என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

முதலமைச்சர் ஸ்டாலின் அண்ணாச்சி, வாக்குறுதி என்னாச்சி?- கேள்விகளை அடுக்கிய நயினார் நாகேந்திரன்
- பெட்ரோல் டீசல் விலைகளை குறைப்போம் என்றீர்களே முதலமைச்சர் ஸ்டாலின் அண்ணாச்சி, கொடுத்த வாக்குறுதி என்னாச்சி.
- மீனவ பெண்களுக்கு 2 லட்சம் வீடுகள் கட்டிக்கொடுப்போம் என்றீர்களே முதலமைச்சர் ஸ்டாலின் அண்ணாச்சி. அந்த வாக்குறுதி என்னாச்சி.
தமிழக சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடக்க இருக்கிறது. மக்களுக்கு விரோதமாக தி.மு.க. அரசு செயல்படுகிறது என்று கூறி அவர்களை வீழ்த்தி ஆட்சி பீடத்தில் அமர அ.தி.மு.க. முழுவீச்சில் களமிறங்கியுள்ளது. அதேபோல் அ.தி.மு.க. வுடன் கூட்டணி அமைத்துள்ள பா.ஜ.க.வும் கடந்த முறையை விட, இந்த முறை அதிக இடங்களில் போட்டியிட திட்டமிட்டுள்ளது.
தமிழகத்தில் பா.ஜ.க. அதிக இடங்களில் போட்டியிடவும், அ.தி.மு.க. கூட்டணியை அதிக இடங்களில் வெற்றி அடைய செய்ய வேண்டும் என்பதற்காகவும் உள்துறை மந்திரி அமித் ஷா புதிய வியூகம் அமைத்து செயல்பட்டு வருகிறார்.
இதன் ஒரு பகுதியாக நெல்லை மாவட்டத்தில் பா.ஜ.க. சார்பில் இன்று முதல் பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் மாநாடு நடைபெற்றது. இதில் அமித் ஷா கலந்து கொண்டார்.
இந்த கூட்டத்தில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பேசும்போது முதலமைச்சர் ஸ்டாலின் அண்ணாச்சி, வாக்குறுதி என்னாச்சி? என திமுக கொடுத்து நிறைவேற்றாத வாக்குறுதிகளை குறித்து கேள்வி எழுப்பினார்.
நயினார் நாகேந்திரன் இது தொடர்பாக பேசியதாவது:-
தமிழுக்காக நாங்கள்தான் எல்லாம் செய்தோம் என்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின். நான் கேட்கிறேன். நீங்கள் கொடுத்த வாக்குறுதிகள் எல்லாம் என்னாச்சி. சிலிண்டருக்கு மானியமாக 100 ரூபாய் கொடுப்போம் என்றீர்களே முதலமைச்சர் ஸ்டாலின் அண்ணாச்சி, அந்த வாக்குறுதி என்னாச்சி.
பெட்ரோல் டீசல் விலைகளை குறைப்போம் என்றீர்களே முதலமைச்சர் ஸ்டாலின் அண்ணாச்சி, கொடுத்த வாக்குறுதி என்னாச்சி.
மீனவ பெண்களுக்கு 2 லட்சம் வீடுகள் கட்டிக்கொடுப்போம் என்றீர்களே முதலமைச்சர் ஸ்டாலின் அண்ணாச்சி. அந்த வாக்குறுதி என்னாச்சி.
பட்டதாரி ஆசிரியர்களுக்கு கல்விக்கடன் வழங்குவோம் என்று சொன்னீர்களே முதலமைச்சர் ஸ்டாலின் அண்ணாச்சி, வாக்குறுதி என்னாச்சி.
தூய்மைப் பணியாளர்களை நிரந்தர பணியாளர்களாக ஆக்குவோம் என்றீர்களே ஸ்டாலின் முதல்வர் அண்ணாச்சி, வாக்குறு என்னாச்சி.
அரசு மருத்துவமனைகளில் காலி பணியிடங்களை நிரப்புவோம் என்றீர்களே, ஸ்டாலின் முதல்வர் அண்ணாச்சி வாக்குறுதி என்னாச்சி.
இவ்வாறு நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பினார்.






