என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

தி.மு.க., த.வெ.க.வை போட்டியாக கருதுகிறது..! விஜயின் கருத்துக்கு அமைச்சர் சிவசங்கர் பதில்
- நீங்கள் கேள்வி கேட்க வேண்டுமெனில் பா.ஜ.க., பீகாரில் என்ன செய்தது என கேள்வி கேட்க வேண்டும்.
- மக்களுக்கான முதல்வராக, மக்களுக்கான தலைவராக ஸ்டாலின் திகழ்கிறார்.
அரியலூர் மாவட்டம், கீழப்பழுவூரில் அமைச்சர் சிவசங்கர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தி.மு.க., த.வெ.க.வை போட்டியாக கருதுகிறது என்ற விஜய் தெரிவித்துள்ளார். யாரையும் நாங்கள் போட்டியாக கருதவில்லை. அனைவரையும் நண்பர்களாக தான் கருதுகிறோம். எல்லோரையும் தாண்டி தான் திராவிட மாடல் அரசின் செயல்பாடுகள், மக்களிடம் சென்று சேர்ந் துள்ளது. மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளது. மக்களுக்கான முதல்வராக, மக்களுக்கான தலைவராக ஸ்டாலின் திகழ்கிறார்.
யார் எதைச் சொன்னாலும், மக்கள் தமிழ்நாடு முதல்வர் பின்னால் அணி திரண்டு நிற்கின்றனர். மகளிர் உரிமைத்தொகை ரூ.5,000 வழங்கியிருப்பது குறித்து முதல்வர் ஏற்கனவே தெளிவாக சொல்லியுள் ளார். சில குறுக்கு மதியாளர்கள் இந்த திட்டத்தை நீதிமன்றம் சென்று தடை வாங்கும் முயற்சியில் ஈடுபட்டதால், அதற்கு இடம் கொடுக்காமல் தேர்தலுக்கு முன்பாகவே உரிமைத் தொகை வழங்கப்பட்டு உள்ளது.
கடந்த 28 மாதங்களாக வழங்கப்பட்ட உரிமைத் தொகை, இப்பொழுது தொடர்ந்து வழங்கப்படவேண்டும் என்ற நோக்கில் முன்கூட்டியே வழங்கப் பட்டுள்ளது. நீங்கள் கேள்வி கேட்க வேண்டுமெனில் பா.ஜ.க., பீகாரில் என்ன செய்தது என கேள்வி கேட்க வேண்டும். பீகாரில் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை தொடங்காமலேயே, தேர்தலின் பொழுது திடீரென 10 மாத தொகையை சேர்த்து வழங்கினார்கள். அதையும் பிரதமரே நேரடியாக சென்று வழங்கினார்.
தமிழ்நாட்டில் 3 மாதத் துக்கான தொகை முடக்கப் படலாம் என்ற தகவலின் அடிப்படையில், முன்கூட் டியே அவர்களுக்கு உரிமைத்துறை வழங்கப்பட்டு உள்ளது. மோடியை தன் மீது சவாரி செய்ய அ.தி.மு.க. அனுமதி அளித்ததன் காரணமாகவே நீட், உதய் மின் திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் தமிழகத்துக்குள் திணிக்கப்பட்டது.
தமிழ்நாட்டில் அ.தி.மு.க. அரசு அமைந்ததும், பிரதமர் மோடி ஆட்சி செய்வார் என்று கூறியதன் மூலம் மத்திய அரசிடம் தமிழ் நாட்டின் கதவை திறந்து விட்டு, அதிகாரத்தை அடகு வைத்ததை முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனே ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துள் ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.






