என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

சுதீஷ் பகிர்ந்த படம்..! பிரேமலதா விஜயகாந்த் விளக்கம்
- ஒரு எம்.ஜி.ஆர், ஒரு ஜெயலலிதா, ஒரு கருணாநிதி, ஒரு கேப்டன்தான்.
- அவர்களுடைய இடத்தை இன்னொருவர் வந்து நிரப்ப முடியாது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவும், தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா ஆகியோர் நிற்பது போன்ற படத்தை எல்.கே. சுதீஷ் (தே.மு.தி.க. பொருளாளர்) பேஸ்புக்கில் பதிவிட்டிருந்தார். இந்த படம் வைரலானது.
இது தெடார்பாக பிரேமலதா விஜயகாந்த் விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பொதுச் செயலாளராக அம்மா ஜெயலலிதா இங்கே ஒரு சிங்கப் பெண்ணாக இருந்தார்கள். அதேபோல் என்னுடைய சகோதரியும் ஒரு கட்சியின் பொதுச் செயலாளராக கட்சியில் முழுயைாக ஈடுபட்டு சிங்க பெண்மணியாக இருக்கிறார் என சுதீஷ் பேசினார்.
சமூக வலைத்தள்தில் ஜெயலலிதா மற்றும் என்னுடைய போட்டோவை எடிட் செய்து யாரோ ஒருவர் வெளியிட்ருக்கிறார். அதை சுதீஷ் தனது பேஸ்புக் பக்கத்தில் போட்டுள்ளார். அது வைரலாகியுள்ளது.
என்னைத் பொறுத்தவரை, நான் ஏற்கனவே சொன்ன மாதிரி ஒரு சூரியன், ஒரு சந்திரன்தான். அதே மாதிரி ஒரு எம்.ஜி.ஆர், ஒரு ஜெயலலிதா, ஒரு கருணாநிதி, ஒரு கேப்டன்தான். அவர்களுடைய இடத்தை இன்னொருவர் வந்து நிரப்ப முடியாது.
அதேபோல் ஒரே பிரேமலதா விஜயகாந்துதான். என்னுடைய இடத்தையும் யாராலும் நிரப்ப முடியாது. கேப்டன் இல்லாத போதிலும், அவர் கொடுத்த பயிற்சி, நம்பிக்கை, தைரியம், அந்த உறுதியின் வழியில் பயணித்துக் கொண்டிருக்கிறோம். இங்கே ஒருவருக்குப் பதில் இன்னொருத்தர் வர முடியாது.
ஜெயலலிதா இரும்பு பெண்மணி. முதல்வராக இருந்தவர். சாதனை செய்தவர். எத்தனையோ சவால்களை சந்தித்தவர்கள்.
என்னிடம் ஒருமுறை அரசியல் ரோல் மாடல் யார் எனக் கேள்வி கேட்டனர். அதற்கு ஜெயலலிதா எனப் பதில் கூறியிருக்கிறேன். சமூக வலைத்தளத்தில் வைரலாகி இருப்பதை தவிர வேறு ஒன்றுமே கிடையாது.
இவ்வாறு பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.






