என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

ஜூன் 1-ந்தேதி மதுரையில் தி.மு.க. பொதுக்குழு கூட்டம்
- அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ். இளங்கோவன் உள்பட மூத்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
- பொதுக்கூட்டத்தை பிரமாண்டமாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னை:
தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெற்று வருகிறது. கூட்டத்துக்கு முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க. ஸ்டாலின் தலைமை தாங்கினார்.
தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன், முதன்மை செயலாளர் கே.என்.நேரு, பொருளாளர் டி.ஆர்.பாலு, துணை பொதுச்செயலாளர்கள் ஐ.பெரியசாமி, அந்தியூர் செல்வராஜ், ஆ.ராசா, கனிமொழி, திருச்சி சிவா.
அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ். இளங்கோவன் உள்பட மூத்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் 76 பேரும் கூட்டத்துக்கு வந்து இருந்தனர். இந்த கூட்டத்தில் பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கும், போன் பிரான்சிஸ் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது. தொடர்ந்து பல்வேறு தீர்மானங்கள் முன்மொழியப்பட்டு வருகின்றன.
இதனை தொடர்ந்து, அடுத்த மாதம் (ஜூன்) 1-ந்தேதி மதுரையில் தி.மு.க. பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சட்டமன்ற தேர்தலுக்கு முன்னதாக நடைபெறும் பொதுக்கூட்டத்தை பிரமாண்டமாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.






