என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

சென்னையில் தரையிறங்க வந்த விமானம் மீது மீண்டும் லேசர் லைட் அடிக்கப்பட்டதால் பரபரப்பு
- புனேவில் இருந்து தரையிறங்கிய ஏர் இந்தியா விமானம் மீது லேசர் ஒளி அடிக்கப்பட்டது.
- இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை விமான நிலையத்தில் இன்று காலை தரையிறங்கும் விமானத்தின் மீது லேசர் லைட் அடிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புனேவில் இருந்து தரையிறங்கிய ஏர் இந்தியா விமானம் மீது லேசர் ஒளி அடிக்கப்பட்டது. இது தொடர்பாக விமானிகள் அவசரமாக கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்து விமானத்தை பத்திரமாக தரையிறக்கினர்.
கிண்டி பகுதியில் இருந்து சக்திவாய்ந்த லேசர் ஒளி விமானத்தை நோக்கி பாய்ச்சப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக சென்னை விமான நிலைய போலீசார் பரங்கிமலை, கிண்டி போலீசுக்கு தகவல் அனுப்பி உள்ளனர்
சென்னையில் கடந்த 2 வாரங்களில் விமானங்களின் மீது லேசர் ஒளி அடிக்கப்பட்ட 3வது சம்பவம் இது ஆகும். இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story






