.தி.மு.க.வில் மட்டும் தான் சாதாரண தொண்டன் கூட உயர்பதவிக்கு வரக்கூடாது.

    * அ.தி.மு.க. என்பது தொண்டர்களுக்கு சொந்தமான கட்சி. இந்த நிலை எந்த கட்சியிலும் இல்லை.

    * 234 தொகுதிகளுக்கும் திட்டங்களை செயல்படுத்திய கட்சி அ.தி.மு.க.

    * அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களை முடக்கியது தி.மு.க.

    * அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்ட கால்நடை பூங்கா திட்டத்தை முடக்கினர்.

    * ஏழைகளுக்காக கொடுக்கப்படும் திட்டத்தில் என்ன அரசியல் காழ்ப்புணர்ச்சி?

    * குடிமராமத்து திட்டத்தை கூட கைவிட்டு விட்டனர்.

    * மக்களுடைய வரிப்பணத்தை தான் மக்களுக்கு கொடுக்கின்றனர்.

    * அ.தி.மு.க. போராடும் என தெரிவித்த பின்னரே மகளிர் உரிமை தொகையை வழங்கினர் என்றார்.

    Next Story
    ×